செய்திகள் :

"எங்களைப் பற்றி விஜய் எது வேண்டுமானாலும் பேசலாமா? நாங்கள் வெகுண்டெழுந்தால்" - டிடிவி தினகரன் காட்டம்

post image

தேனியில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

அப்போது, ”ஊழல் ஆட்சியிலிருந்து மீட்டெடுத்து தமிழகத்தில் அம்மாவின் ஆட்சியைக் கொண்டு வர வேண்டும் எனப் பிரதமர் மோடி எங்களுக்கு உறுதி அளித்துள்ளார்.

கங்காரு குட்டி போல சுற்றிக்கொண்டு உள்ள ஒருவரை முதலமைச்சர் பட்டம் சூட்ட காத்திருக்கிறது திமுக. பங்காளி சண்டை இல்லாத குடும்பங்கள் இல்லை. எங்கள் வீட்டு குடும்ப விஷயங்களை நான் மனம்விட்டு பேசினேன். தற்போது அம்மாவின் ஆட்சி அமைய ஒன்றிணைந்துள்ளோம்.

2019 நாடாளுமன்றத் தேர்தல், 2021 சட்டமன்றத் தேர்தல்களில் நாங்கள் பிரிந்து நின்று தேர்தலைச் சந்தித்ததால் திமுக வெற்றிபெற்றது நாங்கள் ஒன்றாகப் போட்டியிட்டு இருந்தால் மேலும் 20- 25 தொகுதியில் வெற்றிபெற்று இருப்போம்.

அம்மாவின் தொண்டர்கள் ஓரணியில் திரள வேண்டும் என்றுதான் கூறினேன், தவிர ஒரே கட்சியில் இணைய வேண்டும் எனக் கூறவில்லை.

ஓ.பன்னீர்செல்வம் - டி.டி.வி.தினகரன்
ஓ.பன்னீர்செல்வம் - டி.டி.வி.தினகரன்

கூட்டணியில் இணைவதற்கு ஓ.பன்னீர்செல்வம்தான் நல்ல ஒரு முடிவு எடுக்க வேண்டும். சரியான முடிவு எடுத்து எங்களுடன் வருவார் என்ற நம்பிக்கை உள்ளது.

என்.டி.ஏ கூட்டணியில் மீண்டும் இணைவதற்கு தேனியிலிருந்து நான் அழைப்பு விடுக்கிறேன். அவரது வளர்ச்சியில் எங்களுக்கும் பங்கு உள்ளது. அவர் சென்ற உயரங்களுக்கு நானும் ஒரு காரணமாக இருந்தேன்.

எனது கோரிக்கை ஏற்று முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் ஒ.பன்னீர்செல்வம். யார் பேச்சையோ கேட்டு தர்ம யுத்தம் நடத்தினர். அப்போது மட்டும் அவர் தர்ம யுத்தம் நடத்தாமல் இருந்து இருந்திருந்தால் மீண்டும் முதலமைச்சராக இருந்து இருப்பார்.

டிடிவி தினகரன்
டிடிவி தினகரன்

அம்மாவின் இடத்தில் எங்களுக்கு மோடிதான் இருக்கிறார். தமிழ்நாட்டை மோடி அவர்கள் தத்தெடுத்து இந்தியாவில் தமிழகத்தை முதன்மை மாநிலமாக மாற்ற நாங்கள் துணை நிற்போம்.

நான் தேர்தலில் போட்டியிடவில்லை. எனது உடனிருப்பவர்களை வாய்ப்யிருந்தால் அமைச்சர்களாக ஆக்க வேண்டும் என்பதுதான் எனது ஆசை.

எங்கள் தலைவர் எம்ஜிஆர் படத்தை வைத்து விட்டு எங்களை ஊழல் கட்சி என்கிறார் விஜய். சினிமா வசனம் பேசுகிறார். உங்கள் திரைப்படத்தில் கள்ள டிக்கெட் விற்பனையில் நடக்கும் ஊழல்களைத் தடுத்து நிறுத்துங்கள், முதலில் வீட்டை விட்டு வெளியே வாருங்கள்.

நாங்கள் அமைதியாக இருந்தால் நீங்கள் எது வேண்டுமானாலும் பேசலாமா? நாங்கள் வெகுண்டெழுந்தால் என்ன ஆவது?

டிடிவி தினகரன் - தவெக விஜய்
டிடிவி தினகரன் - தவெக விஜய்

விஜயகாந்த் போல் விஜயும் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்துவார் என்றுதான் கூறினேன், எம்.ஜி.ஆர் போன்று வருவார் என்று நான் எங்கும் சொல்லவில்லை” எனத் தெரிவித்தார்

'96 க்குப் பின் ஒற்றை இலக்க வாக்கு வங்கி மட்டுமே!' - தமிழகத்தில் காங்கிரஸின் பலம்தான் என்ன?

திமுக காங்கிரஸ் இடையே மூன்று மாதங்களுக்கு முன்பாக புகைய தொடங்கிய நெருப்பு இன்னும் அணையவில்லை. 'அமைச்சரவையில் பங்கு கிடையாது' என முதல்வர் ஸ்டாலின் ஸ்ட்ரிக்ட்டாக சொன்ன பிறகும் காங்கிரஸார் விடுவதாக இல்லை... மேலும் பார்க்க

நாடாளுமன்றம்: `இடைநீக்கங்கள், பதில் இல்லா கேள்விகள்' - முடங்குகிறதா ஜனநாயகத்தின் இதயம்?

நாடாளுமன்றம்இந்தியா, உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு மட்டுமல்ல, உலகிலேயே மிக நீண்ட எழுதப்பட்ட அரசியலமைப்பைக் கொண்ட நாடாகவும் திகழ்கிறது. நமது ஜனநாயகத்தின் இதயமாகத் திகழும் நாடாளுமன்றம், மக்களவை மற்றும் ... மேலும் பார்க்க

"2 அரசுகளும் அலைக்கழித்தால் எங்கே போவது?" - நயினார் நாகேந்திரனிடம் குமுறிய அங்கன்வாடி ஊழியர்கள்

காலமுறை ஊதியம், பதவி உயர்வு, காலிப்பணியிடங்களை நிரப்புதல், ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு அங்கன்வாடி ஊழியர்கள் கோவை செஞ்சிலுவை சங்கம் அருகே 10வது நாளாக தொடர் காத்திருப்பு... மேலும் பார்க்க

பாஜக வானதி சீனிவாசன் vs அதிமுக சந்திரசேகர்; கோவை வடக்கு தொகுதி யாருக்கு? தகிக்கும் தேர்தல் களம்!

சட்டமன்ற தேர்தல் அறிவிப்புக்கு முன்னதாகவே கோவை வடக்கு தொகுதியில் உச்சகட்ட பரபரப்பு நிலவி வருகிறது. பாஜக-வின் சிட்டிங் எம்எல்ஏவான வானதி சீனிவாசன், அதிமுகவில் முன்னாள் அமைச்சர் வேலுமணியின் நிழலான சந்திர... மேலும் பார்க்க

"மக்கள் பணியில் பங்கு கேட்டால் அது எப்படி சதியாகும்?"- மீண்டும் எதிர்வினை ஆற்றிய மாணிக்கம் தாகூர்

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் திமுக- காங்கிரஸ் இடையே தொடர்ந்து புகைச்சலாக இருக்கிறது.அதிக சீட்டுகள், ஆட்சி அதிகாரத்தில் பங்கு என காங்கிரஸ் கட்சியினர் குரல் கொடுத்து வருகின்றனர்.இந்தச் ச... மேலும் பார்க்க

இந்தியா முழுவதும் விவசாய மற்றும் தொழிலாளர் சங்கம் போராடுவது ஏன்? 6 புள்ளிகள்|Quick Points

இன்று இந்தியா முழுவதும் தொழிலாளர் சங்கங்களும், விவசாய சங்கங்களும் போராட்டம் நடத்தி வருகின்றன. இது நாடு முழுவதுமே பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது. இந்தப் போராட்டத்திற்கான காரணத்தை 6 புள்ளிகளில் தெரிந்துகொ... மேலும் பார்க்க