செய்திகள் :

'கடுமையான மன உளைச்சல்' - 'த்ரிஷ்யம் 3' படத்தினால் இடுக்கியைச் சேர்ந்தவருக்கு நேர்ந்த சிக்கல்!

post image

மோகன்லால் நடிப்பில் பெரும் வரவேற்பைப் பெற்ற 'திரிஷ்யம் 3' திரைப்படத்தின் தயாரிப்பாளர் ஆண்டனி பெரும்பாவூர் மற்றும் இயக்குநர் ஜீத்து ஜோசப் ஆகியோருக்கு எதிராக இடுக்கியைச் சேர்ந்த ஒருவர் காவல் துறையில் புகார் அளித்துள்ளார்.

படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள ஒரு காரின் பதிவு எண், தன் சொந்த வாகனத்தின் எண் என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

'த்ரிஷ்யம்'
'த்ரிஷ்யம்'

இடுக்கி மாவட்டத்தைச் சேர்ந்த ராஜீவ் என்ற விவசாயி, மூணார் காவல் அதிகாரிடம் இந்தப் புகாரை அளித்திருக்கிறார்.

அவர் கொடுத்துள்ள புகாரில், "படத்தில் மோகன்லால் பயன்படுத்தும் காரில், என்னுடைய சொந்த வாகனத்தின் பதிவு எண் எனது அனுமதி இல்லாமல் பயன்படுத்தப்பட்டுள்ளது.

திரையில் இந்த எண் தொடர்ந்து காட்டப்படுவதால், எனக்குத் தனிப்பட்ட முறையிலும் சட்ட ரீதியாகவும் தேவையற்ற சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, எனது வாகன எண் வரும் காட்சிகளைப் படத்திலிருந்து உடனடியாக நீக்க வேண்டும்," என்று அந்தப் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்துப் பேசியுள்ள ராஜீவ், "படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருவதால், படத்தைப் பார்த்தவர்கள் பலரும் என் காரை 'திரிஷ்யம் கார்' என்று அடையாளப்படுத்துகிறார்கள்.

என்னை 'திரிஷ்யம் ராஜீவ்' என்று கூட அழைக்கத் தொடங்கிவிட்டார்கள். அதுமட்டுமன்றி, இத்திரைப்படம் ஒரு குற்றப் பின்னணியைக் கொண்ட கதையைச் சுற்றி நகர்வதால், எனக்கும் ஏதேனும் சட்டவிரோதச் செயல்களில் தொடர்பு இருக்குமோ என்று சிலர் வதந்திகளைப் பரப்பி வருகிறார்கள்." என்று தெரிவித்துள்ளார்.

 'த்ரிஷ்யம் 3'
'த்ரிஷ்யம் 3'

இந்தச் சம்பவத்தால் தனக்குக் கடுமையான மன உளைச்சல் ஏற்பட்டுள்ளதாகவும், இதற்குப் படக்குழுவினர் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அந்தப் புகாரில் கோரியுள்ளார்.

புகார் அளித்துள்ள ராஜீவ் வைத்திருப்பதும் திரைப்படத்தில் பயன்படுத்தப்பட்டிருப்பதும் வெவ்வேறு கார் மாடல்கள்தான். ஆனால், அதில் பொருத்தப்பட்டுள்ள நம்பர் பிளேட்டில் இருக்கும் எண் அப்படியே ராஜீவின் காரோடு ஒத்துப்போகிறது.

"தனித்துவமான நடிப்பு பாணியை உருவாக்கிய கலைஞன் சலிம்குமார்"- வி.டி.சதீசன், பினராயி விஜயன் புகழஞ்சலி!

300-க்கும் மேற்பட்ட சினிமாக்களில் நடித்து பல்வேறு விருதுகளை பெற்ற பிரபல மலையாள நடிகர் சலிம்குமார் மறைவுக்கு கேரள முதல்வர் வி.டி.சதீசன், எதிர்க்கட்சித் தலைவர் பினராயி விஜயன் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் ... மேலும் பார்க்க

மிமிக்ரி கலைஞர்... நகைச்சுவை நடிகர் டு காங்., ஆதரவாளர் - நடிகர் சலிம்குமார் உடல்நலக் குறைவால் மரணம்!

மலையாளத் திரைப்படங்களில் நகைச்சுவை நடிகர் மற்றும் குணச்சித்திரக் கலைஞராக மக்கள் மனங்களை வென்ற தேசிய விருது பெற்ற பிரபல நடிகர் சலிம்குமார் (57) காலமானார். சிறுநீரகக் கோளாறு காரணமாக எர்ணாகுளம் அமிர்தா ம... மேலும் பார்க்க

Salim Kumar: பிரபல மலையாள நடிகர் சலீம் குமார் காலமானார் - மலையாள திரையுலகினர் இரங்கல்

பிரபல மலையாள நடிகர் சலீம் குமார் நேற்றைய தினம் காலமானார். இவருக்கு வயது 56. கடந்த சில காலமாகவே கல்லீரல் தொடர்பான நோய்க்காகச் சிகிச்சை பெற்று வந்த அவர், திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததாக க... மேலும் பார்க்க

சினிமாவில் பயன்படுத்தப்பட்ட இளைஞரின் மொபைல் எண்; படக்குழுவுக்கு எதிராக வழக்குக்கு உத்தரவிட்ட கோர்ட்!

நடிகர் குஞ்ஞாக்கோ போபன் நடிப்பில் வெளியான ‘ஆப்பீசர் ஆன் டியூட்டி’ மலையாள சினிமாவில் ஒரு காட்சியில் பெண் மருத்துவர் ஒருவர் பயன்படுத்தும் மொபைல் எண் காண்பிக்கப்பட்டது. வழக்கமாக சினிமாவுக்காக டம்மி நம்பர... மேலும் பார்க்க

'ஜிஹாதி' அவதூறு முதல் போலீஸ் விசாரணை வரை; மலையாளத் திரையுலகை உலுக்கும் த்ரிஷ்யம் நடிகை விவகாரம்

மலையாளத் திரையுலகில் பெரும் புயலைக் கிளப்பியுள்ள நடிகை அன்சிபா ஹாசன் மற்றும் நடிகர் டினி டாம் இடையேயான மோதல் சர்ச்சையாகியிருக்கிறது.நடிகர் டினி டாம், நடிகை அன்சிபா ஹாசன் மீது தனிப்பட்ட விரோதம் மற்றும்... மேலும் பார்க்க

"அப்போ அப்பாவின் ஆசையை நிறைவேற்ற முடியவில்லை; இப்போ.."- மூன்றாவது டாக்டர் பட்டத்தைப் பெற்ற மம்மூட்டி

நடிகர் மம்மூட்டி, தற்போது அவருடைய மூன்றாவது கௌரவ டாக்டர் பட்டத்தைப் பெற்றுள்ளார். கோட்டயத்தில் உள்ள மகாத்மா காந்தி பல்கலைக்கழகம் இந்திய சினிமாவிற்கு மம்மூட்டி ஆற்றிய பங்களிப்பைப் பாராட்டி இந்த உயரிய ட... மேலும் பார்க்க