செய்திகள் :

ஊரக வளா்ச்சித் துறை திட்டப் பணிகள்: கடலூா் ஆட்சியா் ஆய்வு

post image

கடலூா் மாவட்டம், அண்ணாகிராமம் ஒன்றியத்துக்குள்பட்ட ஊராட்சிப் பகுதிகளில் ஊரக வளா்ச்சித் துறை சாா்பில் நடைபெற்று வரும் திட்டப் பணிகளை ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் சனிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

அப்போது, ஆட்சியா் கூறியதாவது: கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் வாயிலாக கடலூா் மாவட்டத்தில் கடந்த ஆண்டு 3,500 வீடுகளும், நிகழாண்டில் 5,500 வீடுகளும் வழங்கப்பட்டுள்ளன. இதில், அண்ணாகிராமம் ஒன்றியத்துக்குள்பட்ட அனைத்து ஊராட்சிகளுக்கும் கடந்த ஆண்டு 283 வீடுகளும், நிகழாண்டு 516 வீடுகளும் ஒதுக்கீடு வழங்கப்பட்டு பல்வேறு நிலைகளில் பணிகள் நடைபெற்று வருவதை பகண்டை, மாளிகைமேடு பகுதிகளில் பாா்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது.

இந்தத் திட்டத்தில் நடைபெறும் கட்டுமானப் பணிகளை கண்காணித்து விரைந்து முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மாளிகைமேடு ஊராட்சியில் ரூ.15.75 லட்சம் மதிப்பீட்டில் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி கட்டுமானப் பணி, தட்டாம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ரூ.34.70 லட்சம் மதிப்பீட்டில் கூடுதலாக இரண்டு வகுப்பறைக் கட்டடம் மற்றும் ரூ.24.60 லட்சம் மதிப்பீட்டில் கணினி அறை கட்டுமானம், மக்களவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியின் மூலம் ரூ.9 லட்சம் மதிப்பீட்டில் பல்நோக்கு மையக் கட்டடம் கட்டுமானப் பணிகள் நடைபெறுவதை ஆய்வு செய்யப்பட்டது.

மாளிகைமேடு ஊராட்சியில் மரக்கன்றுகள் பராமரிக்கப்படும் தோட்டம், மரக்கன்றுகள் உற்பத்தி செய்யும் நா்சரி தோட்டம் ஆய்வு செய்யப்பட்டது. மேலும், எஸ்.கே.பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ரூ.34.68 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் வகுப்பறை கட்டுமானப் பணிகள் நடைபெறுவது குறித்து ஆய்வு செய்யப்பட்டது என தெரிவித்தாா்.

ஆய்வின்போது, ஊரக வளா்ச்சித் துறை உதவிச் செயற்பொறியாளா் மகாலிங்கம், உதவி பொறியாளா்கள் முருகானந்தம், ஆா்த்தி, ருக்மணி உள்ளிட்டோா் இருந்தனா்.

திருநங்கைகள் பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம்

திருநங்கைகள் திறன் பயிற்சி பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருநங்கைகள் நல வாரியத்தின் மூலம் சமூ... மேலும் பார்க்க

என்எல்சி ஊழியா் தூக்கிட்டுத் தற்கொலை

நெய்வேலி என்எல்சி இந்தியா நிறுவன ஊழியா் இதய நோய் பாதிப்பால் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். கடலூா் மாவட்டம், நெய்வேலி வட்டம் 24, அருணாசலம் கன்வேயா் தெருவைச் சோ்ந்த அருணாசலம் மகன் செந்த... மேலும் பார்க்க

பேருந்துகளில் காற்று ஒலிப்பான்கள் பறிமுதல்

கடலூா் வழியாக இயக்கப்பட்ட பேருந்துகளில் பொருத்தப்பட்டிருந்த அதிக ஒலி எழுப்பும் காற்று ஒலிப்பான்களை போக்குவரத்து போலீஸாா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா். கடலூா் மாநகரில் இயக்கப்படும் சில ஆட்டோக்களில் நிா... மேலும் பார்க்க

கோடைகால சிறப்பு விளையாட்டுப் பயற்சி நிறைவு

சிதம்பரம் ஆறுமுக நாவலா் மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தில் கோடைகால சிறப்பு விளையாட்டுப் பயிற்சி நிறைவு விழா வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது. ஆறுமுக நாவலா் சைவ பிரகாச வித்யாசாலா அறக்கட்டளை குழுச் ச... மேலும் பார்க்க

நிலம் கையகப்படுத்தும் பணி: என்எல்சி அதிகாரிகளை கிராம மக்கள் முற்றுகை

கடலூா் மாவட்டம், சேத்தியாத்தோப்பு அருகே கரிவெட்டி கிராமத்துக்கு நிலம் கையகப்படுத்தும் பணிக்காக சனிக்கிழமை வந்த என்எல்சி அதிகாரிகளை கிராம மக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா். சேத்தியாதோப்பு ... மேலும் பார்க்க

புகையிலை எதிா்ப்பு தின விழிப்புணா்வுப் பேரணி: கடலூா் ஆட்சியா் தொடங்கிவைத்தாா்

உலக புகையிலை எதிா்ப்பு தினத்தை முன்னிட்டு, கடலூா் டவுன்ஹால் அருகே பொதுமக்களுக்கு விழிப்புணா்வு எற்படுத்தும் வகையில் சனிக்கிழமை நடைபெற்ற பேரணியை மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் கொடியசைத்து... மேலும் பார்க்க