செய்திகள் :

`கப்பலை மூழ்கடிப்பது தான் மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும்' - ஈரான் கப்பலை தாக்கியது குறித்து ட்ரம்ப்

post image

மத்திய கிழக்கில் அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் இடையே போர் தொடங்கி நடந்து வருகிறது. ஈரானும் இருபெரும் வல்லரசு நாடுகளை எதிர்த்து நிற்கிறது. இந்த நிலையில், ஈரானின் ராணுவக் கட்டமைப்பை அமெரிக்கப் படைகள் முற்றிலுமாகச் சிதைத்துவிட்டதாக அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

திங்களன்று புளோரிடாவில் நடைபெற்ற குடியரசுக் கட்சி மாநாட்டில் பேசிய அவர், ``கடந்த ஒரு மாதத்தில் ஈரானில் உள்ள 5,000-க்கும் மேற்பட்ட இலக்குகளை அமெரிக்கா தாக்கியுள்ளது. இந்தத் தாக்குதல்களால் அந்நாட்டின் ஏவுகணைத் திறன் 10 சதவீதமாகக் குறைந்துவிட்டது. ராணுவக் கட்டமைப்பு இடிக்கப்பட்டது. கடந்த மூன்றரை நாட்களில் மட்டும் ஈரானின் 46 அதிநவீனக் கடற்படைக் கப்பல்களை அமெரிக்க ராணுவம் கடலில் மூழ்கடித்திருக்கிறது.

ட்ரம்ப்

இது தொடர்பாக ராணுவ அதிகாரிகளிடம் பேசியபோது, 'ஈரானின் ட்ரோன் மற்றும் ஏவுகணைத் திறன் முற்றிலுமாக இடிக்கப்படுகிறது. கடற்படை போய்விட்டது. அவை அனைத்தும் கடலின் அடிப்பகுதியில் கிடக்கின்றன. 46 கப்பல்கள்... உயர் தரமான கப்பல்கள் அவை' என்றார். நான், `உயர்மட்ட கப்பல் என்றால் அவற்றைக் கைப்பற்றியிருக்கலாமே... ஏன் கைப்பற்றவில்லை' என்று கேட்டேன்.

அவர், 'அவற்றை மூழ்கடிப்பது மிகவும் வேடிக்கையாக சுவாரஸ்யமாக இருந்தது' என்றார். அமெரிக்க இராணுவம் எதிரி முழுமையாகவும், தீர்க்கமாகவும் தோற்கடிக்கப்படும் வரை பின்வாங்காது.

ஹார்முஸ் ஜலசந்தி வழியாக நடைபெறும் எண்ணெய் விநியோகத்திற்கு ஈரான் முட்டுக்கட்டை போட்டால், இதுவரை நடத்தியதை விட 20 மடங்கு கடுமையான தாக்குதலை அமெரிக்கா தொடுக்கும். ஈரான் ஒரு தேசமாக மீண்டும் கட்டியெழுப்ப முடியாத அளவுக்கு அதன் இலக்குகள் அழிக்கப்படும். இது நடக்கக்கூடாது என விரும்புகிறேன்.

ஈரான் போர்க்கப்பல்
ஈரான் போர்க்கப்பல்

இது சீனாவிற்கும், ஹார்முஸ் ஜலசந்தியை அதிகமாகப் பயன்படுத்தும் அனைத்து நாடுகளுக்கும் அமெரிக்காவின் பரிசு. எனது இந்த முடிவு பெரிதும் பாராட்டப்படும் எனவும் நம்புகிறேன்." என்றார்

ட்ரம்பின் இந்த உரைக்கு பதிலளித்த ஈரான் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC) செய்தித் தொடர்பாளர்,``அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல்கள் தொடர்ந்தால் ஒரு லிட்டர் எண்ணெய் கூட இப்பகுதியை விட்டு வெளியேற அனுமதிக்க மாட்டோம். போரின் முடிவை நாங்கள்தான் தீர்மானிப்போம்" எனத் தெரிவித்திருக்கிறது.

தமிழகத்தின் பொறுப்பு ஆளுநராக பதியேற்ற ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்! - யார் இவர்?

தமிழகத்தின் பொறுப்பு ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் இன்று (மார்ச்.12) பதவியேற்றிருக்கிறார்.தமிழக ஆளுநராக இருந்த ஆர்.என்.ரவி, மேற்கு வங்க மாநிலத்திற்கு மாற்றப்பட்டிருக்கிறார். இதையடுத்து கேரள ஆளு... மேலும் பார்க்க

தூத்துக்குடி சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்: 'பாதுகாப்பு எங்கே? இப்படி ஒரு ஆட்சி தேவையா?'- விஜய் காட்டம்

தூத்துக்குடி மாவட்டம் வேடநத்தம் பகுதியில் 12-ம் வகுப்பு மாணவி ஒருவர் , படுகொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிலையில் தவெக தலைவர் விஜய் இந்த சம்பவத்திற்கு எதிராக க... மேலும் பார்க்க

ஸ்டாலின்: கழுத்தை நெறித்த கூட்டணிக் கட்சிகள்; புகைச்சலில் நிர்வாகிகள்! - தி.மு.க போடும் ஸ்கெட்ச்!

தி.மு.க கூட்டணியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, கடந்த 9-3-2026 அன்று அறிவாலயத்தில் இரண்டாம் கட்ட தொகுதி உடன்பாடு பேச்சுவார்த்தையை நடத்தியது. பேச்சுவார்த்தை முடிந்ததும், “எங்கள் கட்சியின் உயர்... மேலும் பார்க்க

ஐநா: ஈரானுக்கு எதிராக வாக்களித்த இந்தியா; வெளிநடப்பு செய்த ரஷ்யா, சீனா! - என்ன நடந்தது!

அமெரிக்கா- இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது போர் தொடங்கி இன்று 13 நாள்கள் ஆகிவிட்டது. ஈரான் மீதான இஸ்ரேலிய தாக்குதல்களைத் தொடர்ந்து, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு ஆதரவாக இருக்கும் வளைகுடா நாடுகள் மீது ஈரான்... மேலும் பார்க்க

புதுச்சேரி: ஆளுநர் மாளிகைக்குள் `குடி’மகன் குறட்டைவிட்ட விவகாரம்! - காவலர்கள் ஆயுதப்படைக்கு மாற்றம்

ஆடைகளை கழற்றிவிட்டு அயர்ந்து தூக்கம்!புதுச்சேரி செயிண்ட் மார்ட்டின் வீதியில் இருக்கும் பழமையான ஆளுநர் மாளிகையில் கடந்த சில மாதங்களாக பராமரிப்புப் பணி நடைபெற்று வருகிறது. அதனால், கடற்கரை சாலையில் கலாசா... மேலும் பார்க்க

`டேமேஜை சரிக்கட்டும் அன்பில்? டு வாய்திறக்காத சிட்டிங் MLA-க்கள்; கொதிக்கும் சிறுத்தைகள்' | கழுகார்

கொதிக்கும் சிறுத்தைகள்வாய்திறக்காத சிட்டிங் எம்.எல்.ஏ-க்கள்!தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் வி.சி.க - தி.மு.க இடையே நாளுக்கு நாள் கசப்பு மேலோங்கி வருகிறது. வி.சி.க மாணவரணி மாநில நிர்வாகி நெப்போலியன்... மேலும் பார்க்க