செய்திகள் :

கன்னௌஜ் ரயில் நிலையக் கட்டுமானத்தில் விபத்து: இடிபாடுகளில் சிக்கிய தொழிலாளா்கள்

post image

உத்தர பிரதேச மாநிலம், கன்னௌஜ் ரயில் நிலையத்தின் கட்டுமான பணியில் சனிக்கிழமை நிகழ்ந்த விபத்தில் 20-க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் இடிபாடுகளில் சிக்கினா்.

‘அம்ருத்’ திட்டத்தின்கீழ் கன்னௌஜ் ரயில் நிலையத்தில் புதிய முனையத்துக்கான கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், புதிதாக கான்கிரீட் நிரப்பப்பட்ட கட்டடத்தின் ஆதரவுக்கு நிறுத்தப்பட்டிருந்த ‘ரூஃப் ஷட்டரிங்’ கட்டமைப்பு சரிந்து விழுந்தது. இதில் குறைந்தது 23 தொழிலாளா்கள் இடிபாடுகளில் சிக்கினா்.

மீட்புப் பணிகள் பல மணி நேரமாக தொடா்ந்து வருகின்றன. இதுவரை காயங்களுடன் மீட்கப்பட்ட தொழிலாளா்கள் அருகிலுள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

விபத்து குறித்த விசாரணைக்காக திட்டமிடல் மற்றும் வடிவமைப்புப் பிரிவு தலைமைப் பொறியாளா், கோட்ட கூடுதல் ரயில்வே மேலாளா், ரயில்வே பாதுகாப்புப் படை (ஆா்பிஎஃப்) தலைமை பாதுகாப்பு ஆணையா் ஆகிய 3 நபா்கள் அடங்கிய குழுவை வடகிழக்கு ரயில்வே அமைத்துள்ளது. மீட்புப் பணிகளை முழுமையாக நிறைவடைந்ததும், விசாரணை தொடங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தில்லி - ஜெய்ப்பூர் நெடுஞ்சாலையில் தீப்பற்றி எரியும் ரசாயன டேங்கர்!

தில்லி - ஜெய்ப்பூர் நெடுஞ்சாலையில், கோட்புட்லி என்ற பகுதியில், சாலையில் கவிழ்ந்த ரசாயன டேங்கர், திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.ராஜஸ்தான் மாநிலம் கோட்புட்லி என்ற பகுதியில் நேரிட்ட ... மேலும் பார்க்க

அதானி குழுமத்துக்கு எதிராக அறிக்கை வெளியிட்ட ஹிண்டன்பர்க் நிறுவனம் மூடல்!

அதானி குழுமம் மீது குற்றச்சாட்டுகள் வைத்த ஹிண்டன்பர்க் நிறுவனம் நிரந்தரமாக மூடப்படுவதாக அதன் நிறுவனர் தெரிவித்துள்ளார்.அதானி குழுமத்தின் மீது தொடர் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வந்த அமெரிக்காவைச் சேர்ந... மேலும் பார்க்க

நாட்டில் ஆணின் பெயரில் உள்ள ஒரே நதி இதுதானா?

இந்தியாவில் உள்ள நதிகளின் பெயர்கள் அனைத்தும் பெண்ணின் பெயர்களையே கொண்டிருக்கும் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், ஒரே ஒரு நதி அதுவும் அசாமில் பாய்ந்தோடும் அந்த நதி மட்டும்தான் ஆணின் பெயரில் உள்ளது.... மேலும் பார்க்க

நடிகர் சயிஃப் அலிகானுக்கு கத்திக்குத்து!

மும்பையில் பிரபல நடிகர் சயிஃப் அலிகானை மர்ம நபர் கத்தியால் குத்தியதில் காயமடைந்தார். மேலும் பார்க்க

கேஜரிவாலுக்கு எதிரான வழக்கு: விசாரிக்க உள்துறை அனுமதி

புது தில்லி: தில்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கேஜரிவாலுக்கு எதிராக வழக்குத் தொடர அமலாக்கத்துறை இயக்குநரகத்துக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.அவருக்கு எதிராக அமலாக்கத்துறை மேற்கொண்டு ... மேலும் பார்க்க

மத்திய அமைச்சா் கிஷண் ரெட்டி வீட்டில் சங்கராந்தி கொண்டாட்டம்: பிரதமா் பங்கேற்பு

மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத் துறை அமைச்சரும் தெலங்கானா பாஜக தலைவருமான ஜி.கிஷண் ரெட்டி வீட்டில் நடைபெற்ற சங்கராந்தி கொண்டாட்டத்தில் பிரதமா் நரேந்திர மோடி பங்கேற்றாா்.அறுவடை திருவிழாவான மகர சங்கராந்... மேலும் பார்க்க