திருச்சி திமுக மாநாடு: சுட சுட பிரியாணி பார்சல்கள்; பரபரக்கும் பணிகள் - கிட்சன் ...
`என் முடி ரொம்ப பிடிக்கும் தான்; ஆனால்.!' - திருமண நெருக்கடியிலிருந்து தப்பிக்க இளம்பெண் செய்த செயல்
பெண்களுக்கு 25 வயதாகிவிட்டால், திருமணம் செய்து வைக்க குடும்பத்தினர் வேலைகளை தொடங்கிவிடுவர். இன்னும் படிக்க வேண்டும் என்று சொன்னால் திருமணம் செய்து கொண்ட பிறகு படிக்கலாம் என்று குடும்பத்தில் கூறிவிடுவர். சில பெண்கள் மட்டும் இந்த திருமண நெருக்கடியில் இருந்து தப்பித்து 30 வயது வரை வந்துவிடுகின்றனர்.
இது போன்ற திருமண நெருக்கடியில் இருந்து தன்னை பாதுகாத்துக்கொள்ள இளம்பெண் ஒருவர் செய்த காரியம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருக்கிறது. பெண்கள் என்றாலே முடிதான் அவர்களுக்கு அழகு. ஆனால் இந்த பெண் தனது முடியை தியாகம் செய்து தனது திருமணத்தை தடுத்து நிறுத்தி இருக்கிறார்.
குடும்பத்தினர் தன்னைத் திருமணத்திற்கு வற்புறுத்தியதால், அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் காஜோல் என்ற பெண் தனது தலையை மொட்டையடித்து அந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அப்பெண் தனது பதிவில், `எனக்குத் தலைமுடி மிகவும் பிடிக்கும் என்றாலும், திருமணத்திற்காகக் கொடுக்கப்பட்ட அழுத்தத்தைத் தாங்க முடியாமல், என் வாழ்க்கையைத் என் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர இந்த அதிரடி முடிவை எடுத்ததாக' அவர் கூறியுள்ளார்.
மேலும், ``ஆண்கள் எடுக்கும் முடிவுகளைக் காட்டிலும், பெண்கள் தங்களின் தோற்றத்தை மாற்றிக்கொள்ள எடுக்கும் முடிவுகளைச் சமூகம் ஏன் இவ்வளவு உற்று நோக்குகிறது?. மக்கள் என்னை முறைத்துப் பார்ப்பதற்கு நான் என்ன தவறு செய்தேன்?" என்று அவர் ஆதங்கப்பட்டுள்ளார்.
``ஒருமுறை வாழ்க்கை உங்கள் கையை விட்டுப் போய்விட்டால், உங்களைப் பற்றி விசாரிக்க யாரும் இருக்க மாட்டார்கள். அதனால் உங்கள் இலக்கை நோக்கி முன்னேறுங்கள், அதற்காக எதைச் செய்ய வேண்டுமோ அதைச் செய்யுங்கள்.
அனுதாபத்தைத் தேடுவதல்ல தனது நோக்கம். மாறாக, இதேபோன்ற அழுத்தத்தை எதிர்கொள்ளும் பெண்களை தமக்காக நிற்கவும், தங்கள் சொந்த அபிலாஷைகளில் கவனம் செலுத்தவும் ஊக்குவிக்க விரும்புவதாக' அவர் கூறினார்.
இந்த வீடியோவை பார்த்த பலரும், "உங்கள் சுதந்திரம் முடியை விட மேலானது", "உங்கள் தைரியத்தைப் பார்த்துப் பெருமைப்படுகிறோம்" என அந்தப் பெண்ணின் துணிச்சலை பாராட்டி வருகின்றனர்.
ஒரு பயனர், "பெண்கள் தங்களுக்காகத் தாங்களே எழுந்து நிற்பது எனக்கு மிகவும் பிடிக்கும், தைரியமாக இரு பெண்ணே" என்று தெரிவித்துள்ளார். மற்றொருவர், "உன்னை நினைத்துப் பெருமைப்படுகிறேன்... நீ நினைத்த வாழ்க்கையை வாழ்," என்று அவரது கனவுகளைத் தொடர ஊக்கமளித்துள்ளார்.
பலர் இந்த தனிப்பட்ட முடிவின் பின்னாலுள்ள தைரியத்தைக் குறிப்பிட்டு, "உங்கள் தைரியத்தைப் பார்த்துப் பெருமைப்படுகிறேன்" என்றும், "நீங்கள் செய்தது சரிதான், முடியை விட நமது சுதந்திரம் அதிக மதிப்புடையது" என்றும் பதிவிட்டுள்ளனர். "இந்தத் துணிச்சலான செயலுக்குப் பாராட்டுக்கள்" மற்றும் "உன்னைப் பெருமையாக நினைக்கிறேன் சகோதரி" போன்ற வாழ்த்துகளும் அவருக்குக் குவிந்த வண்ணம் உள்ளன.


















