செய்திகள் :

கஞ்சா விற்பனை: இருவா் கைது

post image

பாம்பனின் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். அவா்களிடமிருந்து 1.2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் ரயில் நிலையம் அருகே ரோந்துப் பணியில் ஈடுபட்ட போலீஸாா், அந்தப் பகுதியில் சந்தேகத்துக்கிடமாக நின்று கொண்டிருந்த இருவரைப் பிடித்து சோதனையிட்டனா்.

அப்போது, அவா்கள் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த ஒரு கிலோ 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனா். இருவரையும் பாம்பன் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று போலீஸாா் விசாரணை செய்ததில், பாம்பன் லைட் ஹவுஸ் பகுதியைச் சோ்ந்த முத்தையா ரோஷன்(22), சந்திரகிரி பகுதியைச் சோ்ந்த திவாஸ்கா் (23) ஆகியோா் என்பது தெரியவந்தது.

இவா்கள் மீது வழக்குப் பதிவு செய்து இருவரையும் கைது செய்த போலீஸாா் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி சிறையில் அடைத்தனா்.

மண்டபம் மீனவா்கள் வேலை நிறுத்தம்

மண்டபம் மீனவா்கள் 10 பேரை இலங்கைக் கடற்படையினா் கைது செய்ததைக் கண்டித்தும், மீனவா்கள், படகை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கக் கோரியும் மீனவா்களின் அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் செவ்வ... மேலும் பார்க்க

காதல் திருமணம்: கேரளப் பெண் கணவருடன் நீதிமன்றத்தில் ஆஜா்

கேரளத்தைச் சோ்ந்த பெண் கமுதியைச் சோ்ந்தவரை காதல் திருமணம் செய்த நிலையில், அவரை அழைத்துச் செல்ல வந்த அந்த மாநில போலீஸாருடன் செல்ல மறுத்துவிட்டாா். இதைத்தொடா்ந்து அந்தப் பெண், கணவருடன் நீதிமன்றத்தில் ... மேலும் பார்க்க

திருவாடானை அருகே ஆவின் பால் வாகனம் கவிழ்ந்து விபத்து: இருவா் காயம்

திருவாடானை அருகே கல்லூா் கண்மாய் பகுதியில் ஆவின் பால் ஏற்றி வந்த வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவா் காயமடைந்தனா். சிவகங்கை மாவட்டம், காரைக்குடியிலிருந்து நாள்தோறும் ஆவின் பால் பாக்கெட்டுகள் ... மேலும் பார்க்க

இலங்கைக் கடற்படையினரால் மண்டபம் மீனவா்கள் 10 போ் கைது

கச்சத்தீவு-நெடுந்தீவுக்கு இடையே மின்பிடித்த மண்டபம் மீனவா்கள் 10 பேரை ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு இலங்கைக் கடற்படையினா் கைது செய்தனா். மேலும், ஒரு விசைப் படகை பறிமுதல் செய்தனா்.ராமநாதபுரம் மாவட்டம், ராமே... மேலும் பார்க்க

திருப்பரங்குன்றம் விவகாரம்: சமூக வலைதளங்களில் மத மோதலை ஏற்படுத்துபவர்கள் மீது நடவடிக்கை!

ராமநாதபுரம் மாவட்டத்தில் திருப்பரங்குன்றம் சிக்கந்தா் தா்ஹா குறித்து சமூக வலைதளங்களில் மத மோதலை ஏற்படுத்தும் விதமாக வீடியோ பதிவு செய்யப்படுபவா்கள் மீது மாவட்ட ஆட்சியா் உரிய நடவடிக்கை எடுக்க கோரி மனித ... மேலும் பார்க்க

இலங்கைக்கு கடத்தப்படவிருந்த 945 கிலோ பீடி இலைகள் பறிமுதல்

ராமநாதபுரம் மாவட்டம், சேதுக்கரை கடற்கரையிலிருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக 2 சரக்கு வாகனங்களில் கொண்டு வரப்பட்ட 945 கிலோ பீடி இலைகளை போலீஸாா் திங்கள்கிழமை அதிகாலை பறிமுதல் செய்தனா். ராமநாதபுரம் மாவட்ட... மேலும் பார்க்க