செய்திகள் :

`கரூர் ரௌடி கும்பல் துணையுடன் திமுக பணப்பட்டுவாடா’ – கோவை தெற்கு அதிமுக வேட்பாளர் பரபரப்பு புகார்!

post image

கோவை தெற்கு தொகுதி அ.தி.மு.க வேட்பாளர் அம்மன் அர்ச்சுணன், கோவை மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான பவன்குமாரைச் சந்தித்து ஒரு புகார் மனு அளித்தார். பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர் கூறியதாவது, “கோவை தெற்கு தொகுதி முழுக்க கரூரில் இருந்து வந்த 2 ஆயிரம் ரௌடிகள் பணப்பட்டுவாடா செய்து வருகின்றனர். வாக்காளர்களுக்கு மிரட்டிப் பணம் கொடுப்பதாக எங்களுக்குப் புகார் வந்தது. நாங்கள் பார்க்கச் சென்றபோது, எங்கள் கட்சிக்காரர்களைக் கடித்து வைத்துள்ளார்கள். அவர்கள் என்ன மிருகசாதியா? அவ்வளவு பசியா?

தேர்தல் ஜனநாயக முறைப்படி நடக்குமா என்பது சந்தேகமாக உள்ளது. நேற்று 8 இடங்களில் பணப்பட்டுவாடா செய்தது தொடர்பாக புகார் அளித்தும், இதுவரை வழக்கு பதிவுசெய்யவில்லை. ஓட்டுக்கு 5 ஆயிரம் ரூபாய் தருகிறார்கள். இன்று பரிசுப்பொருள்கள் தர உள்ளார்கள். மக்களைப் பாதுகாக்க வேண்டுமெனவும், பாரா மிலிட்டரி வைத்து தேர்தலை நடத்த வேண்டுமெனவும் கலெக்டரிடம் மனு அளித்தோம்.

அம்மன் அர்ச்சுணன் புகார்
அம்மன் அர்ச்சுணன் புகார்

இதே சூழல் இருந்தால் உங்களிடம் பணம் வங்காதவர்கள் எப்படி ஓட்டு போட வருவார்கள்? இது என்ன வியாபாரமா? மற்ற 233 தொகுதிகளில் இந்த மாதிரி நடக்கவில்லை. பணப்பட்டுவாடா தொடர்பாக புகார் அளித்தால் பறக்கும் படையினர் 2 மணி நேரத்திற்குப் பிறகுதான் சம்பவ இடத்திற்கு வருகிறார்கள். போலீஸ் இன்னும் தி.மு.க-விற்கு கைப்பாவையாகச் செயல்படுகிறது. இந்த போலீஸை வைத்து தேர்தல் நடத்தினால், நியாயமாக நடக்காது.

நீங்கள் ஸ்டாலின், உதயநிதி, செந்தில் பாலாஜி கன்ட்ரோலில் இல்லை, தேர்தல் ஆணைய கட்டுப்பாட்டில் இருக்கிறீர்கள் என்பதை உணர்ந்து வேலை செய்யுங்கள். பணப்பட்டுவாடா செய்தவர்களைப் பிடித்து தந்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அ.தி.மு.க. வாக்காளர்களுக்குப் பணம் தந்தால் பிடியுங்கள். தி.மு.க-வினர் பட்டப்பகலில் பணப்பட்டுவாடா செய்கிறார்கள். அவர்களை தப்பிக்க வைப்பதற்காக பறக்கும் படை தாமதமாக வருகிறது” என்றார்.

’டபுள் என்ஜின் மாநிலங்களின் வளர்ச்சி தமிழ்நாட்டில் இல்லை’ – சந்திரபாபு நாயுடு குற்றச்சாட்டு

கோவை கோல்ட்வின்ஸ் பகுதியில் உள்ள தனியார் ஹோட்டலில் தொழில் முனைவோர் மற்றும் முக்கியப் பிரமுகர்களுடன், ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மத்திய விமான போக்குவ... மேலும் பார்க்க

தொகுதி மக்கள் வழங்கும் அமோக ஆதரவு; வெற்றிபெறப் போகும் மண்ணச்சநல்லூர் 'செல்லப்பிள்ளை' கதிரவன்!

மண்ணச்சநல்லூர் தொகுதியின் செல்லப்பிள்ளையாக வலம் வரும் தி.மு.க வேட்பாளர் கதிரவன், வெற்றிக்கனியை ருசிக்கத் தயாராகிவிட்டார். காரணம், அவர் பிரசாரம் மேற்கொள்ளும்போது அலை அலையாகத் திரளும் கட்டற்ற கூட்டமும்,... மேலும் பார்க்க

"கோவை தெற்கு தொகுதி தேர்தலை ரத்து செய்ய வேண்டும்"- தேர்தல் ஆணையத்தில் பரபரப்பு புகார்; பின்னணி என்ன?

தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் பரப்புரை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், கோவையில் பல்வேறு பகுதிகளில் நேற்று முதல் தி.மு.க, அ.தி.மு.க. ஆகிய கட்சிகள் வாக்காளர்களுக்கு பணம் வழங்கி வருகின்றனர்.குறிப்பா... மேலும் பார்க்க

கோவை தெற்கில் ரூ.5 ஆயிரம் பட்டுவாடா செய்ததாக புகார்; நள்ளிரவு அடிதடி, தடியடியால் பரபரப்பு!

தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் பரப்புரை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், கோவையில் பல்வேறு பகுதிகளில் நேற்று முதல் தி.மு.க, அ.தி.மு.க. ஆகிய கட்சிகள் வாக்காளர்களுக்கு பணம் வழங்கி வருகின்றனர்.குறிப்பா... மேலும் பார்க்க

"தமிழ்நாட்டின் மிரட்டல் எப்படி இருக்கும் என்பதை பாராளுமன்றத்தில் காட்டியிருக்கிறோம்" – கமல்ஹாசன்

கோவை தெற்கு தொகுதி தி.மு.க. வேட்பாளர் செந்தில் பாலாஜியை ஆதரித்து, மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், "இந்தத் தொகுதியில் நான் நடந்து செல்லாத வீதிகளே இல்ல... மேலும் பார்க்க

``பெண்களுக்கு எதிரான தீய எண்ணத்தோடு இந்த மசோதாவை திமுக, காங்கிரஸ் தடுத்து விட்டது" - அமித்ஷா

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான இறுதிகட்ட வாக்கு சேகரிப்பில் பா.ஜ.க- வின் முக்கிய நிர்வாகிகள் ஈடுபட்டு வருகின்றனர். ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி தொகுதியின் பா.ஜ.க வேட்பாளர் கிருத்திகாவை ஆதரித்த... மேலும் பார்க்க