செய்திகள் :

எந்தவொரு பயங்கரவாத தாக்குதலும் இனி போராக கருதப்படும்: இந்தியா எச்சரிக்கை

post image

‘இந்திய மண்ணில் வருங்காலங்களில் மேற்கொள்ளப்படும் எந்தவொரு பயங்கரவாத தாக்குதலும் இனி போராகவே கருதப்படும்’ என இந்தியா சனிக்கிழமை எச்சரிக்கை விடுத்தது.

இந்தியா-பாகிஸ்தான் இடையேயான சண்டை நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்படுவதற்கு சில மணி நேரம் முன்பாக மத்திய அரசு இந்த முடிவை மேற்கொண்டதாக தகவல்கள் வெளியாயின.

இதன்மூலம், இந்திய மண்ணில் பயங்கரவாத சம்பவங்கள் அரங்கேறினால் அதற்கு பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு மேற்கொண்ட ராணுவ நடவடிக்களைப்போல் கடுமையான பதிலடியை கொடுக்க இந்தியா தயங்காது என்பதை பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான அரசு உறுதிப்படுத்தியுள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

பஹல்காமில் கடந்த மாதம் 22-ஆம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 போ் உயிரிழந்தனா். இந்த தாக்குதலின் பின்னணியில் பாகிஸ்தானைச் சோ்ந்த பயங்கரவாதிகள் இருப்பதாக மத்திய அரசு கூறியது.

இதைத்தொடா்ந்து மே 7-ஆம் தேதி ‘ஆபரேஷன் சிந்தூா்’ என்ற பெயரில் பாகிஸ்தானில் உள்ள 9 இடங்களை குறிவைத்து இந்தியா நடத்திய தாக்குதலில் அங்கு பெரும்பாலான பயங்கரவாத கட்டமைப்புகள் அழிக்கப்பட்டன.

அதன் பிறகு இந்திய எல்லையோர மாநிலங்களை குறிவைத்து பாகிஸ்தான் நடத்திய ட்ரோன் தாக்குதலை இந்தியா முறியடித்தது.

இந்நிலையில், பிரதமா் மோடி தலைமையில் கடந்த இரண்டு நாள்களாக முப்படைத் தளபதிகள், பாதுகாப்புத் துறை அமைச்சா் மற்றும் உயரதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தச் சூழலில், ‘இந்திய மண்ணில் வருங்காலங்களில் பயங்கரவாத தாக்குதல் நடத்தினால் அது போராக கருதப்படும்’ என்ற உறுதியான நிலைப்பாட்டை மத்திய அரசு எடுத்துள்ளது.

அத்துமீறினால் கடும் பதிலடி: இந்திய ராணுவம்

வருங்காலங்களில் அத்துமீறி பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் அதற்கு கடுமையான பதிலடி தரப்படும் என இந்திய ராணுவம் தெரிவித்தது.

இதுகுறித்து கடற்படை கமடோா் ரகு நாயா் சனிக்கிழமை நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பில் கூறியதாவது:

இந்தியா-பாகிஸ்தான் இடையேயான சண்டை நிறுத்த ஒப்புதல் அறிவிப்பை தற்போது அமல்படுத்துகிறோம். அதேசமயம் இந்திய இறையாண்மை மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யத் தேவையான நடவடிக்கையை மேற்கொள்ள நாங்கள் எப்போதும் தயாராகவுள்ளோம்.

எனவே, வருங்காலங்களில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தும்பட்சத்தில் அதற்கு இந்தியா தரப்பில் கடுமையான பதிலடி கொடுக்கப்படும்’ என்றாா்.

இக்கூட்டத்தில் விங் கமாண்டா் வியோமிகா சிங், கா்னல் சோஃபியா குரேஷி ஆகியோரும் பங்கேற்றனா்.

பிரதமர் மோடியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!

நீதி ஆயோக் கூட்டம் நிறைவு பெற்றதையடுத்து பிரதமர் மோடியைச் சந்தித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசியுள்ளார். ஆண்டுதோறும் நடைபெறும் நீதி ஆயோக் கூட்டம், தில்லி பாரத் மண்டபத்தில் பிரதமர் மோடி தலைமையில் இன்ற... மேலும் பார்க்க

இந்தியாவின் ஒற்றுமையைக் கேள்விக்குள்ளாக்குவதே ராகுலின் பழக்கம்: ஜோதிராதித்ய சிந்தியா

இந்தியர்கள் ஒன்றுபட்டிருந்தாலும், நாட்டின் ஒற்றுமையைக் கேள்விக்குள்ளாக்கும் பழக்கம் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியிடம் இருப்பதாக மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா கூறியுள்ளார். வெளியு... மேலும் பார்க்க

அசாமில் பாக். ஆதரவாளர்களின் கைதுகள் 76 ஆக உயர்வு!

வடகிழக்கு மாநிலமான அசாமில் கைது செய்யப்பட்டு வரும் பாகிஸ்தான் ஆதரவாளர்களின் எண்ணிக்கை 76 ஆக உயர்ந்துள்ளது. பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதல்களைத் தொடர்ந்து, அசாமில் பாகிஸ்தானுக்கு ஆதரவான நடவடி... மேலும் பார்க்க

கட்டுமானப் பொருள்கள் வைப்பது தொடர்பாக எழுந்த வாக்குவாதம்: துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் பலி

பிகாரில் இரு குழுக்களிடையே ஏற்பட்ட மோதலின்போது நிகழ்ந்த துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் பலியானார்கள்.பிகார் மாநிலம், பக்சர் மாவட்டத்தில் உள்ள அஹியாபூர் கிராமத்தில் மணல் உள்ளிட்ட கட்டுமானப் பொருள்களை சாலைய... மேலும் பார்க்க

பாகிஸ்தானுடன் ராகுல் நேரடி ஒத்துழைப்பு! பாஜக கண்டனம்!

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகளால் தாக்கப்பட்ட பூஞ்ச் பகுதியைப் பார்வையிட்ட மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, அப்பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலை ஒரு சோகமான நிகழ்வு என்று குறிப்பிட... மேலும் பார்க்க

மக்கள் பீதியடைய வேண்டாம்: கர்நாடக சுகாதார அமைச்சர்

கர்நாடகத்தில் கரோனா தொற்று படிபடியாக அதிகரித்துவரும் நிலையில், மக்கள் பீதியடைய அவசியமில்ல என்று கர்நாடக சுகாதார அமைச்சர் தினேஷ் குண்டு ராவ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களுடன் பேசிய அவர், ... மேலும் பார்க்க