ஒரு படம் ஹிட் ஆக BGM முக்கியமா? - ஹைப் மெஷின் ஆக மாறும் இசையமைப்பாளர்கள்!
'ஆடுகளம்' சீரியலில் இருந்து வெளியேறுகிறார் டெல்னா டேவிஸ் - காரணம் இதுவா?
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'ஆடுகளம்' தொடரிலிருந்து வெளியேறுகிறார் நடிகை டெல்னா டேவிஸ்.
சீனியர் நடிகர்கள் காத்தாடி ராமமூர்த்தி, நடிகை சச்சு ஆகியோருடன் நடிகை காயத்ரி ஜெயராம், டெல்னா டேவிஸ் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடிக்க சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது 'ஆடுகளம்' சீரியல்.
நடிகர் டெல்லி கணேஷ் இந்த சீரியலில் நடிக்க கமிட் ஆகி சில தினங்கள் ஷூட்டிங்கிலும் கலந்து கொண்ட நிலையில் இறந்து விட, அவருக்குப் பதில்தான் காத்தாடி ராமமூர்த்தி நடித்து வருகிறார்.
ஆரம்பத்தில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வந்த நிலையில் சில தினங்களுக்கு முன் மதிய நேர ஸ்லாட்டுக்கு மாற்றினார்கள்.
அப்போதிருந்தே சீரியலின் ஹீரோ, ஹீரோயினான டெல்னா டேவிஸ், முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து வரும் காயத்ரி ஜெயராமன் ஆகியோர் கடும் அதிருப்தியில் இருப்பதாகச் செய்திகள் வெளியாகின.
இது குறித்து விகடன் தளத்திலும் செய்தி வெளியிட்டிருந்தோம்.
'பிரைம் டைம்' எனச் சொல்லிவிட்டு இப்போது மதிய நேரத்துக்கு மாத்தினா எப்படி' என்பதே இவர்களின் கேள்வியாக இருந்தது.
ஆனாலும் சேனல் மற்றும் தயாரிப்பு தரப்பிலிருந்து அதிருப்தியை வெளிப்படுத்திய நடிகர் நடிகைகளிடம் பேசி சமாதானம் செய்ததாக கூறப்பட்டது.

இந்தச் சூழலில் தற்போது கிடைத்திருக்கும் தகவல் என்னவெனில் தொடரிலிருந்து நடிகை டெல்னா டேவிஸ் வெளியேறுகிறார் என்பதுதான்.
சீரியலில் சத்யா என்கிற கேரக்டரில் நடித்து வரும் டெல்னா சேனல் மற்றும் தயாரிப்புத் தரப்பிடம் வெளியேறுவது தொடர்பாக தனது விருப்பத்தை உறுதியாகத் தெரிவித்து விட்டாராம்.
சேனல் அவருடன் பேசிப் பார்த்தும் அவர் கன்வின்ஸ் ஆகவில்லை என்கிறார்கள். இந்த மாத ஷெட்யூலை முடித்துக் கொடுத்து விட்டோ அல்லது அடுத்த மாதத்துடனோ வெளியேறவிருக்கிறாராம்.
யூனிட்டைச் சேர்ந்த சிலரிடம் பேச்சுக்கொடுத்த போது,
'இப்ப நடிக்க வர்ற ஆர்ட்டிஸ்டுகள் பிரைம் டைம், பிரைம் டைம் அல்லாத சீரியல்கள்னு பார்த்து அதுக்கேத்தபடி முக்கியத்துவம் கொடுத்தே நடிக்க வர்றாங்க. டெல்னாவும் சீரியலின் நேரம் மாத்தப்பட்டதுல ரொம்பவே அப்செட்ல இருந்தாங்க. அதோட தொடர்ச்சியாகத்தான் சீரியலில் இருந்து வெளியேறி இருக்காங்கனு தோணுது' என்றார்கள் அவர்கள்.
டெல்னா வெளியேறிய பிறகே அவருக்குப் பதில் வேறு யாராவது கமிட் ஆவார்களா அல்லது சத்யா என்கிற அந்தக் கேரக்டர் முடிக்கப்பட்டு விடுமா என்பது குறித்து முடிவெடுக்கவிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.


















