செய்திகள் :

எடப்பாடி பழனிசாமியின் ‘குடும்ப ஆதிக்கம்’ குற்றச்சாட்டு - யார் அந்த மூவர்?

post image

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி குடும்ப உறுப்பினர்களின் பேச்சை மட்டுமே கேட்பதாகவும், தனது மகனை கட்சிக்குள் முன்னிறுத்துவதற்கான முயற்சிகள் நடைபெறுவதாகவும் முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் அண்மையில் குற்றம்சாட்டியிருந்தார்.

இதையடுத்து, கட்சிக்குள் செல்வாக்கு செலுத்துவதாக கூறப்படும் குடும்ப உறுப்பினர்கள் யார் யார் என்பது குறித்து எம்.ஜி.ஆர் மாளிகை வட்டாரத்தில் விசாரித்தோம்.

மிதுன் – எடப்பாடி பழனிசாமி
மிதுன் – எடப்பாடி பழனிசாமி

மிதுன் – எடப்பாடி பழனிசாமியின் மகன்

அதிமுகவில் எந்த அதிகாரப்பூர்வ பொறுப்பிலும் இல்லாத மிதுன், கட்சியின் முக்கிய முடிவுகளில் மறைமுக செல்வாக்கு செலுத்துவதாக சில நிர்வாகிகள் கூறுகின்றனர்.

ஆட்சிக் காலத்திலும், எதிர்க்கட்சி காலத்திலும் கட்சி தொடர்பான பல முடிவுகளில் அவரது ஆலோசனைகள் இடம்பெற்றதாக கட்சி வட்டாரங்களில் பேசப்படுகிறது.

சமீபத்தில் அதிமுக உள்கூட்டம் ஒன்றில் மிதுனை கட்சி பொறுப்புக்கு கொண்டு வர வேண்டும் என கோரிக்கை எடப்பாடியிடமே முன்வைக்கப்பட்டதாகவும், அதனை கேட்ட எடப்பாடி பெரியதாக ரியாக்ட் செய்யவில்லை என்றும் கூட தகவல் வெளியானது.

வெங்கடேசன் – எடப்பாடி பழனிசாமியின் மைத்துனர்

எடப்பாடி பழனிசாமியின் மனைவியின் சகோதரரான வெங்கடேசன், கட்சியில் பொதுக்குழு உறுப்பினராக உள்ளார். ஆனால் சேலம் மாவட்ட அரசியலில் குறிப்பிடத்தக்க செல்வாக்கு கொண்டவராகக் கருதப்படுகிறார்.

மாவட்ட நிர்வாகிகளுடன் நெருக்கமாக செயல்பட்டு வருவதாகவும், அதிகாரப்பூர்வ பொறுப்பு இல்லாவிட்டாலும் மாவட்டச் செயலாளர் அளவிலான தாக்கத்தை ஏற்படுத்துவதாகவும் கட்சிக்குள் பேசப்படுகிறது.

வெங்கடேசன்
வெங்கடேசன்

ஏ.டி. சசி பிரபு – குடும்ப உறவினர்

எடப்பாடி பழனிசாமியின் குடும்ப உறவினரான ஏ.டி. சசி பிரபு, தற்போது ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட அம்மா பேரவை செயலாளராக உள்ளார். அவருக்கு கட்சிப் பொறுப்பு வழங்கப்பட்டதைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் இடையிலான கருத்து வேறுபாடு அதிகரித்ததாக கட்சி வட்டாரங்களில் கூறப்படுகிறது. அண்மைக் காலமாக இவரும் கட்சிக்குள் செல்வாக்கை அதிகரித்து வருவதாக நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.

சசி பிரபு
சசி பிரபு

இந்த மூவரைத் தவிர எடப்பாடி பழனிசாமியின் குடும்பத்தைச் சேர்ந்த பலர் கட்சி நடவடிக்கைகளில் ஆர்வத்துடன் செயல்பட்டு வந்தாலும், தற்போது அதிகம் பேசப்படும் பெயர்கள் இந்த மூவர்தான் என அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.!

"'sonஆதன' சிம்மாசனங்களுக்கு சோஃபாக்கள் பற்றி பேசுவதற்கு அருகதை இல்லை!"- உதயநிதிக்கு அருண்ராஜ் பதிலடி

முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசை 'சோஃபா மாடல்' அரசு என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்து வரும் நிலையில், தவெக அமைச்சர் அருண்ராஜ் பதிலடி கொடுத்திருக்கிறார். இது தொடர்பாக அவர் வெள... மேலும் பார்க்க

டெலிகிராம் தடை: ``திருடனைப் பிடிக்காமல் வீட்டைப் பூட்டுவதா?" - சாடும் ராகுல் காந்தி!

சமீபத்தில் நடந்த நீட்-யுஜி (NEET-UG 2026) தேர்வுகளின் வினாத் தாள் கசிந்த விவகாரமும், அதனால் தேர்வு ரத்து செய்யப்பட்ட விவகாரமும் பெரும் விவாதமானது. அதைத் தொடர்ந்து மத்திய அரசு மறுத்தேர்வு ஜூன் 21-ம் தே... மேலும் பார்க்க

"தவெக அரசு இதை செய்துவிட்டால் நான் பொறுப்பில் இருந்து விலகிவிடுகிறேன்.!”- தங்கம் தென்னரசு சவால்

தமிழகத்தின் அனைத்து துறைகளின் நிதிநிலை, கடன் சுமை முந்தைய நிர்வாக செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு, வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என்று பதவியேற்பு விழாவில் முதல்வர் விஜய் அறிவித்திருந்தார். அந... மேலும் பார்க்க

102 நாள்களுக்குப் பிறகு தகனம் செய்யப்பட்ட ஆகாஷ் டெலிசன் உடல்; கதறித் துடித்த பெற்றோர்!

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை, கிருஷ்ணராஜபுரம் காலனியைச் சேர்ந்த ரஜேஷ்கண்ணன் - ஆனந்தி தம்பதியினரின் மகன் ஆகாஷ் டெலிசன் (26), குற்றவழக்கு தொடர்பாக காவல்துறை விசாரணைக்குச் சென்றார்.அதையடுத்து ஆகாஷ் டெலிச... மேலும் பார்க்க

"தயவுசெய்து உங்களைப் பற்றி வரும் செய்திகளைப் படியுங்கள்"- தவெக குறித்து மு.க.ஸ்டாலின்

நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் கலாநிதி வீராசாமியின் மகன் திருமணத்தில் திமுக தலைவர் மு.க ஸ்டாலின், துர்கா ஸ்டாலின், எதிர்க் கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், திமுக எம்.பி கனிமொழி, திமுக எம்எல்ஏ ஓபிஎஸ் உள்ள... மேலும் பார்க்க

கோவை: மாமன்றத்திற்குள் போலீஸை அழைத்த மேயர்; உள்ளே வராத காவல்துறை! - பரபரத்த மாநகராட்சி கூட்டம்

சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு கோவை மாநகராட்சியின் முதல் மாதாந்திர கூட்டம் இன்று மேயர் ரங்கநாயகி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு வந்த கோவை மாநகராட்சி தி.மு.க கவுன்சிலர்கள், முதல்வர் விஜய் படத்துட... மேலும் பார்க்க