செய்திகள் :

"என்கிட்ட காட்டாமலே எரிச்சுட்டாங்க" – கோவை சிறுமியின் தாய் பரபரப்பு புகார்

post image

கோவை சூலூர் அருகே வீட்டிற்கு முன்பாக விளையாடிக் கொண்டிருந்த 10 வயது சிறுமி கடத்தி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக கார்த்தி, மோகன் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் கொலை செய்யப்பட்ட மகளின் உடலைத் தன்னிடம் காட்டாமல் எரித்து விட்டதாக கணவர் மீது சிறுமியின் தாய் குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக சிறுமியின் தாய் கோவையில் உள்ள உறவினர் வீட்டில் நேற்று செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது, “எனது குழந்தையின் மரணத்தில் உள்ள உண்மைகளைக் கண்டறிய எதிர்காலத்தில் உடலைத் தோண்டி எடுத்து பரிசோதிக்க வேண்டிய தேவை வரலாம் என்பதால், உடலைப் புதைத்திருக்க வேண்டும்.

ஆனால், உடற்கூராய்விற்குப் பிறகு மகளின் உடலை என்னிடம் காட்டவில்லை. முதலமைச்சரிடம் இருந்து முறையான நீதி மற்றும் குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனை பற்றிய உறுதி கிடைக்கும்வரை உடலை வாங்கமாட்டோம் என்பதில் உறுதியாக இருந்தோம்.

ஆனால் போலீசார் மற்றும் அதிகாரிகள் குழந்தையின் தந்தையை மட்டும் தனியாக அழைத்து சென்று அவரிடம் கையெழுத்து வாங்கி உடலை அவசர அவசரமாக எடுத்து சென்று எரித்து விட்டனர்.

கார்த்தி, மோகன்
கார்த்தி, மோகன்

தாயின் மதுப்பழக்கம் மற்றும் கவனக்குறைவு தான் குழந்தையின் மரணத்திற்குக் காரணம் என்று பரப்பப்படும் தகவல் முற்றிலும் பொய். நீதி கேட்டு போராடியதால் என் மீது பழிபோட்டு திசை திருப்ப பார்க்கின்றனர். 

பல ஆண்டுகளுக்கு முன்பு கணவன், மனைவி இடையே ஏற்பட்ட குடும்பப் பிரச்னையை இப்போது எனக்கு எதிராக திசை திருப்புகிறார்கள். கைது செய்யப்பட்ட கார்த்தியின் இரண்டாவது மனைவி எனக்கூறப்படும் பெண்ணுக்கும் இதில் தொடர்பு இருக்கிறது.

அவர் குறித்தும் விசாரணை நடத்த வேண்டும். குழந்தையின் மரணத்திற்குக் காரணமானவர்கள் மீது கடுமையான தண்டனை தர வேண்டும்” என்றார்.

மைசூரு டு கோவை: பூண்டு லோடில் பதுக்கி கொண்டு வரப்பட்ட 440 கிலோ குட்கா மூட்டைகள் - பிடிபட்டது எப்படி?

தமிழ்நாட்டில் தடை விதிக்கப்பட்டுள்ள குட்கா, பான் மசாலா பொருள்கள் அண்டை மாநிலமான கர்நாடகாவில் எந்தவித தடையும் இல்லாமல் விற்பனை செய்யப்படுகின்றன. கர்நாடகாவில் இருந்து கிலோ கணக்கில் குட்கா பொருள்களை பதுக... மேலும் பார்க்க

திருத்தணி: சிறுவன் கொலை; 4 மாதங்களுக்கு பிறகு உண்மையைக் கூறிய அம்மா - தம்பதி சிக்கிய பின்னணி

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி எம்.ஜி.ஆர் நகரைச் சேர்ந்தவர் பாலமுருகன். இவர் திருத்தணி அருகே உள்ள முருகம்பட்டு என்ற இடத்தில் கோழி பண்ணை ஒன்றை நடத்தி வருகிறார். இந்தப் பண்ணையில் வெண்ணிலா என்பவர் வேலை ச... மேலும் பார்க்க

தந்தையின் வீட்டைக் காலி செய்ய கோர்ட் உத்தரவு; கோபத்தில் 82 வயது தந்தையைக் குத்திக்கொன்ற மகன்

மகாராஷ்டிரா மாநிலம் சத்ரபதி சாம்பாஜி நகரில் வசித்தவர் ஜாபர் பட்டேல்(82). ஒய்வுபெற்ற அரசு ஊழியரான ஜாபர் பட்டேலை அவரது மகன் அப்துல் ரஹ்மான் அடிக்கடி வீட்டை விட்டு வெளியேறும்படி கூறி அடித்து உதைத்து திட்... மேலும் பார்க்க

`சல்மான் கானுடன் பழகுபவர்களுக்கு எச்சரிக்கை!' - ஜிம் உரிமையாளரை சுட்டுக்கொன்ற பிஷ்னோய் கேங்க்

டெல்லி, பஞ்சாப், ஹரியானா போன்ற மாநிலங்களில் பிஷ்னோய் கூட்டத்தினர் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் லாரன்ஸ் பிஷ்னோய் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்... மேலும் பார்க்க

ராணிப்பேட்டை: பைக்கில் மோதிய சரக்கு வாகனம்; தாத்தா, பேரப்பிள்ளைகள் பலியான சோகம்

ராணிப்பேட்டை மாவட்டம், காவேரிப்பாக்கம் அடுத்துள்ள ஓச்சேரி பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்தவர் வேலு (வயது 60). இவர், அதே பகுதியில் டெய்லர் வேலை செய்து வந்தார். இவரின் பேரப்பிள்ளைகள் அஜய் (9), குணஸ்ரீ... மேலும் பார்க்க

மும்பை: அழகிப்போட்டியில் பங்கேற்ற பெண்ணிடம் ரூ.11 கோடி மதிப்பிலான கஞ்சா; விமான நிலையத்தில் கைது

மும்பையில் உள்ள பிரபல தனியார் வங்கியில் மக்கள் தொடர்பு அதிகாரியாக இருப்பவர் ஹன்சா சன்னி. இவர் கடந்த ஆண்டு அழகிப்போட்டியில் கலந்து கொண்டு இரண்டாவது இடம் வந்தார். அவர் பாங்காக் சென்றுவிட்டு மும்பைக்குத்... மேலும் பார்க்க