செய்திகள் :

`என் மனதில் என்றும் நீங்கா இடம் பிடித்திருக்கும் கல்லுப்பட்டி ஆலமர மேடை' - நெகிழ்ந்த தங்கம் தென்னரசு

post image

``என் மனதில் என்றும் நீங்காத இடத்தைப் பிடித்திருக்கும் மேடை இந்தக் கல்லுப்பட்டி ஆலமர மேடைதான்" - தந்தை தங்கப்பாண்டியன் பிரசாரத்தைத் தொடங்கிய ஆலமர மேடையில் தனயன் தங்கம் தென்னரசு உணர்ச்சி பூர்வமான பிரசாரம்.

விருதுநகர் மாவட்டம், திருச்சுழி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட எஸ்.கல்லுப்பட்டியில் திமுக வேட்பாளர் தங்கம் தென்னரசு இன்று தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார். தனது தந்தை தங்கப்பாண்டியன் தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கும் பாரம்பரிய இடமான ஆலமர மேடையிலேயே அவர் பிரசாரத்தைத் மேற்கொண்டார்.

இந்த பிரசார கூட்டத்தில் பேசிய தங்கம் தென்னரசு, ``எத்தனையோ பறவைகளுக்கு இருப்பிடமாகவும், கிராம மக்களுக்கு நிழலிடமாகவும் இருக்கும் இந்த ஆலமரம் எனக்கும் எப்போதும் ஒரு புகலிடமாகவே இருந்து வருகிறது. இந்த மேடை எனக்குப் புதிதல்ல. எத்தனையோ முறை இங்கு நின்று உங்களுடன் பேசியிருக்கிறேன், உரையாடியிருக்கிறேன். எஸ்‌. கல்லுப்பட்டிக்கு நான் வெளியூர்க்காரனல்ல, இந்த ஊர்க்காரனாகவே என்னை நீங்கள் எப்போதும் பார்க்கிறீர்கள்.

என் அரசியல் பயணத்தில் இந்தியா முழுவதும், வெளிநாடுகள் வரை சென்று உரையாற்றியிருந்தாலும், என் மனதில் என்றும் நீங்காத இடத்தைப் பிடித்திருக்கும் மேடை இந்தக் கல்லுப்பட்டி ஆலமர மேடைதான். ஏனெனில் இது என் தந்தை மிகவும் நேசித்த இடமாகும்.

நான் நிதி அமைச்சராகவோ, பள்ளிக்கல்வித் துறை அமைச்சராகவோ சட்டமன்றத்தில் உரையாற்றும் வாய்ப்பு கிடைத்தாலும், உங்களின் அழைப்புக்கு எப்போதும் ஓடிவரும் உங்கள் வீட்டுப் பிள்ளையாகவே நான் இருக்கிறேன்.

சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது எஸ்‌. கல்லுப்பட்டியில் என்னால் முடிந்த அளவுக்கு பல திட்டங்களைச் செய்துள்ளேன். நான் பள்ளிக்கல்வித் துறை அமைச்சராக இருந்தபோது உருவாக்கப்பட்ட இந்தப் பள்ளி இன்று காரியாபட்டி சுற்றுவட்டாரத்திலேயே சிறந்த பள்ளியாகத் திகழ்கிறது. திராவிட முன்னேற்றக் கழகம் கிராமங்களில் கல்வி மற்றும் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதில் எப்போதும் தனிக் கவனம் செலுத்தி வருகிறது.

கலையரங்கங்கள், சமுதாயக் கூடங்கள், பஞ்சாயத்து அலுவலகங்கள் என பல்வேறு அரசு வசதிகள் கொண்ட கிராமமாக கல்லுப்பட்டி உள்ளது. கட்சி பாகுபாடின்றி, இது நம் கிராமம் என்ற முறையில் நான் எப்போதும் பணியாற்றி வந்துள்ளேன். எனவே உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து, மீண்டும் மு.க.ஸ்டாலினை முதலமைச்சராக அமர்த்துங்கள். மகளிர் மேம்பாட்டுக்காக அவர் அறிவித்துள்ள பல்வேறு திட்டங்கள் உங்களைச் சென்றடைய வழிவகை செய்யுங்கள்" என்று தெரிவித்தார்.

'முதல்வர் கொடுத்த ராஜ்ய சபா எம்.பி சீட்டை பெற மறுத்தேன்...' - அதிர்ச்சியூட்டிய திருமாவளவன்

'தி.மு.க-வுடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையின்போது ஒரு ராஜ்ய சபா சீட் தருவதாக முதல்வர் ஸ்டாலின் சொன்னார், ஆனால் நான் பெற மறுத்துவிட்டேன்' என திருமா பேசியிருப்பது வி.சி.க-வினர் மத்தியில் அதிர்ச்சியை... மேலும் பார்க்க

'நோ' Money, 'நோ' UPI: இனி Fastag தான் நெடுஞ்சாலைகளில் கட்டாயம்; 10-ம் தேதிக்கு மேல் இதை மீறினால்?

நெடுஞ்சாலைகளில் டோல் கேட்கள் டிஜிட்டல் மயமாகி பல ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால், இன்னும் பலரிடம் ஃபாஸ்ட் டேக் இருப்பதில்லை. அதனால், அவர்கள் டோல் கேட்டுகளில் பணமாகவும், யு.பி.ஐ-யிலும் பேமென்ட் செய்து வருகின... மேலும் பார்க்க

வங்கதேச எல்லையில் தொடரும் ஊடுருவல்; பாம்பு, முதலைகளைப் பயன்படுத்தப்போகும் எல்லைப் பாதுகாப்புப் படை

பங்களாதேஷில் இருந்து அடிக்கடி ஏராளமானோர் இந்தியாவிற்குள் ஊடுருவி வருகின்றனர். அவர்களைக் கட்டுப்படுத்த மத்திய அரசு எல்லைப் பாதுகாப்புப் படையினரைப் பணியில் ஈடுபடுத்தியுள்ளது. ஊடுருவல்காரர்கள் பிரச்னை மே... மேலும் பார்க்க

இனி இந்தியாவில் தங்க 'நகைகளை' இறக்குமதி செய்ய கடும் கட்டுப்பாடு! - விவரம் என்ன?

கடந்த ஏப்ரல் 1-ம் தேதி முதல், தங்க நகைகளின் இறக்குமதியில் கடும் கட்டுப்பாட்டை விதித்துள்ளது மத்திய அரசின் வெளிநாட்டு வர்த்தக பொது இயக்குநரகம்.2010-ம் ஆண்டில் இருந்து இந்தியா 10 ASEAN நாடுகளுடன் பொருள்... மேலும் பார்க்க

''என்னுடைய நிலைப்பாட்டைத் தள்ளி வைக்கிறேன்; காட்டுமன்னார்கோவில் தொகுதியில் ஜோதிமணி போட்டி!': திருமா!

சட்டமன்ற தேர்தலில் போட்டியிடப் போகும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர்களை கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவித்திருந்தார் அக்கட்சியின் தலைவர் திருமாவளவன். திமுக கூட்டணியிலிருந்து விசிக-விற்கு 8... மேலும் பார்க்க

Form 16-ன் பெயர் மட்டுமல்ல; அதன் 'நடைமுறையும்' மாறுகிறது - என்ன அது?

ஒவ்வொரு ஜூன் மாதமும் நிறுவனங்களில் வேலை பார்க்கும் சம்பளதாரர்கள் ஒவ்வொருவருக்கும் இமெயில்களில் ஃபார்ம் 16 எட்டிப்பார்க்கும். இந்த ஃபார்ம் 16 வருவதற்குப் பின்னால், பெரிய நடைமுறை உள்ளது. அதாவது ஒவ்வொரு ... மேலும் பார்க்க