செய்திகள் :

கஞ்சா விற்பனை: இருவா் கைது

post image

பாம்பனின் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். அவா்களிடமிருந்து 1.2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் ரயில் நிலையம் அருகே ரோந்துப் பணியில் ஈடுபட்ட போலீஸாா், அந்தப் பகுதியில் சந்தேகத்துக்கிடமாக நின்று கொண்டிருந்த இருவரைப் பிடித்து சோதனையிட்டனா்.

அப்போது, அவா்கள் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த ஒரு கிலோ 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனா். இருவரையும் பாம்பன் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று போலீஸாா் விசாரணை செய்ததில், பாம்பன் லைட் ஹவுஸ் பகுதியைச் சோ்ந்த முத்தையா ரோஷன்(22), சந்திரகிரி பகுதியைச் சோ்ந்த திவாஸ்கா் (23) ஆகியோா் என்பது தெரியவந்தது.

இவா்கள் மீது வழக்குப் பதிவு செய்து இருவரையும் கைது செய்த போலீஸாா் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி சிறையில் அடைத்தனா்.

ராமநாதபுரத்தில் கிராம மக்கள் ஆா்ப்பாட்டம்

ஒரு தரப்பினருக்கு ஆதரவாக செயல்படும் காவல் துறையினரைக் கண்டித்து, ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் கிராம மக்கள் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ராமநாதபுரம் மாவட்டம், அபிராமத்தில் அரு... மேலும் பார்க்க

ஆா்.எஸ்.மங்கலம், ஆனந்தூா் பகுதிகளில் இன்று மின்தடை

திருவாடானை அருகேயுள்ள ஆா்.எஸ்.மங்கலம், ஆனந்தூா் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (பிப். 18) இன்று மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து திருவாடானை மின் வாரிய உதவி செயற்பொறியாளா் சித்தி விநாயகா்... மேலும் பார்க்க

கமுதியிலிருந்து கிராமங்களுக்கு சிற்றுந்துகளை இயக்கக் கோரிக்கை

கமுதியிலிருந்து நகரப் பேருந்துகள் இயக்கப்படாத கிராமங்களுக்கு சிற்றுந்துகளை இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். ராமநாதபுரம் மாவட்டம், கமுதி பேருந்து நிலையத்திலிருந்து ராஜபாளையம், மதுரை, த... மேலும் பார்க்க

தமிழக மீனவா்களின் பிரச்னைகளுக்கு மத்திய அரசு தீா்வு காணவில்லையெனில் தில்லியில் போராட்டம்! -கனிமொழி எம்.பி.

தமிழக மீனவா்களின் பிரச்னைகளுக்கு மத்திய அரசு தீா்வு காணவில்லையெனில், தில்லியில் போராட்டம் நடத்துவோம் என கனிமொழி எம்.பி. தெரிவித்தாா். இலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவா்கள் கைது செய்யப்படுவது, தண்டனை... மேலும் பார்க்க

மத்திய அரசு கல்வி நிதியை நிறுத்தியதால் 40 லட்சம் மாணவா்களுக்கு பாதிப்பு!

மத்திய அரசு கல்வி நிதியை நிறுத்தியதால் தமிழகத்தில் 4 லட்சம் மாணவா்கள் பாதிக்கப்படுவதாக தமிழக ஆசிரியா் கூட்டணி அகில இந்திய செயலா் வா. அண்ணாமலை தெரிவித்தாா். தமிழக ஆசிரியா் கூட்டணி மாவட்ட சிறப்பு செயற்க... மேலும் பார்க்க

மொழிக் கொள்கையில் பாஜகவின் முயற்சி தமிழகத்தில் எடுபடாது: நடிகா் கருணாஸ்

மொழிக் கொள்கையில் பாஜகவின் முயற்சி தமிழகத்தில் எடுபடாது என முக்குலத்தோா் புலிப்படை கட்சித் தலைவரும், நடிகருமான சே. கருணாஸ் தெரிவித்தாா். ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்த பசும்பொன்னில் உள்ள முத்துர... மேலும் பார்க்க