செய்திகள் :

"எந்த இடத்தில் இணைந்தனோ அதே இடத்தில் வந்து.!" - பாஜகவிலிருந்து விலகியது குறித்து அண்ணாமலை | Live

post image

தமிழக பாஜக முன்னாள் தலைவராக இருந்த அண்ணாமலைக்கும் அதிமுகவிற்கும் இடையே ஏற்பட்ட கடுமையான கருத்து மோதல்களின் காரணமாக நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலின்போது அவர் பாஜக மாநிலத் தலைவர் பதவியிலிருந்து மாற்றப்பட்டு, அவருக்குப் பதிலாக நயினார் நாகேந்திரன் நியமிக்கப்பட்டார்.

இந்தத் தலைமை மாற்றத்தைத் தொடர்ந்து தமிழக பாஜகவிற்குள் உட்கட்சிப் பூசல்களும், நிர்வாகக் குளறுபடிகளும் அரங்கேறியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த நிலையில் அண்ணாமலை சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடாமல் முழுமையாக விலகிக்கொண்டார்.

அண்ணாமலை
அண்ணாமலை

2021 சட்டமன்றத் தேர்தலில் 4 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்த பாஜக, சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தலில் வெறும் 1 தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்று பெரும் பின்னடைவைச் சந்தித்தது.

இதனிடையே சிபிஎஸ்இ விவகாரத்தில் விமர்சித்து கருத்து வெளியிட, அண்ணாமலை விரைவில் தனிக்கட்சி தொடங்கப்போகிறார் என்ற கருத்துகள் தீவிரமடைந்தன.

இதனைத்தொடர்ந்து அண்ணாமலை டெல்லி சென்று பாஜக மூத்த தலைவர்களை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்நிலையில் இன்று அவரின் ராஜினாமா கடிதத்தை பாஜக தலைமை ஏற்றிருக்கிறது. இதன் மூலம் அண்ணாமலை அதிகாரப்பூர்வமாக பாஜகவில் இருந்து விலகி இருக்கிறார்.

இதனிடையே நண்பகல் 12 மணி அளவில் சமூக வலைதளங்கள் மூலமாக உரையாடவுள்ளதாக அண்ணாமாலை நேற்று அறிவித்திருந்தார். அதன்படி தற்போது பேசி வருகிறார்...

அண்ணாமலை
அண்ணாமலை

அதில் பேசியிருக்கும் அவர், "2020-ல் பாஜகவில் இணைந்தேன். தமிழ்நாட்டில், தமிழக மக்களுக்காக 6 ஆண்டு காலமாக பணியாற்றியதை பாக்கியமாக கருதுகிறேன். எந்த இடத்தில் இணைந்தனோ அதே இடத்தில் வந்து மரியாதையோடு என்னுடைய பாதை வேறு, இலக்குகள் பெரியதாக இருக்கிறது, நிறைய மக்களை இணைத்து செயல்பட வேண்டும்.

புதிய அரசியலை அனைத்தையும் மாற்றக்கூடிய அரசியலை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு பண்பாக சொல்லிவிட்டு அதே இயக்கத்தில் இருந்து வெளியே வந்திருக்கிறேன்" என்று தெரிவித்திருக்கிறார்.

அண்ணாமலை தொடர்ந்து பேசி வருகிறார். இந்த பதிவில் அது தொடர்ந்து அப்டேட் செய்யப்படும்..!

3 லட்சத்தை நெருங்கும் அண்ணாமலையின் 'We The Leaders' : இந்த அமைப்பின் ரூட் என்ன? எதற்கு இது?

'தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை ராஜினாமா' - இந்த 'ஹாட் செய்தி' தமிழ்நாடு, டெல்லி மட்டுமல்ல... இந்தியா முழுவதையுமே கவனிக்க வைத்துள்ளது. 2011-ம் ஐ.பி.எஸ்ஸாக இந்திய சிவில் சர்வீஸில் காலடி எடுத்த... மேலும் பார்க்க

Annamalai: `கர்நாடக சிங்கம் - விவசாயி - பாஜக - தனிக்கட்சி.!' - அண்ணாமலை கடந்து வந்த பாதை! | Timeline

ஐ.பி.எஸ் வேலையை விட்டு விவசாயத்தில் கவனம் செலுத்திய சாதாரண விவசாயி தமிழ்நாட்டு மக்களுக்கு அறிமுகமானவர் அண்ணாமலை. அதைத் தொடர்ந்து அவரின் அரசியல் தொடர்பான கருத்துகள் மூலம் தனக்கென செல்வாக்கை வளர்த்துக்க... மேலும் பார்க்க

``பாஜக-வுடனான நமது பார்வைகள் ஒத்துப்போகவில்லை!" - அண்ணாமலையின் ராஜினாமா கடிதத்தில் இருப்பது என்ன?

பா.ஜ.க-வின் முன்னாள் தலைவர் அண்ணாமலை பா.ஜ.க-வின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து விலகுவதாக பா.ஜ.க தலைமை நிதின் நபிக்கு கடிதம் அளித்திருந்தார். இன்று அவர் ராஜினாமா ஏற்கப்பட்டுள்ளது. அந்தக் கடிதத்த... மேலும் பார்க்க

பிரவீன் சக்கரவர்த்தி பதிவு 'அதிக பிரசங்கித்தனம்' - கண்டனம் தெரிவித்த சிபிஎம் சண்முகம் - காரணம் என்ன?

தமிழகத்தில் காலியான ஒரு மாநிலங்களவை எம்.பி சீட்டை தங்களின் கூட்டணி கட்சியான காங்கிரஸூக்கு கொடுத்திருக்கிறது தவெக. காங்கிரஸ் சார்பில் பிரவீன் சக்ரவர்த்தி எம்.பி தேர்தலுக்கு போட்டியிடுவார் என்று அதிகாரப... மேலும் பார்க்க

‘2006-ல் காங்கிரஸ் தயவுடன் பதவி சுகத்தை அனுபவித்தது யார்?’ – உதயநிதிக்கு காங்கிரஸ் பதிலடி

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில பொதுச் செயலாளர் கணபதி சிவக்குமார் , “காங்கிரஸ் பேரியக்கத்தை துரோகிகள் என்று உதயநிதி சொல்லி இருப்பது தந்தையும், தனையனும் முதல்வர் ஆசை கைகூடவில்லை என்ற ஏக்கத்தின் உ... மேலும் பார்க்க

`இனி கொடுத்தாலும் வேண்டாம்!' - இரண்டே நாளில் அமைச்சர் பதவியை உதறிய முக்கிய முகம்; அப்செட்டில் DKS

கர்நாடகாவில் புதிய அரசு பதவியேற்று இரண்டு நாட்களே ஆன நிலையில், மூத்த காங்கிரஸ் தலைவர் ராமலிங்க ரெட்டி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்திருப்பது முதல்வர் டி.கே.சிவகுமார் அரசுக்கு பெரும் தர்மசங்கடத்தை... மேலும் பார்க்க