செய்திகள் :

'ஒவ்வொரு கப்பலுக்கு 2 மில்லியன் டாலர்கள்' - ஹார்முஸ் முதல் யுரேனியம் வரை; ஈரானின் 10 நிபந்தனைகள்

post image

அமெரிக்க நேரப்படி, இன்று இரவு 8 மணிக்கு ஈரான் மீதான கடும் தாக்குதலுக்கு நேரத்தைக் குறித்திருக்கிறார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.

அவர் வைத்திருக்கும் ஒரே நிபந்தனை 'ஹார்முஸ் ஜலசந்தியைத் திறக்க வேண்டும்' என்பதுதான்.

இந்த நிபந்தனைக்கு ஈரானும் 10 எதிர் நிபந்தனைகளை விதித்துள்ளது. அவை என்னென்ன என்பதைப் பார்க்கலாம்.

> மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போரை உடனடியாக நிறுத்த வேண்டும்.

> இந்தப் போர் நிறுத்தம் தற்காலிகமானதாக இல்லாமல், நிரந்தரமானதாக இருக்க வேண்டும்.

> ஹார்முஸ் ஜலசந்தி வழியாகப் பாதுகாப்பான போக்குவரத்தை உறுதி செய்வதற்கான ஒரு அமைப்பு வேண்டும்.

ஹார்முஸ் ஜலசந்தி
ஹார்முஸ் ஜலசந்தி

> ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரானின் உரிமையை அங்கீகரிக்க வேண்டும்.

> அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தின் (NPT) கீழ் யுரேனியத்தைச் செறிவூட்டுவதற்கான உரிமையை முறைப்படி அங்கீகரிக்க வேண்டும்.

> ஈரான் நாட்டின் மீது அமெரிக்காவும், பிற நாடுகளும் விதித்துள்ள தடைகளை நீக்க வேண்டும்.

> லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பு மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்துவதை நிறுத்த வேண்டும்.

> இதற்கு பதிலாக, ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியைத் திறக்கும். ஆனால், அங்கே நின்றுகொண்டிருக்கும் ஒவ்வொரு கப்பலும் அந்த வழியாகச் செல்ல கட்டணமாக 2 மில்லியன் டாலர்கள் வசூலிக்கப்படும். இந்தப் பணம் ஓமனுடன் பகிரப்படும்.

> இந்த நிதி அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட கட்டமைப்புகளைச் சரி செய்ய பயன்படுத்தப்படும்.

நேரடி நஷ்ட ஈடிற்குப் பதிலாக, இப்படி கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

> எதிர்காலத்தில் ஈரான் மீது எந்தத் தாக்குதலும் நடத்தப்படாது என்பதற்கான உறுதி.

'கச்சா எண்ணெய்' இறக்குமதியில் தள்ளாடும் நாடுகள்; ஆனால் இந்த உலோகத்தை அதிகமாக இறக்குமதி செய்யும் சீனா

அமெரிக்கா - ஈரான் போரால் உலகமே கச்சா எண்ணெய், எல்.பி.ஜியை உற்று நோக்கி வருகிறது.இந்த நேரத்தில், சீனா சத்தமே இல்லாமல் வெள்ளியை இறக்குமதி செய்கிறது.ப்ளூம்பெர்க் குறிப்பிட்டுள்ள சீனாவின் அறிக்கையின் படி,... மேலும் பார்க்க

தமிழகத்தில் பறக்கும் படை வேட்டையில் சிக்கியது இத்தனை கோடிகளா? - அர்ச்சனா பட்நாயக் வெளியிட்ட தகவல்

தமிழ்நாட்டில் இதுவரை பறிமுதல் செய்யப்பட்ட பரிசுப்பொருட்கள் மற்றும் பணம் குறித்த விவரங்களை தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்திருக்கிறார். தமிழக சட்டமன்... மேலும் பார்க்க

மணிப்பூர்: தீப்பந்தத்துடன் வீதிக்கு வந்த பெண்கள்; உடைந்த நம்பிக்கையும் ஓயாத கலவரமும்;என்ன நடக்கிறது?

மணிப்பூர் மாநிலத்தில் 2023 மே மாதம் மெய்தி - குக்கி என இரு சமூகத்தினரிடையே தொடங்கிய கலவரம் இன்றுவரை நீடித்து வருகிறது. இந்தக் கலவரத்தில் இதுவரை 260-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர், ஆயிரக்கணக்கானோர... மேலும் பார்க்க

"எங்களது ராணுவத்திற்கு உத்தரவிட்டுள்ளேன்" - ட்ரம்ப் பதிவு; நம்பிக்கையில் பாகிஸ்தான்; மௌனத்தில் ஈரான்

நேற்று பாகிஸ்தான் தலைநகரான இஸ்லாமாபாத்தில் நடக்கவிருந்த அமெரிக்கா – ஈரான் பேச்சுவார்த்தை திட்டமிட்டது போல நடக்கவில்லை. அமெரிக்கா தரப்பில் இருந்து அமெரிக்காவின் துணை அதிபர் ஜே.டி.வான்ஸ், சிறப்பு தூதர் ... மேலும் பார்க்க

மேற்கு வங்கம் : பிரசார களத்துக்கு வந்த 'மீன்கள்' ; மேற்கு வங்கத்தை அசைக்கும் உணவு யுத்தம்!

கொல்கத்தாவின் பாரக்பூர் தொகுதியின் பா.ஜ.க வேட்பாளரான கௌஸ்தவ் பக்சி, பாரம்பரிய உடை அணிந்து கையில் ஒரு மீனுடன் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்து வருகிறார். அவருக்குப் பின்னால் மேளதாளங்கள் முழங்க ஆதரவ... மேலும் பார்க்க