``பாஜக-வுடனான நமது பார்வைகள் ஒத்துப்போகவில்லை!" - அண்ணாமலையின் ராஜினாமா கடிதத்தி...
`ஓட்டுக்குப் பணம் கொடுத்ததால் தோற்றோம்' - பொதுவெளியில் போட்டுடைத்த தவெக வேட்பாளர்! - என்ன நடந்தது?
சேலம் மாவட்டம், ஓமலூர் சட்டமன்றத் தொகுதி தவெக வேட்பாளராகப் போட்டியிட்டவர், அதியமான். தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட அ.தி.மு.க வேட்பாளர் மணியிடம் 14,500 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியிருந்தார்.
இந்த நிலையில், ஓமலூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட தீவட்டிப்பட்டியில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் பேசிய அதியமான், ``ஓமலூர் தொகுதிக்கு அருகில் உள்ள சேலம் மேற்கு தொகுதியின் நம்முடைய வேட்பாளர் லட்சுமணன் ஓட்டுக்கு 2 ஆயிரம் ரூபாய் வரை பணம் வழங்கி பெற்றிருக்கிறார்.

ஆனால், பக்கத்து தொகுதியில் எதுவும் நாம் தரவில்லை என மக்கள் அதிருப்தி அடைந்தனர். மாதக்கணக்கில் மக்களிடம் சென்ற சேர்த்த பிரசாரம் அனைத்தும் இவர் கொடுத்த பணத்தால் வீணானது. 6 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வாக்குகள் நமக்கு வராமல் போனதால் தோல்வி ஏற்பட்டது" எனக் குறிப்பிட்டிருக்கிறார். தவெக எம்.எல்.ஏ ஓட்டுக்கு பணம் கொடுத்து தான் வெற்றிபெற்றார் என அக்கட்சியில் தோல்வியைத் தழுவிய வேட்பாளர் ஒருவர் பொதுவெளியில் பேசியிருப்பது, பல்வேறு விவாதங்களை எழுப்பி வருகிறது.













