செய்திகள் :

"ஏற்கனவே நிறைய அனுபவித்துவிட்டேன்" ராசியில்லை என ஒதுக்கிய 13-ம் நம்பர் காரை கேட்டு வாங்கிய அமைச்சர்!

post image

எம்

கேரள மாநில முதல்வராக வி.டி.சதீசன் பதவியேற்ற பின்னர் அமைச்சர்களின் இலாகாக்கள் ஒதுக்கீடு, அவர்களுக்கான பங்களா மற்ரும் கார் ஆகியவை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. கடந்த சி.பி.எம் அமைச்சரவையில் வேளாண் துறை அமைச்சராக இருந்த பி. பிரசாத் 13 ஆம் எண் காரைப் பயன்படுத்தியிருந்தார். ஆனால், அதற்கு முந்தைய காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் 13-ம் எண் கார் ராசி இல்லை எனக்கூறி அமைச்சர்கள் யாரும் அந்த காரை பயன்படுத்தாமல் புறக்கணித்தனர். அதுபோன்றே இந்த முறை காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைந்ததும் 13-ம் நம்பர் காரை ஏற்றுக்கொள்ள அமைச்சர்கள் யாரும் முன்வராமல் இருந்தனர். இந்த நிலையில் காங்கிரஸ் கூட்டணியில் உள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியைச் சேர்ந்த உள்ளாட்சித்துறை அமைச்சர் கே.எம்.ஷாஜி 13-ம் நம்பர் காரை கேட்டுப்பெற்றுக்கொண்டார். இதுபற்றி கேரள உள்ளாட்சித் துறை அமைச்சர் கே.எம்.ஷாஜி கூறுகையில், "13-ம் எண் காரை பயன்படுத்தினால் கஷ்டங்கள் வரும் என்று கூறப்படும் மூடநம்பிக்கைகளில் தனக்கு எவ்வித நம்பிக்கையும் இல்லை.13-ம் நம்பர் சாதாரண எண். யாருக்கும் அந்த எண் வேண்டாம் என்று காரை பெற்றுக்கொள்ளாமல் இருந்தார்களா என்று எனக்குத் தெரியாது. முந்தைய காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் 13-ம் எண் காரை பயன்படுத்தாமல் இருந்தார்களா எனவும் எனக்கு தெரியாது. ஆனால், அதற்காக அந்த எண்ணை மோசமான ஒன்றாக ஒதுக்கக் கூடாது அல்லவா? அதனால் நான் அதை எடுத்துக் கொள்கிறேன் என்று கூறினேன்.

கே.எம்.ஷாஜி

இப்போது தற்காலிகமாக எனக்கு 9 ஆம் எண் கார் ஒதுக்கப்பட்டுள்ளது. 9-ம் எண்ணாக இருந்தாலும் 13-ம் எண்ணாக இருந்தாலும் நான் மகிழ்ச்சியாகவே இருக்கிறேன். 13-ம் எண்ணை எடுத்தால் ஏதாவது கஷ்டங்கள் வரும் என்றுதானே நினைக்கிறார்கள். என்னுடைய வாழ்க்கையில் கஷ்டங்கள் எல்லாம் ஏற்கனவே முடிந்துவிட்டன. இனி வருவதற்கு கஷ்டங்கள் ஒன்றும் இல்லை. நான் ஏற்கனவே நிறைய துன்பங்களை அனுபவித்துவிட்டேன். அப்போதெல்லாம் என் கையில் 13-ம் எண் இல்லையே. நான் இரண்டு முறை தேர்தலில் தோற்றபோதும் என்னிடம் 13-ம் எண் இருக்கவில்லை. இதுபோன்ற விஷயங்களில் எனக்குப் பொதுவாகவே நம்பிக்கை கிடையாது.

கேரள அமைச்சர் கே.எம்.ஷாஜி

அந்த எண்ணுள்ள காரில் சென்றாலும், செல்லாமல் இருந்தாலும் விபத்துகள் நடக்கலாம். அப்படி ஏதேனும் விபத்து நடந்தால், சிலர் '13 ஆம் எண் காரை எடுத்ததால் தான் இப்படி நடந்தது' என்று கூறுவார்கள். ஆனால், அதில் எனக்கு எந்த அர்த்தமும் இருப்பதாகத் தோன்றவில்லை. ஏதோ பெரிய புரட்சியாளனாகக் காட்டிக் கொள்வதற்காக நான் இந்த எண்ணைத் தேர்ந்தெடுக்கவில்லை" என்றார்.

அதிமுக-வில் மிதுனுக்கு முக்கிய பொறுப்பு? நிர்வாகிகள் வலியுறுத்தல்; கவனம் பெற்ற கே.பி முனுசாமி பேச்சு

தேர்தல் தோல்விக்கு பின்னர், கட்சியின் நிர்வாகிகளை மாவட்ட வாரியாக சந்திக்க அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டு இன்று காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகிகளை சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவல... மேலும் பார்க்க

'ஆபரேஷன் இரட்டை இலை' - மதுராந்தகத்தில் ர.ர-க்களின் பிரமாண்ட இணைப்பு விழா; தவெக போடும் ஸ்கெட்ச்!

அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் சிலர் இன்று பனையூரில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் முன்னிலையில் தவெகவில் இணைந்திருந்தனர். கடந்த வாரம்தான் அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, எம்.சி.சம்... மேலும் பார்க்க

ஈரான்: "24 மணிநேரத்தில் போர் நிறுத்த ஒப்பந்தம் இறுதி செய்யப்படும்" - பாகிஸ்தான் பிரதமர் அறிவிப்பு

ஈரான் போர் முடிவுக்கு வருகிறது. போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டதில் இருந்து நீண்ட நாள்களுக்குப் பிறகு, இரண்டு நாள்களுக்கு முன், ஈரானும், அமெரிக்காவும் மாறி மாறி தாக்கிக் கொண்டன. தாக்குதலுக்குப் பிறகு, அ... மேலும் பார்க்க

'விஜயதாரணி, பச்சைமால், பாலகங்கா...' - தவெகவில் இணைந்த மாற்றுக் கட்சி நிர்வாகிகளின் இன்றைய லிஸ்ட்!

தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, தமிழக வெற்றிக் கழகத்தில் மாற்றுக் கட்சியினர் பலர் தொடர்ந்து இணைந்து வருகின்றனர். இதை முதன் முதலில் தொடங்கி வைத்தவர்கள் அதிமுக அதிருப்தி எம்.எல்.ஏக்களான இசக்கி சுப்பையா, ... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி நகர்மன்றக் கூட்டம்: முன்னாள் முதல்வர்களின் படங்களை வைக்க போட்டிப் போட்ட திமுக - அதிமுக!

கிருஷ்ணகிரி நகராட்சிக் கூட்ட அரங்கத்தில் முன்னாள் முதல்வர்களின் படங்களை வைப்பது தொடர்பாக திமுக-அதிமுக உறுப்பினர்களிடையே ஏற்பட்ட வாக்குவாதத்தால் நகர்மன்றத்தில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது. அதேநேரம், இந்த... மேலும் பார்க்க

"வழிமுறை தெரியாது..": நழுவும் தலைமை மருத்துவர் : மரங்களை வெட்டிய தேவகோட்டை அரசு மருத்துவமனை

" பிள்ளைகளைப்போல வளர்த்தோம்..!"சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை பி.எஸ்.எஸ். சாத்தப்ப செட்டியார் அரசு மருத்துவமனை வளாகத்தில் பல ஆண்டுகளாக நிழல் தந்து வந்த மரங்கள் திடீரென வெட்டிச் சாய்க்கப்பட்ட சம்பவம், தே... மேலும் பார்க்க