செய்திகள் :

"தற்போதைய ஆட்சி நீடிக்காது; காரணங்களைப் பொதுவெளியில் சொல்ல முடியாது"- டி.ஆர்.பாலு கூறியதென்ன?

post image

கலைஞரின் 103-வது பிறந்தநாள் விழா நேற்று (ஜூன்.4) அம்பத்தூரில் நடைபெற்றது.

இதில் உதயநிதி ஸ்டாலின், அ.ராசா, டி.ஆர்.பாலு ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

இதில் கலந்துகொண்டு பேசிய டி.ஆர் பாலு, " தளபதியால் (ஸ்டாலின்) இன்று சட்டமன்றத்திற்குள் செல்ல முடியவில்லை.

ஸ்டாலின்
ஸ்டாலின்

மாற்றம் நிகழும் நேரத்தில் மிகப்பெரிய வெற்றி நம்மை வந்து சேரும். கவலைப்பட வேண்டாம் 69 ஆண்டுகள் இந்த இயக்கத்தில் பணியாற்றியவன் என்ற முறையில் சொல்கிறேன் நம்முடைய நண்பர்கள் கலங்காமல் இருக்க வேண்டும்.

தேர்தலுக்கு முன்பு எல்லோரும் மகிழ்ச்சியோடு இருந்தீர்கள், இன்று நீங்கள் சோகத்தில் இருக்கிறீர்கள். அதற்கு அவசியமே கிடையாது. அப்படிப்பட்ட நிலை உங்களுக்கு தேவையில்லை.

நம்மை ஆளுவதற்கு, வழிநடத்துவதற்கு நம் தளபதி இருந்துகொண்டிருக்கிறார். அவரது தலைமையில் போரிடுவதற்கும், எதிரிகளை சாய்ப்பதற்கும் ஒவ்வொருவரும் தயாராக இருக்க வேண்டும். தொடர்ந்து பணியாற்றுங்கள்.

டி.ஆர்.பாலு
டி.ஆர்.பாலு

விரைவில் இந்த நிலை மாறும். தற்போதைய ஆட்சி நீடிக்காது. அதற்கான வாய்ப்புகள் நிறைய இருக்கிறது. காரணங்களைப் பொதுவெளியில் சொல்ல முடியாது. தனியாக வந்து கேளுங்கள்" என்று பேசியிருக்கிறார்.

`ஓட்டுக்குப் பணம் கொடுத்ததால் தோற்றோம்' - பொதுவெளியில் போட்டுடைத்த தவெக வேட்பாளர்! - என்ன நடந்தது?

சேலம் மாவட்டம், ஓமலூர் சட்டமன்றத் தொகுதி தவெக வேட்பாளராகப் போட்டியிட்டவர், அதியமான். தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட அ.தி.மு.க வேட்பாளர் மணியிடம் 14,500 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியிருந்த... மேலும் பார்க்க

``மக்களை ஏமாற்றுவதற்கான RSS-BJP அமைப்பின் Plan B தயாராகிறதா?”- மாணிக்கம் தாக்கூர் சொல்வது என்ன?

தமிழக பா.ஜ.க-வின் தலைவராக இருந்து, பின் அரசியலில் முக்கியப் புள்ளியாக மாறியவர் அண்ணாமலை. இவர் தற்போது பா.ஜ.க-வின் அடிப்படை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். அதை தலைமையும் ஏற்றுக்கொண்டது. ரா... மேலும் பார்க்க

`'ஆறு மாதம் சும்மா இருப்பதாகக் கூறினீர்களே' என்று முதல்வர் புலம்புகிறார்"- உதயநிதி ஸ்டாலின்

சென்னை சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதியில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவரும், அத்தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான உத... மேலும் பார்க்க

அண்ணாமலை: `ராஜினாமாவை ஏற்ற பாஜக தலைமை!' - வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு

தமிழ்நாடு முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை புதிய கட்சி தொடங்க இருப்பதாகத் தகவல்கள் வெளியாகின. இதனைத்தொடர்ந்து அண்ணாமலை டெல்லி சென்று பாஜக தலைவர்களை நேரில் சென்று ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் தனது ராஜி... மேலும் பார்க்க

``அமைச்சர் ரீல்ஸ் போடுவதில் என்ன தவறு? இப்போதே விமர்சிக்கக் கூடாது" - எம்.பி கார்த்தி சிதம்பரம்

தமிழ்நாட்டின் மாநிலங்களவை உறுப்பினர் வேட்பாளராக காங்கிரஸின் பிரவீன் சக்ரவர்த்தி அறிவிக்கப்பட்டிருக்கிறார். இது தொடர்பாக காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரத்திடம் கேள்வி எழுப்பப்பட்டது. இது தொடர்பாக பதி... மேலும் பார்க்க

'கேரள மாநில கடன் ரூ.5.07 லட்சம் கோடி; ஓய்வூதிய வயதை உயர்த்த வேண்டும்'- வெள்ளை அறிக்கையில் பரிந்துரை!

கேரள மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைந்ததைத் தொடர்ந்து பல்வேறு மாற்றங்களும், நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுவருகிறது. இந்த நிலையில் நிதித்துறையைக் கவனிக்கும் முதலமைச்சர் வி.டி.சதீசன் நேற்று சட்டமன்றத்தில்... மேலும் பார்க்க