செய்திகள் :

TVK: சீட் தராத திமுக; பழி தீர்த்த கட்சித்தாவல்; சூலூரை வென்ற தவெக சுகுமாரின் பின்னணி என்ன?

post image

சூலூர் சட்டமன்றத் தொகுதியில் மொத்தம் 3 லட்சத்து 7 ஆயிரத்து 616 வாக்காளர்கள் உள்ள நிலையில், 2 லட்சத்து 71 ஆயிரத்து 567 பேர் வாக்களித்தனர்.

இதில் 90 ஆயிரத்து 531 வாக்குகள் பெற்ற த.வெ.க. வேட்பாளர் சுகுமார் 4,790 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். 85,741 வாக்குகள் பெற்ற அ.தி.மு.க. வேட்பாளர் கந்தசாமி இரண்டாம் இடத்தையும், 83,654 வாக்குகள் பெற்ற தி.மு.க. வேட்பாளர் தளபதி முருகேசன் மூன்றாம் இடத்தையும் பிடித்தனர்.

இந்தத் தொகுதியில் இதுவரை நடைபெற்ற தேர்தல்களில் அ.தி.மு.க, காங்கிரஸ் தலா 2 முறையும், தே.மு.தி.க. ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளன. அ.தி.மு.க. பலம் வாய்ந்த தொகுதிகளில் ஒன்றாகக் கருதப்படும் இந்தத் தொகுதியில், முதல் முறையாகப் போட்டியிட்ட த.வெ.க. வேட்பாளர் சுகுமார் வெற்றி பெற்றுள்ளார்.

கோவை வெள்ளலூர் பகுதியைச் சேர்ந்த சுகுமார் (56), ஐடிஐ படித்துள்ளார். இவர் ரியல் எஸ்டேட் உள்ளிட்ட தொழில்களைச் செய்து வருகிறார். அ.தி.மு.க-வில் இருந்த இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக தி.மு.க-வில் இணைந்தார்.

பின்னர் நகர்ப்புற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க. சார்பில் வெள்ளலூர் பேரூராட்சியில் கவுன்சிலராகப் போட்டியிட வாய்ப்பு கேட்டார். வாய்ப்பு மறுக்கப்பட்டதால் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக, தி.மு.க-வில் இருந்து விலகி த.வெ.க-வில் இணைந்தார். முதல் முறையாகத் தேர்தலில் களம் கண்ட சுகுமார் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வாகியுள்ளார்.

அவிநாசி: இ-சேவை மையம் நடத்தும் கணவர்; எல்.முருகனை வீழ்த்தி வாகை சூடிய இல்லத்தரசி! யார் இந்த கமலி?

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தனி தொகுதியில் தி.மு.க சார்பில் போட்டியிட்ட இளம் வேட்பாளர் மருத்துவர் கோகிலா மணி, அ.தி.மு.க கூட்டணி சார்பில் போட்டியிட்ட பா.ஜ.க வேட்பாளரான மத்திய இணை அமைச்சர் எல். முருகன் ... மேலும் பார்க்க

ஈரோட்டில் வாஷ் அவுட்டான திமுக கூட்டணி; அமைச்சர் உட்பட 8 பேரை வீழ்த்திய த.வெ.க!

ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, கோபிச்செட்டிப்பாளையம், மொடக்குறிச்சி, பவானி, பவானிசாகர் தனி, அந்தியூர், பெருந்துறை என மொத்தம் 8 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. ஈரோடு மேற்கு, பவானி, அந்தியூர், கோபிச்செட்டிப்ப... மேலும் பார்க்க

ஒட்டன்சத்திரம்: சோபிக்காத த.மா.கா; சம்பவம் செய்த சக்கரபாணி - 7வது முறை வெற்றி சாத்தியமானது எப்படி?

ஒட்டன்சத்திரம் தொகுதியில் தொடர்ந்து ஆறு முறை வெற்றி பெற்று அமைச்சராக இருந்தார், சக்கரபாணி. தொகுதி முழுவதும் மக்களுக்கான அடிப்படை வசதிகள், சாலை வசதிகள் என எல்லாவற்றையும் செய்து தொகுதியைத் தன் கன்ட்ரோலி... மேலும் பார்க்க

ஓ.பி.எஸ்ஸிற்கு ’கிலி’யை ஏற்படுத்திய த.வெ.க; திக் திக் வாக்கு எண்ணிக்கை; போராடி கரை சேர்ந்த தி.மு.க!

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தி.மு.க -வில் இணைந்து போடிநாயக்கனூர் தொகுதியில் போட்டியிடுகிறார் எனும்போது வெல்வாரா? தோற்பாரா? என்ற எதிர்பார்ப்புகள் எகிறியது. அ.தி.மு.க-வால் இவ்வளவு காலமும் வெற... மேலும் பார்க்க

TVK: 'சென்னைவாசி, சிபி சத்யராஜின் ஆதரவு' - சிங்காநல்லூரை வென்ற ஸ்ரீ கிரி பிரசாத்தின் பின்னணி என்ன?

சிங்காநல்லூர் தொகுதியில் மொத்தம் உள்ள 2 லட்சத்து 69 ஆயிரத்து 941 வாக்காளர்களில், தேர்தலில் 2 லட்சத்து 16 ஆயிரத்து 746 பேர் வாக்களித்தனர். இதில் த.வெ.க. வேட்பாளர் ஸ்ரீ கிரி பிரசாத் 84 ஆயிரத்து 163 வாக்... மேலும் பார்க்க

ஆண்டிப்பட்டி: மூன்றாவது முறையும் தம்பியை வென்ற அண்ணன்! - காரணம் என்ன?

ஆண்டிப்பட்டி தொகுதி ‘மூன்று முன்னாள் முதல்வர்கள் களம் கண்ட தொகுதி’ என பெயர் பெற்ற நிலையில் தற்போது மூன்று முறை அண்ணன், தம்பி போட்டியிட்ட தொகுதி என புதிய பெயர் கிடைத்திருக்கிறது. திமுக சார்பில் சிட்டிங... மேலும் பார்க்க