செய்திகள் :

'எதிர்க்கட்சியானாலும் ஜெயிப்பேன்.!' - சோக வரலாற்றை `போராடி' மாற்றிய கே.என்.நேரு

post image

தமிழகத்தில் நடைப்பெற்ற சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்றது. அந்தவகையில், திருச்சி மேற்கு தொகுதியில் தி.மு.க சார்பில் போட்டியிட்ட கே.என்.நேரு, த.வெ.க வேட்பாளர் ராமமூர்த்தியிடம் ஆரம்பக்கட்ட சுற்றுகளில் பின்னிலை நிலையிலேயே இருந்தார். இதனால், கே.என்.நேரு தரப்பு அப்செட்டில் ஆழ்ந்தது. இந்நிலையில், 15 - வது சுற்றுக்கு பிறகு முன்னிலை பெற தொடங்கியதும், அவர் பெருமூச்சுவிட்டார். இறுதியில், அவர் வெற்றி பெற்றுள்ளார்.

trichy

கடந்த தேர்தலில் திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளிலும் தி.மு.க மற்றும் கூட்டணி கட்சிகள் வெற்றிவாகை சூடியிருந்தது. இந்நிலையில், இந்த தேர்தலில் இதுவரை கே.என்.நேரு மட்டும் தி.மு.க கூட்டணி சார்பில் நின்றவர்களில் வென்றுள்ளார்.

இந்நிலையில், தேர்தலில் வென்றதோடு மட்டுமல்லாமல் அவருக்கு இருந்த ஒரு சோக தேர்தல் வரலாற்றையும் புறந்தள்ளி வென்றிருக்கிறார். அதாவது, தி.மு.க எதிர்க்கட்சி வரிசைக்கு தள்ளப்படும்போது அதிகமுறை தோற்றவர் என்பதை மாற்றி, இந்தமுறை வென்றிருக்கிறார்.

அதுபற்றி நம்மிடம் பேசும் தி.மு.க-வினர் சிலர்,

"தி.மு.க எதிர்க்கட்சி வரிசைக்கு போகும்போதெல்லாம் கடந்த 1991 - ம் வருட தேர்தலுக்கு பிறகு, கடந்த 2016 - ம் வருட தேர்தலை தவிர்த்து கே.என்.நேரு போட்டியிட்டபோதெல்லாம் தோல்வியையே தழுவியிருக்கிறார். தி.மு.க ஆளுங்கட்சியான போதுதான் வென்றிருக்கிறார்.

கடந்த 1991 - ம் வருட சட்டமன்ற தேர்தலில் அவரது சொந்த தொகுதியான லால்குடி தொகுதியில் தோல்வியைத் தழுவினார். அடுத்து, 2001 - ம் வருடம் அ.தி.மு.க ஆட்சி அமைந்தபோது இதே லால்குடி தொகுதியில் தோல்வியடைந்தார். அதன்பிறகு, 2011 - ம் வருட அ.தி.மு.க ஆட்சியின்போது திருச்சி 2 தொகுதியில் நின்று தோற்றார்.

kn neru

அதே வருடம் நடைபெற்ற இடைத்தேர்தலிலும் அ.தி.மு.க பரஞ்சோதியிடம் தோல்வியைத் தழுவினார். திருச்சி மேற்கு தொகுதியாக அது மாற்றப்பட, கடந்த 2016, 2021 ஆகிய சட்டமன்ற தேர்தல்களில் வென்றார்.

இந்நிலையில், இந்த தேர்தலில் தி.மு.க-வின் தலைமையே தோற்க, தி.மு.க இரண்டாவது அல்லது மூன்றாவது என்று எந்த இடத்துக்கு போக போகிறது என்று தெரியாத நிலையில் வென்றிருக்கிறார்" என்றார்கள்.

அவிநாசி: இ-சேவை மையம் நடத்தும் கணவர்; எல்.முருகனை வீழ்த்தி வாகை சூடிய இல்லத்தரசி! யார் இந்த கமலி?

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தனி தொகுதியில் தி.மு.க சார்பில் போட்டியிட்ட இளம் வேட்பாளர் மருத்துவர் கோகிலா மணி, அ.தி.மு.க கூட்டணி சார்பில் போட்டியிட்ட பா.ஜ.க வேட்பாளரான மத்திய இணை அமைச்சர் எல். முருகன் ... மேலும் பார்க்க

ஈரோட்டில் வாஷ் அவுட்டான திமுக கூட்டணி; அமைச்சர் உட்பட 8 பேரை வீழ்த்திய த.வெ.க!

ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, கோபிச்செட்டிப்பாளையம், மொடக்குறிச்சி, பவானி, பவானிசாகர் தனி, அந்தியூர், பெருந்துறை என மொத்தம் 8 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. ஈரோடு மேற்கு, பவானி, அந்தியூர், கோபிச்செட்டிப்ப... மேலும் பார்க்க

ஒட்டன்சத்திரம்: சோபிக்காத த.மா.கா; சம்பவம் செய்த சக்கரபாணி - 7வது முறை வெற்றி சாத்தியமானது எப்படி?

ஒட்டன்சத்திரம் தொகுதியில் தொடர்ந்து ஆறு முறை வெற்றி பெற்று அமைச்சராக இருந்தார், சக்கரபாணி. தொகுதி முழுவதும் மக்களுக்கான அடிப்படை வசதிகள், சாலை வசதிகள் என எல்லாவற்றையும் செய்து தொகுதியைத் தன் கன்ட்ரோலி... மேலும் பார்க்க

ஓ.பி.எஸ்ஸிற்கு ’கிலி’யை ஏற்படுத்திய த.வெ.க; திக் திக் வாக்கு எண்ணிக்கை; போராடி கரை சேர்ந்த தி.மு.க!

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தி.மு.க -வில் இணைந்து போடிநாயக்கனூர் தொகுதியில் போட்டியிடுகிறார் எனும்போது வெல்வாரா? தோற்பாரா? என்ற எதிர்பார்ப்புகள் எகிறியது. அ.தி.மு.க-வால் இவ்வளவு காலமும் வெற... மேலும் பார்க்க

TVK: சீட் தராத திமுக; பழி தீர்த்த கட்சித்தாவல்; சூலூரை வென்ற தவெக சுகுமாரின் பின்னணி என்ன?

சூலூர் சட்டமன்றத் தொகுதியில் மொத்தம் 3 லட்சத்து 7 ஆயிரத்து 616 வாக்காளர்கள் உள்ள நிலையில்,2 லட்சத்து 71 ஆயிரத்து 567 பேர் வாக்களித்தனர். இதில் 90 ஆயிரத்து 531 வாக்குகள் பெற்ற த.வெ.க. வேட்பாளர் சுகுமார... மேலும் பார்க்க

TVK: 'சென்னைவாசி, சிபி சத்யராஜின் ஆதரவு' - சிங்காநல்லூரை வென்ற ஸ்ரீ கிரி பிரசாத்தின் பின்னணி என்ன?

சிங்காநல்லூர் தொகுதியில் மொத்தம் உள்ள 2 லட்சத்து 69 ஆயிரத்து 941 வாக்காளர்களில், தேர்தலில் 2 லட்சத்து 16 ஆயிரத்து 746 பேர் வாக்களித்தனர். இதில் த.வெ.க. வேட்பாளர் ஸ்ரீ கிரி பிரசாத் 84 ஆயிரத்து 163 வாக்... மேலும் பார்க்க