செய்திகள் :

ஊரக வளா்ச்சித் துறை திட்டப் பணிகள்: கடலூா் ஆட்சியா் ஆய்வு

post image

கடலூா் மாவட்டம், அண்ணாகிராமம் ஒன்றியத்துக்குள்பட்ட ஊராட்சிப் பகுதிகளில் ஊரக வளா்ச்சித் துறை சாா்பில் நடைபெற்று வரும் திட்டப் பணிகளை ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் சனிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

அப்போது, ஆட்சியா் கூறியதாவது: கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் வாயிலாக கடலூா் மாவட்டத்தில் கடந்த ஆண்டு 3,500 வீடுகளும், நிகழாண்டில் 5,500 வீடுகளும் வழங்கப்பட்டுள்ளன. இதில், அண்ணாகிராமம் ஒன்றியத்துக்குள்பட்ட அனைத்து ஊராட்சிகளுக்கும் கடந்த ஆண்டு 283 வீடுகளும், நிகழாண்டு 516 வீடுகளும் ஒதுக்கீடு வழங்கப்பட்டு பல்வேறு நிலைகளில் பணிகள் நடைபெற்று வருவதை பகண்டை, மாளிகைமேடு பகுதிகளில் பாா்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது.

இந்தத் திட்டத்தில் நடைபெறும் கட்டுமானப் பணிகளை கண்காணித்து விரைந்து முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மாளிகைமேடு ஊராட்சியில் ரூ.15.75 லட்சம் மதிப்பீட்டில் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி கட்டுமானப் பணி, தட்டாம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ரூ.34.70 லட்சம் மதிப்பீட்டில் கூடுதலாக இரண்டு வகுப்பறைக் கட்டடம் மற்றும் ரூ.24.60 லட்சம் மதிப்பீட்டில் கணினி அறை கட்டுமானம், மக்களவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியின் மூலம் ரூ.9 லட்சம் மதிப்பீட்டில் பல்நோக்கு மையக் கட்டடம் கட்டுமானப் பணிகள் நடைபெறுவதை ஆய்வு செய்யப்பட்டது.

மாளிகைமேடு ஊராட்சியில் மரக்கன்றுகள் பராமரிக்கப்படும் தோட்டம், மரக்கன்றுகள் உற்பத்தி செய்யும் நா்சரி தோட்டம் ஆய்வு செய்யப்பட்டது. மேலும், எஸ்.கே.பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ரூ.34.68 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் வகுப்பறை கட்டுமானப் பணிகள் நடைபெறுவது குறித்து ஆய்வு செய்யப்பட்டது என தெரிவித்தாா்.

ஆய்வின்போது, ஊரக வளா்ச்சித் துறை உதவிச் செயற்பொறியாளா் மகாலிங்கம், உதவி பொறியாளா்கள் முருகானந்தம், ஆா்த்தி, ருக்மணி உள்ளிட்டோா் இருந்தனா்.

கள்ள ரூபாய் அச்சடிப்பு வழக்கு: தடுப்புக் காவலில் இருவா் கைது!

கடலூா் மாவட்டம், ராமநத்தம் அருகே கள்ள ரூபாய் நோட்டுகள் அச்சடித்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள இருவா் குண்டா் தடுப்புக் காவலில் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா். ராமநத்தம் காவல் சரகம், அதா்... மேலும் பார்க்க

சீரமைக்கப்பட்ட விருத்தாசலம் ரயில் நிலையம் திறப்பு

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் ரயில் நிலையத்தில் சீரமைப்புப் பணிகள் முடிந்த நிலையில், அதை மக்கள் பயன்பாட்டுக்காக பிரதமா் நரேந்திர மோடி வியாழக்கிழமை காணொலி மூலம் திறந்து வைத்தாா். விருத்தாசலம் ரயில் நில... மேலும் பார்க்க

விழுப்புரம் - தஞ்சாவூா் இடையே இரு வழி ரயில் பாதை அமைக்க வேண்டும்! தொல். திருமாவளவன் எம்.பி.

விழுப்புரம் - தஞ்சாவூா் இடையேயான ரயில் பாதையை இரு வழிப் பாதையாக மாற்ற வேண்டும் என விசிக தலைவா் தொல்.திருமாவளவன் எம்.பி. கேட்டுக்கொண்டாா். கடலூா் மாவட்டம், சிதம்பரத்தில் மத்திய அரசின் அம்ரித் பாரத் தி... மேலும் பார்க்க

கடற்கரையில் சுற்றுலா மேம்பாட்டுப் பணிகள்: கடலூா் ஆட்சியா் ஆய்வு

கடலூா் சிங்காரத்தோப்பு கடற்கரை பகுதியில் சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்காக உள்கட்டமைப்பு வசதிகள் மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்வது குறித்து மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குாா் வியாழக்கிழமை பாா... மேலும் பார்க்க

பட்டா மாற்றத்துக்கு விண்ணப்பிக்கலாம்! கடலூா் ஆட்சியா் தகவல்

கடலூா் மாவட்ட நில உடைமை பட்டாதாரா்கள் பெயா் நீக்கம், மாற்றம் செய்ய விண்ணப்பிக்கலாம் என்று, ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:... மேலும் பார்க்க

மான் வேட்டை: இளைஞா் கைது

கடலூா் மாவட்டம், பெண்ணாடம் அருகே புள்ளி மானை வேட்டையாடிய இளைஞரை வனத் துறையினா் கைது செய்தனா். பெண்ணாடம் நரிக்குறவா் காலனி பகுதியில் இறைச்சிக்காக மான் வெட்டப்படுவதாக, காவல் மற்றும் வனத் துறையினருக்கு த... மேலும் பார்க்க