செய்திகள் :

ஊட்டி: மீட்கப்பட்ட 2 புலி குட்டிகளில் ஒன்று உயிரிழப்பு; மற்றொன்றை சென்னைக்கு அனுப்ப முடிவு

post image

வங்கப் புலிகளின் வாழிடப் போதாமை என்பது நீலகிரி உயிர்க்கோளக் காப்பகத்தில் பெரும் பிரச்னையாக உருவெடுத்திருக்கிறது. வாழிடங்களை இழந்து தவிக்கும் புலிகளால் மனித உயிர்கள் பறிபோகின்றன.

மனித செயல்பாடுகளால் புலிகளும் கடுமையான பாதிப்புகளுக்கு உள்ளாகி வருகின்றன. இந்த நிலையில்தான் ஊட்டி அருகில் உள்ள சோலாடா பகுதியில் இரண்டு புலி குட்டிகள் உடல் மெலிந்த நிலையில் சுற்றித் திரிவதைப் பார்த்த கிராம மக்கள், வனத்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

அந்தப் பகுதியில் கடந்த 4 நாள்களே தேடுதல் பணியில் ஈடுபட்ட வனத்துறையினர் 2 புலி குட்டிகளையும் உயிருடன் மீட்டு சிகிச்சை அளித்து வருகின்றனர்.

மீட்கப்பட்ட புலி குட்டி
மீட்கப்பட்ட புலி குட்டி

இது குறித்து தெரிவித்த நீலகிரி வனக்கோட்ட அலுவலர்கள், "மக்கள் அளித்த தகவலின் அடிப்படையில் அந்தப் பகுதியில் ஆய்வு மேற்கொண்டோம். 2 புலி குட்டிகள் தனியாக இருப்பதை உறுதி செய்தோம். தாய் புலியின் நடமாட்டத்தைக் கண்டறிய அந்தப் பகுதியில் நவீன கேமராக்களைப் பொறுத்தி கண்காணித்தோம்.

ஆனால், தாய் புலியின் நடமாட்டம் தென்படவில்லை. வேறு வழியின்றி இரண்டு குட்டிகளையும் மீட்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. பிறந்து 5 மாதங்களே ஆன அந்தப் புலி குட்டிகளால் தனியாக வேட்டையாட முடியவில்லை. உணவின்றி உடல் மெலிந்து காணப்பட்டது.

சிறந்த கால்நடை மருத்துவர்கள் உதவியுடன் பராமரித்து வந்தோம். ஒரு புலி குட்டி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது. மற்றொன்றை சென்னை வண்டலூரில் உள்ள உயிரியல் பூங்காவில் வைத்து சிகிச்சை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தாய் புலி என்ன ஆனது என்பது குறித்தும் ஆய்வு மேற்கொண்டு வருகிறது" என்றனர்.

முதுமலை: ஒரே வாரத்தில் அடுத்தடுத்து சரிந்த 3 யானைகள்; வனத்துறை தீவிர ஆய்வு; பின்னணி என்ன?

ஆசிய யானைகளை அதிக எண்ணிக்கையில் கொண்டிருக்கும் நீலகிரி உயிர்க்கோளக் காப்பகத்தில் கோடை வெப்பத்தின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தண்ணீர் மற்றும் பசுந்தழைகளைத் தேடி யானைகள் கூட்டமாக இடம்பெய... மேலும் பார்க்க

சென்னை காசிமேடு: மீன்பிடி தடைக்காலம்; படகுகளைப் பராமரிக்கும் மீனவர்கள் | Photo Album

100 ஏக்கர் பரப்பில் ஒரு தற்சார்பு பண்ணை; நெல், மீன், தென்னை, நிலக்கடலை, காய்கறிகள், நாட்டு மாடுகள்.. மேலும் பார்க்க

கோவை: தாயைப் பிரிந்து தவிக்கும் குட்டி யானை; கூட்டத்தோடு சேர்க்க வனத்துறை முயற்சி!

கோவை மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய வனப்பகுதிகளில் காட்டு யானை, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன.குறிப்பாக சிறுமுகை வனப்பகுதியில் அதிக அளவிலான காட்டு யானைகள் உள்ளன. இந்த நிலையில் இன்... மேலும் பார்க்க

"பொருளாதார வளர்ச்சியா? மக்கள் வாழ்வாதாரமா?" - கனிம அகழ்வாராய்ச்சி விதிகளில் அதிரடி விலக்கு|அலசல்

இந்தியாவில் காணப்படும் 24 வகையான முக்கிய கனிமங்களையும், 6 வகையான அணுக் கனிமங்களையும் அகழ்ந்தெடுக்கும் பணிகளைப் பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தாமலே மேற்கொள்ளலாம் என ஒன்றிய சுற்றுச்சூழல் அமை... மேலும் பார்க்க

சஹாரா பாலைவனத்தை வென்ற 54 வயது சென்னைவாசி: ‘மாரத்தான் டெஸ் சேபிள்ஸ்’ சாதனையும் சமூக சேவையும்!

உலகின் மிகக் கடினமான ஓட்டப்பந்தயமாகக் கருதப்படுவது ‘மாரத்தான் டெஸ் சேபிள்ஸ்’ (Marathon des Sables - MDS). வெறும் ஓட்டம் மட்டுமல்ல, சுட்டெரிக்கும் சஹாரா பாலைவனத்தில், மணல் குன்றுகளுக்கு இடையே ஏழு நாட்க... மேலும் பார்க்க