செய்திகள் :

"உங்க மகள் சாவதைப் பாருங்க" - மனைவியைத் தூக்கில் தொங்கவிட்டு மாமனாருக்கு வீடியோ காலில் காட்டிய கணவன்

post image

கர்நாடகா மாநிலம் பாகல்கோட் என்ற இடத்திற்கு அருகில் உள்ள பிலாகி என்ற இடத்தைச் சேர்ந்தவர் பாக்யஸ்ரீ(23). இவரது கணவர் பிரவீன். டிரைவராக வேலை செய்து வருகிறார். இதனால் அடிக்கடி வெளியூர்களுக்கு பயணம் செய்வார்.

கணவன், மனைவி இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டதால் பாக்யஸ்ரீ தனது பெற்றோர் வீட்டிற்குச் சென்று வசித்து வந்தார். ஆனால் சமீபத்தில்தான் பிரவீன் தனது மனைவியைச் சமாதானப்படுத்தி வீட்டிற்கு அழைத்து வந்திருந்தார். ஆனாலும் கணவன், மனைவி இடையே சண்டை ஓயவில்லை.

பாக்யஸ்ரீயின் பெற்றோர் வசிக்கும் வீட்டிற்கு அருகில் உள்ள ஒருவருடன் பாக்யஸ்ரீக்குத் திருமணம் தாண்டிய உறவு இருப்பதாக பிரவீன் சந்தேகப்பட்டார்.

பாக்கியஸ்ரீ, பிரவீன்
பாக்கியஸ்ரீ, பிரவீன்

இது தொடர்பாகத்தான் இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டு வந்தது. சம்பவத்தன்றும் இருவருக்கும் இடையே இதே பிரச்னையில் சண்டை ஏற்பட்டது. இதில் பிரவீன் தனது மனைவியை மரக்கட்டையால் அடித்தார். இதில் காயம் அடைந்த பாக்யஸ்ரீயை துப்பட்டாவில் கட்டி மின் விசிறியில் தூக்கில் தொங்கவிட்டார் பிரவீன்.

தூக்கில் பாக்யஸ்ரீ உயிருக்குப் போராடியபோது பிரவீன் வீடியோ கால் மூலம் பாக்யஸ்ரீயின் பெற்றோரைத் தொடர்பு கொண்டார். அவர், ''பாக்யஸ்ரீ உயிருக்குப் போராடுவதைப் பாருங்கள்'' என்று தனது மனைவியின் பெற்றோரிடம் காட்டினார். அவர்கள் தங்களது மகள் தங்களது கண்முன்பாக உயிரிழப்பதைப் பார்த்து எதுவும் செய்ய முடியாமல் கதறி அழுதனர்.

பாக்யஸ்ரீ உயிருக்குப் போராடி இறந்த காட்சிகளை வீடியோ எடுத்து அதனை தனது நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கும் அனுப்பி வைத்தார் பிரவீன்.

இது குறித்து பாக்யஸ்ரீயின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து பிரவீனைக் கைது செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவ இடத்தில் இரும்பு தடி ஒன்று பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

அதோடு பீர் பாட்டில்களும் கிடந்தன. எனவே பாக்யஸ்ரீக்கு பிரவீன் பீர் குடிக்க கொடுத்தாரா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. பிரேதப் பரிசோதனை அறிக்கையில் இது தெரிய வரும் என்று போலீஸார் தெரிவித்தனர். இருவரும் 2020ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். அவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறார்.

சென்னை: சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் அநாகரிகம்; போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் விசாரணை!

சென்னை வேளச்சேரி ஒரண்டியம்மன் கோயில் தெருவில் கணவருடன் இளம்பெண் ஒருவர் நடந்து சென்றார். அப்போது பைக்கில் வந்த ஒருவர், இளம்பெண்ணுக்கு சொல்ல முடியாத அளவுக்குப் பாலியல் தொல்லைக் கொடுத்துவிட்டு தப்பிச் செ... மேலும் பார்க்க

மொட்டை அடித்தால் ரூ.15,000; நூதனமாக ஏமாற்றிய கும்பல்; நம்பி தலைமுடியை இழந்த பெண்கள் - விநோத சம்பவம்!

சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகில் உள்ள புதுகொத்தாம்பாடியைச் சேர்ந்த பெண்கள் சிலருக்கு நேற்று முன்தினம் இரவு புது எண்களில் இருந்து அழைப்பு வந்திருக்கிறது. தாசில்தார் அலுவலகத்தில் இருந்து அழைப்பதாகவும், வ... மேலும் பார்க்க

ஒடிசா டு திருப்பூர்; AC பெட்டியில் வந்த 30 கிலோ கஞ்சா; துப்பாக்கியுடன் 4 பேர் கைதான பின்னணி என்ன?

திருப்பூர் மாவட்டம் சின்னக்கரை சோதனைச்சாவடி பகுதியில் கஞ்சா கடத்திச் செல்வதாக பல்லடம் காவல்நிலைய ஆய்வாளருக்கு நேற்று முன்தினம் இரவு ரகசியத் தகவல் கிடைத்திருக்கிறது. இதன் அடிப்படையில் குழுவாகச் சென்ற க... மேலும் பார்க்க

கடலூர்: காதலிக்க மறுத்த மாணவியைக் கத்தியால் குத்திய கொடூரம்; பயத்தில் இளைஞர் எடுத்த முடிவு

கடலூர் மாவட்டம், சிதம்பரம் சி.முட்லூர் பகுதியைச் சேர்ந்தவர் ஐயப்பன். எலக்ட்ரீசியன் வேலை செய்து வந்த இவர், பக்கத்து கிராமத்தில் ஒரு வீட்டுக்கு ஒயரிங் வேலைக்குச் சென்றிருக்கிறார். அப்போது அந்த வீட்டில் ... மேலும் பார்க்க

திருப்பத்தூர்: விபத்து வழக்கில் காரை விடுவிக்க லஞ்சம்; கையும் களவுமாகப் பிடிபட்ட எஸ்.எஸ்.ஐ கைது

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அருகேயுள்ள மாதனூர் பகுதியைச் சேர்ந்தவர் மஞ்சுநாதன். இவர், கடந்த 19-ம் தேதி தனது காரில் காவலூர் பகுதிக்குச் சென்று கொண்டிருந்தார். அப்போது, காவலூர் பகுதியைச் சேர்ந்த லட்... மேலும் பார்க்க

"கணவன் என்னை விவாகரத்தே செய்தாலும் அந்தப் பையன்தான் வேணும்" - மனைவி பிடிவாதம்; கணவன் விபரீத முடிவு

சண்டிகரைச் சேர்ந்த மோனு என்பவர் 8 ஆண்டுகளாக கோமல் என்ற பெண்ணைக் காதலித்து வந்தார். எட்டு ஆண்டுக்குப் பிறகு இரு குடும்பத்தின் சம்மதத்தின் பேரில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். அவர்களுக்கு ஒரு மகள் ... மேலும் பார்க்க