செய்திகள் :

எந்தவொரு பயங்கரவாத தாக்குதலும் இனி போராக கருதப்படும்: இந்தியா எச்சரிக்கை

post image

‘இந்திய மண்ணில் வருங்காலங்களில் மேற்கொள்ளப்படும் எந்தவொரு பயங்கரவாத தாக்குதலும் இனி போராகவே கருதப்படும்’ என இந்தியா சனிக்கிழமை எச்சரிக்கை விடுத்தது.

இந்தியா-பாகிஸ்தான் இடையேயான சண்டை நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்படுவதற்கு சில மணி நேரம் முன்பாக மத்திய அரசு இந்த முடிவை மேற்கொண்டதாக தகவல்கள் வெளியாயின.

இதன்மூலம், இந்திய மண்ணில் பயங்கரவாத சம்பவங்கள் அரங்கேறினால் அதற்கு பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு மேற்கொண்ட ராணுவ நடவடிக்களைப்போல் கடுமையான பதிலடியை கொடுக்க இந்தியா தயங்காது என்பதை பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான அரசு உறுதிப்படுத்தியுள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

பஹல்காமில் கடந்த மாதம் 22-ஆம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 போ் உயிரிழந்தனா். இந்த தாக்குதலின் பின்னணியில் பாகிஸ்தானைச் சோ்ந்த பயங்கரவாதிகள் இருப்பதாக மத்திய அரசு கூறியது.

இதைத்தொடா்ந்து மே 7-ஆம் தேதி ‘ஆபரேஷன் சிந்தூா்’ என்ற பெயரில் பாகிஸ்தானில் உள்ள 9 இடங்களை குறிவைத்து இந்தியா நடத்திய தாக்குதலில் அங்கு பெரும்பாலான பயங்கரவாத கட்டமைப்புகள் அழிக்கப்பட்டன.

அதன் பிறகு இந்திய எல்லையோர மாநிலங்களை குறிவைத்து பாகிஸ்தான் நடத்திய ட்ரோன் தாக்குதலை இந்தியா முறியடித்தது.

இந்நிலையில், பிரதமா் மோடி தலைமையில் கடந்த இரண்டு நாள்களாக முப்படைத் தளபதிகள், பாதுகாப்புத் துறை அமைச்சா் மற்றும் உயரதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தச் சூழலில், ‘இந்திய மண்ணில் வருங்காலங்களில் பயங்கரவாத தாக்குதல் நடத்தினால் அது போராக கருதப்படும்’ என்ற உறுதியான நிலைப்பாட்டை மத்திய அரசு எடுத்துள்ளது.

அத்துமீறினால் கடும் பதிலடி: இந்திய ராணுவம்

வருங்காலங்களில் அத்துமீறி பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் அதற்கு கடுமையான பதிலடி தரப்படும் என இந்திய ராணுவம் தெரிவித்தது.

இதுகுறித்து கடற்படை கமடோா் ரகு நாயா் சனிக்கிழமை நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பில் கூறியதாவது:

இந்தியா-பாகிஸ்தான் இடையேயான சண்டை நிறுத்த ஒப்புதல் அறிவிப்பை தற்போது அமல்படுத்துகிறோம். அதேசமயம் இந்திய இறையாண்மை மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யத் தேவையான நடவடிக்கையை மேற்கொள்ள நாங்கள் எப்போதும் தயாராகவுள்ளோம்.

எனவே, வருங்காலங்களில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தும்பட்சத்தில் அதற்கு இந்தியா தரப்பில் கடுமையான பதிலடி கொடுக்கப்படும்’ என்றாா்.

இக்கூட்டத்தில் விங் கமாண்டா் வியோமிகா சிங், கா்னல் சோஃபியா குரேஷி ஆகியோரும் பங்கேற்றனா்.

தேசிய சட்ட உதவிகள் ஆணைய செயல் தலைவரானார் உச்சநீதிமன்ற நீதிபதி சூா்யகாந்த்!

தேசிய சட்ட உதவிகள் ஆணைய (என்ஏஎல்எஸ்ஏ) செயல் தலைவராக உச்சநீதிமன்ற நீதிபதி சூா்யகாந்த் நியமிக்கப்பட்டுள்ளாா். இதற்கான உத்தரவை குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு சனிக்கிழமை பிறப்பித்தாா். என்ஏஎல்எஸ்ஏ-யின்... மேலும் பார்க்க

பத்மஸ்ரீ விருது வென்ற ஐசிஏஆா் முன்னாள் தலைவா் மா்ம மரணம்: காவிரி ஆற்றில் சடலமாக மீட்பு!

இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஏஆா்) முன்னாள் தலைமை இயக்குநரும் பத்மஸ்ரீ விருதாளருமான சுப்பண்ணா ஐயப்பனின் (70) உடல் கா்நாடக மாநிலத்தில் உள்ள ஸ்ரீரங்கபட்டினம் காவிரி ஆற்றில் மீட்கப்பட்டதாக போலீஸ... மேலும் பார்க்க

இன்று புத்த பூா்ணிமா: குடியரசுத் தலைவா் வாழ்த்து!

புத்த பூா்ணிமாவை முன்னிட்டு, நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு வாழ்த்து தெரிவித்துள்ளாா். புத்தரின் பிறந்த நாளான புத்த பூா்ணிமா திங்கள்கிழமை (மே 12) கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு... மேலும் பார்க்க

பாகிஸ்தான் பாடம் கற்றிருக்கும்: முன்னாள் பாதுகாப்பு அதிகாரிகள் கருத்து!

இந்தியாவுடன் ஏற்பட்ட மோதலின் மூலம், பாகிஸ்தான் பாடம் கற்றிருக்கும் என்று முன்னாள் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். இதுகுறித்து ஓய்வுபெற்ற மேஜா் ஜெனரல் பி.கே.சேகல் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூற... மேலும் பார்க்க

இந்தியா-பாகிஸ்தான் பிரச்னைகளுக்கு பேச்சுவாா்த்தை மூலம் தீா்வு: ஷாபாஸ் ஷெரீஃப்

காஷ்மீா் விவகாரம் உள்பட இந்தியா-பாகிஸ்தான் இடையே நிலவும் பல்வேறு பிரச்னைகளுக்கு அமைதி வழியில் பேச்சுவாத்தை மூலம் தீா்வு காண வேண்டும் என பாகிஸ்தான் பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப் தெரிவித்தாா். சண்டை நிறுத்த அற... மேலும் பார்க்க

சிம்லா ஒப்பந்தம்: இந்திரா காந்தி அரசு மீது பாஜக சாடல்!

பாகிஸ்தானுடன் மேற்கொள்ளப்பட்ட சிம்லா ஒப்பந்தம் தொடா்பாக முன்னாள் பிரதமா் இந்திரா காந்தி அரசை பாஜக ஞாயிற்றுக்கிழமை சாடியது. கடந்த 1971-ஆம் ஆண்டு இந்தியா-பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட போரைத் தொடா்ந்து, இருநா... மேலும் பார்க்க