செய்திகள் :

கண்ணீர்மல்க அஜித் பவாருக்கு பிரியாவிடை கொடுத்த மனைவி, மகன்கள் - அமிஷ் ஷா, தலைவர்கள் நேரில் இரங்கல்

post image

மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார் நேற்று நடந்த விமான விபத்தில் அகாலமரணம் அடைந்தார். அஜித் பவாரின் சொந்த ஊரான பாராமதியில் நடந்த இந்த விபத்தில் அஜித் பவாருடன் சேர்த்து மேலும் 5 பேர் உயிரிழந்தனர். அஜித் பவாரின் உடல் இன்று காலை பாராமதி மருத்துவ கல்லூரியில் இருந்து இறுதிச்சடங்கிற்காக எடுத்து வரப்பட்டது.

இதையடுத்து மருத்துவ கல்லூரி வளாகத்தில் தேசியவாத காங்கிரஸ் தொண்டர்கள் திரளாக கூடி இருந்தனர். அங்கிருந்து வித்யா பிரதிஷ்தான் மைதானத்திற்கு உடல் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. அங்கு மறைந்த தலைவருக்கு மத்திய அமைச்சர் அமித் ஷா பிரதமர் நரேந்திர மோடி சார்பாக மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

இது தவிர மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, நிதின் கட்கரி, உத்தவ் தாக்கரே, ராஜ் தாக்கரே, சுப்ரியா சுலே, சரத்பவார், நடிகர் ரிதேஷ் தேஷ்முக், பிரபுல் பட்டேல் மற்றும் மகாராஷ்டிரா அமைச்சர்கள் உட்பட ஏராளமான தலைவர்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர். இது தவிர ஆயிரக்கணக்கான கட்சி தொண்டர்களும், பொதுமக்கள் வந்து கலந்து கொண்டனர். அஜித் பவாரின் மனைவி சுனேதிர பவார் தனது கணவர் உடல் அருகில் கண்ணீருடன் நின்று கொண்டிருந்தார். சுனேத்ரா பவார் முன்னிலையில் அவரது இரண்டு மகன்களான பார்த் பவார் மற்றும் ஜெய்பவார் ஆகியோர் தங்களது தந்தைக்கு தீமூட்டி இறுதிச்சடங்குகளை செய்தனர்.

முன்னதாக அஜித்பவாரின் உடல் மீது மூவர்ண கொடி போர்த்தப்பட்டு இருந்தது. அவர் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. இறுதிச்சடங்கில் கலந்து கொண்ட பொதுமக்களும், தொண்டர்களும் கண்ணீர் விட்டு அழுத காட்சியை நேரில் காண முடிந்தது.

விமான விபத்து நடந்த இடத்தில் ஆய்வு செய்வதற்காக இன்று தடயவியல் நிபுணர்களும், மத்திய விமான போக்குவரத்து துறை அதிகாரிகளும் பாராமதிக்கு வந்திருந்தனர்.

`பட்டா இருந்தும் மின்சாரம் இல்லை' - 31 ஆண்டுகளாக இருளில் வாழும் 138 அருந்ததியர் குடும்பங்கள்!

திருவண்ணாமலை மாவட்டம், துரிஞ்சாபுரம் ஒன்றியம், வடஆண்டிப்பட்டு கிராமம், கௌதம புத்தர் நகரில் வசித்து வரும் 138 அருந்ததியர் சமூக குடும்பங்களுக்கு அரசால் பட்டா வழங்கப்பட்டிருந்தாலும், இதுவரை அந்த பட்டாக்க... மேலும் பார்க்க

கேரளா: தலைநகர் தொகுதிகளை குறிவைக்கும் பா.ஜ.க தலைவர்கள் - என்.டி.ஏ கூட்டணியில் களேபரம்!

கேரள மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ள நிலையில் சி.பி.எம் தலைமையிலான எல்.டி.எஃப் கூட்டணி, காங்கிரஸ் தலைமையிலான யு.டி.எஃப் கூட்டணி, பா.ஜ.க தலைமையிலான என்.டி.ஏ கூட்டணி ஆகியவை தேர்தலுக்கு தயாராகி வர... மேலும் பார்க்க

"அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்று என்று கேட்பதில் தவறு கிடையாது!" - சொல்கிறார் தொல்.திருமாவளவன்

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன் அரியலூரில் நடைபெற உள்ள நிகழ்வில் பங்கேற்க செல்வதற்காக சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சி விமான நிலையம்... மேலும் பார்க்க

ராகுலா, பிரியங்காவா? - கேரளா, அஸ்ஸாம் தேர்தலில் வெற்றிபெற்று செல்வாக்கை நிரூபிக்கப்போவது யார்?

கேரளா, அஸ்ஸாம், தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களுக்கு அடுத்த இரு மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இத்தேர்தல் காங்கிரஸ் தலைமைக்கு விடப்பட்ட மிகப்பெரிய சவாலாக கரு... மேலும் பார்க்க

"அந்த போன்கால் வரட்டும்!" - காத்திருக்கும் அறிவாலயம்

நேற்று பிப்.17-ம் தேதி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாவட்டத் தலைவர்கள் கூட்டம் சென்னை முகப்பேரில் நடைபெற்றது. கூட்டத்தில் கலந்து கொண்டுவிட்டு செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் அமைப்பு பொதுச்செயலாள... மேலும் பார்க்க

DMK - ADMK : `6 இடங்களுக்குதான் இத்தனை அக்கப்போரா?' - கலக்கத்தில் தவிக்கும் கழகங்கள்! | மாநிலங்களவை

தமிழகம் உள்ளிட்ட 10 மாநிலங்களிலிருந்து, காலியாக உள்ள 37 இடங்களுக்கான மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தலை அறிவித்துள்ளது தேர்தல் ஆணையம். பிப்ரவரி மாதம் 26-ம் தேதி வேட்புமனு துவங்கி, மாரச் 16-ம் தேதி... மேலும் பார்க்க