செய்திகள் :

ஐ.டி ஊழியர்களின் குழந்தைகளுக்கான டே கேர் - வாஷிங்மெஷின் தொட்டியில் வைத்து கதவை அடைத்த பெண் ஊழியர்கள்

post image

பெங்களூரு குண்டலஹள்ளி கேட் பகுதியில் உள்ள கேப்ஜெமினி டெக்னாலஜிக்கல் இந்தியா என்ற ஐ.டி கம்பெனியில் அங்கு பணியாற்றும் பெண்களின் குழந்தைகளை பகல் நேரத்தில் கவனிப்பதற்காக, `சொசைட்டி ஜெனரல் பேபி கேர்' என்ற குழந்தைகள் காப்பகம் செயல்பட்டு வருகிறது. அந்த வளாகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் பலர், தங்கள் குழந்தைகளை எளிதாகச் சென்று பார்க்கும் வசதிக்காக இது அமைக்கப்பட்டு இருந்தது.

பணிக்கு வரும் பெண் ஊழியர்கள் தங்களது குழந்தைகளை இங்கே விட்டுச்செல்வது வழக்கம். இக்குழந்தைகளை அங்கு பணிபுரியும் ஊழியர்கள் சித்ரவதை செய்வது போன்ற காணொலி வாட்ஸ்ஆப் மூலம் பரவியது.

அந்த காணொலியில் குழந்தைகள் அழாமல் இருக்க அவர்களை வாஷிங்மெஷின் தொட்டியில் வைத்து அவர்களின் வாயில் தண்ணீர் விழுவது போன்று செய்து வைத்திருந்தனர். அதோடு அவர்கள் பாத்ரூம் கதவையும் அடைத்து வைத்திருந்தனர்.

இது தொடர்பான காணொலிகளை பார்த்தவுடன் அங்கு பணியாற்றும் பெண் ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர். அவர்கள் அந்த காணொலியை போலீஸாருக்கு அனுப்பி வைத்தனர்.

அதோடு அந்த குழந்தைகள் பராமரிப்பு மையத்தில் பணியாற்றிய மஞ்சுளா, விஜயலட்சுமி, பவானி, சிந்து மற்றும் பிந்து ஆகிய ஐந்து பெண் ஊழியர்கள் மீது புகார் செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் போலீஸார் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் குழந்தைகள் பராமரிப்பு மைய ஊழியர்கள், புகார் கொடுத்தவர்கள் மற்றும் பிற சாட்சிகளிடம் போலீஸார் வாக்குமூலம் பதிவு செய்து வருகின்றனர்.

விசாரணையின் போது சேகரிக்கப்படும் ஆதாரங்களை பொறுத்தே அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.மேலும் தற்காலிகமாக அங்கு செயல்பட்டு வந்த குழந்தைகள் பராமரிப்பு மையம் மூடப்படுவதாக கேப் ஜெமினி நிர்வாகம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக குழந்தைகள் உரிமை பாதுகாப்பு கமிஷனிலும் தனியாக ஒரு புகார் செய்யப்பட்டுள்ளது.

கேப்கெமினி நிர்வாகம் இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், "தங்கள் ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் உடல்நலம், பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வுக்கே கேப்கெமினி முதன்மையான முன்னுரிமை அளிக்கிறது. உண்மைகளைக் கண்டறியும் முயற்சியில் ஈடுபட்டுள்ள சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு நாங்கள் முழு ஒத்துழைப்பையும் உதவியையும் வழங்கி வருகிறோம். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பெங்களூரு வளாகத்தில் உள்ள பகல்நேரக் குழந்தைகள் காப்பகத்தை தற்காலிகமாக மூடுகிறோம்," என்று தெரிவித்துள்ளது.

`18 வயதைக் கடந்த திருமணமாகாத மகளின் படிப்பு செலவை ஏற்பது தந்தையின் கடமை' - கர்நாடகா உயர் நீதிமன்றம்

கணவன் மனைவி இடையே விவாகரத்து ஏற்பட்டுவிட்டால் மனைவியுடன் இருக்கும் குழந்தைகள் 18 வயதை கடக்கும் வரை அவர்களின் படிப்பு செலவை ஏற்பது தந்தையின் கடமையாகும். கர்நாடகா மாநிலம், மங்களூரைச் சேர்ந்த பெண் ஒருவர்... மேலும் பார்க்க

தூத்துக்குடி: அங்கன்வாடியில் கொடுக்கப்பட்ட முட்டையில் அழுகிய கோழிக்குஞ்சு - பெற்றோர் அதிர்ச்சி!

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திக்குளம் அருகேயுள்ள ரகுராமபுரம் கிராமத்தில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. இந்த அங்கன்வாடி மையத்திற்கு 20 குழந்தைகள் தினம் தோறும் வருவது வழக்கம். இங்கு சொர்ணமாரி எ... மேலும் பார்க்க

மதுபானக்கடைக்குள் நுழைந்து ரகளையில் ஈடுபட்ட சிறுத்தை - 5 மணி நேர போராட்டத்திற்கு பிறகு மீட்பு!

ராஜஸ்தான் மாநிலத்தில் திறந்திருந்த மதுபானக்கடைக்குள் திடீரென சிறுத்தைப்புலி ஒன்று உள்ளே நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ராஜஸ்தானின் டோங்க் மாவட்டத்தில் காலை வனப்பகுதியில் இருந்து வெளியேறி மதுபானக் கடை... மேலும் பார்க்க

பதநீரில் சீனி கலந்து போலி கருப்பட்டி - வரி ஏய்ப்பு; 5 வியாபரிகளுக்கு அபராதம் மட்டும் ரூ.38 கோடி!

புவிசார் குறியீடு பெற்ற உடன்குடி கருப்பட்டிக்கு ஜி.எஸ்.டி. வரி விலக்கும் சில்லறை விற்பனையில் 5 சதவீதம் வரியும் வழங்கப்படுகிறது. ஆனால், பதநீரில் 75 சதவீதத்திற்கும் மேல் சீனி கலந்தால் 18 சதவீதம் ஜி.எஸ்.... மேலும் பார்க்க

'2600 பயணிகள், 110 கி.மீ' - நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயிலை நாட்டிற்கு அர்ப்பணித்த பிரதமர்

டீசலுக்கு மாற்றாக இப்போது அதிக அளவில் ரயில்களை இயக்க மின்சாரம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த மின்சாரத்தை ஹைட்ரஜன் மூலம் தயாரித்து அதிலிருந்து ரயில்களை இயக்கும் திட்டம் நீண்ட நாட்களாகச் சோதனையில் இர... மேலும் பார்க்க