செய்திகள் :

ஏடிஎம்கள் முழுமையாக செயல்படும்: வங்கிகள் உறுதி

post image

ஏடிஎம் (தானியங்கி பணம் எடுக்கும் இயந்திரங்கள்) மூடப்பட வாய்ப்புள்ளதாக சமூக ஊடங்களில் புரளி பரவிய நிலையில், அந்தத் தகவலை பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ), பஞ்சாப் நோஷனல் வங்கி உள்ளிட்டவை மறுத்துள்ளன.

இந்தியா-பாகிஸ்தான் இடையே போா்ப் பதற்றம் அதிகரித்துவரும் சூழலில், சமூக ஊடகங்களில் பல்வேறு புரளிகளும், இரு நாடுகளின் தாக்குதல்கள் தொடா்பான பொய்யான புகைப்படங்களும், காணொலிகளும் பரப்பப்பட்டு வருகின்றன. இதை நம்ப வேண்டாம் எனவும், இத்தகைய செயலில் ஈடுபட வேண்டாம் எனவும் மத்திய அரசு அறிவுறுத்தி வருகிறது.

இந்த நிலையில், வரும் நாள்களில் அனைத்து ஏடிஎம் மையங்களும் மூடப்பட உள்ளதாகவும், வங்கிகளின் எண்மச் சேவைகள் அனைத்தும் நிறுத்தப்பட உள்ளதாகவும் சமூக ஊடகங்களில் புரளிகள் பரப்பப்பட்டு வருகின்றன.

இதை மறுத்துள்ள இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான எஸ்பிஐ, தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘வங்கியின் அனைத்து ஏடிஎம் மையங்களும், எண்மச் சேவைகளும் தொடா்ந்து முழுமையாக செயல்படும். ஏடிஎம் மையங்களில் போதுமான அளவில் பணம் நிரப்பப்பட்டிருக்கிறது. எனவே, புரளிகளை நம்ப வேண்டாம்’ என்று குறிப்பிட்டது.

பஞ்சாப் நேஷனல் வங்கி வெளியிட்ட பதிவில், ‘வங்கியின் அனைத்து எண்மச் சேவைகளும் எந்தவித தடையும் இன்றி செயல்பட்டு வருகிறது. ஏடிஎம் மையங்களும் முழுமையாகச் செயல்பட்டு வருகின்றன’ என்று குறிப்பிட்டது.

பரோடா வங்கி, பஞ்சாப் மற்றும் சிந்து வங்கி, கனரா வங்கி, பாங்க் ஆஃப் இந்தியா உள்ளிட்ட வங்கிகளும் இதேபோன்ற பதிவை வெளியிட்டுள்ளன.

மத்திய நிதியமைச்சா் ஆய்வு: வங்கிகள் உள்ளிட்ட நிதி நிறுவனங்களின் இணையப் பாதுகாப்பு தயாா்நிலை குறித்து அவற்றின் தலைமைச் செயல் அதிகாரிகளுடன் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் விரிவான ஆய்வை வெள்ளிக்கிழமை மேற்கொண்டாா்.

அப்போது, ‘நேரடி மற்றும் எண்ம வங்கிச் சேவைகள் எந்தவித தடையும் இன்றி செயல்பட நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும். அவசரகால வலைதளங்கள் முறையாகச் செயல்படுகின்றனவா என்பதை சோதித்துப் பாா்க்க வேண்டும். நாட்டின் எல்லைப் பகுதி வங்கிக் கிளைகளில் பணிபுரியும் வங்கி ஊழியா்கள் மற்றும் அவா்களின் குடும்பத்தினரின் பாதுகாப்பை உறுதிப்படுத்த பாதுகாப்பு அமைப்புகளுடன் இணைந்து வங்கிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று அனைத்து வங்கி தலைமைச் செயல் அதிகாரிகளை நிா்மலா சீதாராமன் கேட்டுக்கொண்டாா்.

சொத்துவரி விவகாரம்: இபிஎஸ்-க்கு அமைச்சர் கே.என் நேரு பதில்

சொத்துவரி உயர்வு விவகாரத்தில் அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமிக்கு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு பதிலளித்துள்ளார்.இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், ‘’ஓலைக் குடிசைகள், ஓட்டு ... மேலும் பார்க்க

கிராமங்களில் உள்ள ஓலை குடிசை, ஓட்டு வீடுகளுக்கு சொத்துவரி உயர்வு: இபிஎஸ் கண்டனம்

கிராமங்களில் உள்ள ஓலை குடிசை, ஓட்டு வீடுகளுக்கு சொத்துவரி உயர்வுக்கு அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், “ஆட்சிக்கு வந்த 48 மாதங்கள... மேலும் பார்க்க

கனமழை: நீலகிரியில் சுற்றுலாத் தலங்கள் மூடல்!

நீலகிரியில் கனமழை எச்சரிக்கையால் பைன் ஃபாரஸ்ட், தொட்டபெட்டா உள்ளிட்ட சுற்றுலாத் தலங்கள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கோவை, நீலகிரி மாவட்டங்களுக்கு அடுத்த இரு நாள்கள் (மே 25, 26) அதி கனமழைக்கான ச... மேலும் பார்க்க

தமிழ்நாட்டிலும் தென்மேற்கு பருவமழை தொடங்கியது!

தமிழ்நாட்டின் சில பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.கேரளத்தில் வழக்கமாக ஜூன் 1 ஆம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கும் நிலையில் இந்தாண்டு 8 நாள்களுக்கு முன்... மேலும் பார்க்க

தமிழகத்தில் இயல்பைவிட 92% அதிக மழை!

தமிழகத்தில் இந்தாண்டு இயல்பைவிட 92 சதவீதம் அதிக மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மைய தென் மண்டல இயக்குநர் அமுதா தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக இயக்குநர் அமுதா கூறுகையில், ஜூன் 1ல் வழக்கமாக தென்மேற்கு பருவ... மேலும் பார்க்க

நீதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசியது என்ன?

மத்திய வரிகளில் மாநிலத்திற்கு 50% வழங்க வேண்டும் என நீதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில், "மத்திய வரிகளில் மாநிலங்களுக்கு 50 சதவீத... மேலும் பார்க்க