செய்திகள் :

ஈரோடு இடைத்தேர்தல்: ``நிச்சயம் நியாயமாக நடக்காது என்பதால்..'' -எடப்பாடி பழனிசாமி அதிரடி முடிவு!

post image

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல்

ஈரோடு கிழக்குத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் கடந்த டிசம்பர் மாதம் உடல்நலக்குறைவால் உயிரிழந்திருந்தார். அதனால், ஈரோடு கிழக்குத் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அந்த தேர்தலுக்கான தேதி முடிவாகாமலிருந்தது. இந்த நிலையில், கடந்த 7-ம் தேதி டெல்லி சட்டமன்றத் தேர்தலுக்கான தேதியைத் தேர்தல் ஆணையம் வெளியிட்டது. அப்போதே ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் அறிவிப்பையும் தேர்தல் ஆணையம் வெளியிட்டிருந்தது.

வி.சி.சந்திரகுமார்
வி.சி.சந்திரகுமார்

திமுக சார்பில் வி.சி.சந்திரகுமார் போட்டி

ஏற்கெனவே அந்தத் தொகுதியில் போட்டியிட்டது காங்கிரஸ் வேட்பாளர் என்பதால், இந்த முறையும் காங்கிரஸ் வேட்பாளர் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், திடீரென காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, ``முதல்வர் ஸ்டாலின் கேட்டுக்கொண்டதற்கு இணங்க ஈரோடு கிழக்குத் தொகுதியில் காங்கிரஸ் போட்டியிடவில்லை. தி.மு.க-வே ஈரோடு கிழக்கில் போட்டியிடும்" என அறிவித்தார்.

அதைத் தொடர்ந்து, தி.மு.க-வின் கொள்கை பரப்பு இணைச் செயலாளராக இருக்கும் வி.சி.சந்திரகுமார் ஈரோடு கிழக்குத் தொகுதியில் தி.மு.க சார்பில் போட்டியிடுவார் எனத் தி.மு.க தலைமை அறிவித்தது. தி.மு.க-வை எதிர்த்து களத்தில் அ.தி.மு.க நிற்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அ.தி.மு.க தெரிவித்திருக்கிறது.

`தி.மு.க-வின் மிரட்டல், பரிசுப் பொருள்கள்..' - எடப்பாடி

எடப்பாடி தலைமையிலான ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகு வெளியான அறிக்கையில், ``அதிமுக தொடர்ந்து மக்கள் பணிகளில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டு பணியாற்றி வருகிறது. மறைந்த கருணாநிதியின் காலந்தொட்டு, தி.மு.க ஆட்சிக்கு வரும்போதெல்லாம் 'அராஜகம், வன்முறை என்றாலே திமுக, திமுக என்றாலே அராஜகம், வன்முறை' என்று மக்கள் முகம் சுளிக்கும் அளவிற்கு நடந்துகொண்டு வருவதை மக்கள் அனைவரும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். தி.மு.க ஆட்சிக் காலங்களில், தி.மு.க-வினரால் நிகழ்த்தப்பட்ட அராஜக, வன்முறைச் சம்பவங்கள் எண்ணிலடங்காதவை.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

கடந்த முறை நடைபெற்ற ஈரோடு (கிழக்கு) சட்டமன்றத் தொகுதிக்கான இடைத் தேர்தலில், அள்ளி இறைக்கப்பட்ட பணம், மது, கொலுசு, குக்கர், தங்கக் காசு உள்ளிட்ட பரிசுப் பொருள்கள் என, இவை எல்லாவற்றையும் தாண்டி தி.மு.க-வின் மிரட்டல், அப்பாவி மக்களைப் பெருமளவில் அச்சுறுத்தியது. வாக்காளர்களை பட்டியில் அடைத்த அவலமும் நடந்தேறியது. தி.மு.க-வினர் அழைக்கும் இடத்திற்கு வந்து காலை முதல் இரவு வரை உட்கார்ந்து இருக்கவில்லையென்றால், முதியோர் உதவித் தொகையோ, வேறு எந்த அரசு நலத் திட்டங்களோ வழங்கப்படமாட்டாது என்கிற மிரட்டலுக்கு பயந்து, மக்கள் சொந்த மண்ணில் அகதிகளைப் போல நடத்தப்பட்ட விதத்தை நினைத்தாலே நெஞ்சம் பதறுகிறது.

இவ்வாறு, ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி ஜனநாயகத்தை குழிதோண்டிப் புதைத்து, மக்களாட்சியின் மகத்துவத்தை மறந்து, வன்முறையில் ஈடுபடுவது மட்டுமே தி.மு.க-வினரின் வாடிக்கை. நடைபெற உள்ள ஈரோடு (கிழக்கு) சட்டமன்றத் தொகுதிக்கான இடைத் தேர்தலிலும், நிர்வாகத் திறனற்ற விடியா தி.மு.க-வின் ஸ்டாலின் மாடல் அரசின் அமைச்சர்களும், தி.மு.க-வினரும் ஆட்சி அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துவார்கள் என்பதாலும்; பணபலம், படைபலத்துடன் பல்வேறு அராஜகங்கள் மற்றும் வன்முறைகளை கட்டவிழ்த்துவிட்டு, மக்களை சுதந்திரமாக வாக்களிக்க விடமாட்டார்கள் என்பதாலும்; தேர்தல் சுதந்திரமாகவும், நியாயமாகவும் நடைபெறாது என்பதாலும், 5.2.2025 அன்று நடைபெற உள்ள ஈரோடு (கிழக்கு) சட்டமன்றத் தொகுதிக்கான இடைத் தேர்தலை, அ.தி.மு.க புறக்கணிக்கிறது" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Trump: ``சீனா அதிபருடன் போனில் பேசினேன்; நாங்கள் இருவரும் சேர்ந்து...'' -டிரம்ப் சொல்வதென்ன?

அமெரிக்கா மற்றும் சீனாவிற்கு இடையே பல ஆண்டுகளாக பனிப்போர் நடந்துவருகிறது. அமெரிக்க அதிபராக பதவியேற்க இருக்கும் டிரம்ப், முன்னர் பேசுகையில், சீன இறக்குமதி பொருள்களுக்கு கிட்டதட்ட 60 சதவிகித வரி விதிக்க... மேலும் பார்க்க

``ஜல்லிக்கட்டில் சாதிப் பாகுபாடு ஒருபோதும் கிடையாது'' -குற்றச்சாட்டுக்கு மதுரை ஆட்சியர் விளக்கம்

மதுரை மாவட்டத்தில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய ஊர்களில் ஜல்லிக்கட்டு போட்டி பரபரப்பாக நடந்து முடிந்தது. அதோடு பல சர்ச்சைகளும் எழுந்தது. ஜாதிய ரீதியாக தன்னை மாடுபிடிக்க அனுமதிக்கவில்லை எனவ... மேலும் பார்க்க

Doctor Vikatan: பழுத்து, சீழ் கோத்த பருக்கள்... சோப்பும் க்ரீமும் பலன் தருமா?

Doctor Vikatan:என் மகளுக்கு 24 வயதாகிறது. அவளுக்கு இரண்டு கன்னங்களிலும் பருக்கள் இருக்கின்றன. அந்தப் பருக்களில் சீழ் கோத்துக் காணப்படுகின்றன. இந்த மாதிரியான Pus-filled pimples-க்கு என்னதான் தீர்வு? எந... மேலும் பார்க்க

பாம் சரவணன் கைதும் Bahujan Samaj Armstrong கொலை வழக்கின் தொடர்பும் | Decode | Vikatan

பாம் சரவணன் என்ற ரவுடியை காவல் துறை கைது செய்துள்ளது. Armstrong கொலைக்கும் இவரது கைதுக்கும் உள்ள தொடர்பும் பின்னணியும் குறித்து விளக்குகிறது இந்த வீடியோ மேலும் பார்க்க

Israel - Gaza: `நேற்று வரை போர்... இன்று போர் நிறுத்தத்தை அறிவித்த நெதன்யாகு!' - என்ன நடந்தது?

2023-ம் ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கிய இஸ்ரேல் - பாலஸ்தீனப் போர், 'போர் நிறுத்த ஒப்பந்தத்தின்' மூலம் முடிவுக்கு வருவதாக அமெரிக்கா மற்றும் கத்தார் நேற்று முன்தினம் அறிவித்தது. இருந்தாலும், பணைய கைதிகளை ... மேலும் பார்க்க

Road Accident: ``தவறாக சாலை அமைப்பவர்களை கைது செய்ய வேண்டும்'' -நிதின் கட்கரி சொல்வதென்ன?

'குண்டு குழியுமான ரோடுகளை அமைப்பது 'பிணையில்லாத குற்றமாக' கொண்டு வர வேண்டும்' என்று மத்திய சாலை மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி பேசியுள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நிதின் கட்கரி, "உ... மேலும் பார்க்க