`AI-யே அடுத்தகட்ட AI-யை உருவாக்குகிறது!' `Pause' கேட்கும் ஆந்த்ரோபிக்! - ஏற்குமா...
"எந்த இடத்தில் இணைந்தனோ அதே இடத்தில் வந்து.!" - பாஜகவிலிருந்து விலகியது குறித்து அண்ணாமலை | Live
தமிழக பாஜக முன்னாள் தலைவராக இருந்த அண்ணாமலைக்கும் அதிமுகவிற்கும் இடையே ஏற்பட்ட கடுமையான கருத்து மோதல்களின் காரணமாக நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலின்போது அவர் பாஜக மாநிலத் தலைவர் பதவியிலிருந்து மாற்றப்பட்டு, அவருக்குப் பதிலாக நயினார் நாகேந்திரன் நியமிக்கப்பட்டார்.
இந்தத் தலைமை மாற்றத்தைத் தொடர்ந்து தமிழக பாஜகவிற்குள் உட்கட்சிப் பூசல்களும், நிர்வாகக் குளறுபடிகளும் அரங்கேறியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த நிலையில் அண்ணாமலை சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடாமல் முழுமையாக விலகிக்கொண்டார்.

2021 சட்டமன்றத் தேர்தலில் 4 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்த பாஜக, சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தலில் வெறும் 1 தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்று பெரும் பின்னடைவைச் சந்தித்தது.
இதனிடையே சிபிஎஸ்இ விவகாரத்தில் விமர்சித்து கருத்து வெளியிட, அண்ணாமலை விரைவில் தனிக்கட்சி தொடங்கப்போகிறார் என்ற கருத்துகள் தீவிரமடைந்தன.
இதனைத்தொடர்ந்து அண்ணாமலை டெல்லி சென்று பாஜக மூத்த தலைவர்களை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்நிலையில் இன்று அவரின் ராஜினாமா கடிதத்தை பாஜக தலைமை ஏற்றிருக்கிறது. இதன் மூலம் அண்ணாமலை அதிகாரப்பூர்வமாக பாஜகவில் இருந்து விலகி இருக்கிறார்.
இதனிடையே நண்பகல் 12 மணி அளவில் சமூக வலைதளங்கள் மூலமாக உரையாடவுள்ளதாக அண்ணாமாலை நேற்று அறிவித்திருந்தார். அதன்படி தற்போது பேசி வருகிறார்...
அதில் பேசியிருக்கும் அவர், "2020-ல் பாஜகவில் இணைந்தேன். தமிழ்நாட்டில், தமிழக மக்களுக்காக 6 ஆண்டு காலமாக பணியாற்றியதை பாக்கியமாக கருதுகிறேன். எந்த இடத்தில் இணைந்தனோ அதே இடத்தில் வந்து மரியாதையோடு என்னுடைய பாதை வேறு, இலக்குகள் பெரியதாக இருக்கிறது, நிறைய மக்களை இணைத்து செயல்பட வேண்டும்.
புதிய அரசியலை அனைத்தையும் மாற்றக்கூடிய அரசியலை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு பண்பாக சொல்லிவிட்டு அதே இயக்கத்தில் இருந்து வெளியே வந்திருக்கிறேன்" என்று தெரிவித்திருக்கிறார்.
அண்ணாமலை தொடர்ந்து பேசி வருகிறார். இந்த பதிவில் அது தொடர்ந்து அப்டேட் செய்யப்படும்..!












