செய்திகள் :

கர்நாடகா முதல்வர் நாற்காலிக்கு மோதல்: காங்கிரஸ் மேலிட உத்தரவு; சித்தராமையா, DKS என்ன சொல்கிறார்கள்?

post image

கர்நாடகாவில் முதலமைச்சர் நாற்காலிக்கான போட்டி முற்றில் வருகிறது.

அதற்கு சாட்சி தான், நேற்று முன்தினம் (நவம்பர் 29) நடந்த 'வார்த்தை' போர்.

அதை காங்கிரஸ் மேலிடம் சற்றும் விரும்பவில்லை. இதனால், கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையா மற்றும் கர்நாடகா துணை முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் ஆகிய இருவரிடமும் காங்கிரஸ் மேலிடம் பேசியுள்ளது.

இருவரும் சமாதானமாக செல்லவும், இனி டெல்லியில் எந்தவொரு சந்திப்பும் நடைபெற்றாலும் இரு தலைவர்களும் ஒற்றுமையாக கலந்துகொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.

சித்தராமையா - டி.கே சிவக்குமார்
சித்தராமையா - டி.கே சிவக்குமார்

சித்தராமையா முதல் அடி

இதையடுத்து முதல் அடியை சித்தராமையா எடுத்து வைத்துள்ளார். அது குறித்து அவர் கூறியுள்ளதாவது, "இருவரும் சமாதானமாக செல்லுமாறும், இந்தப் பிரச்னை குறித்து இருவரும் பேசிக்கொள்ளவும் மேலிடம் கூறியுள்ளது.

இதனால், டி.கே.சிவக்குமாரை உணவருந்த அழைத்துள்ளேன். அவர் வரும்போது, இந்தப் பிரச்னை குறித்து நாங்கள் பேசுவோம்.

ஆனால், என்னுடைய கருத்தில் எனக்கு எந்த மாற்றமும் இல்லை. காங்கிரஸ் மேலிடம் என்ன சொல்கிறதோ, அதை நான் கேட்பேன், மதிப்பேன். அவர்கள் என்னை டெல்லிக்கு அழைத்தாலும், அங்கே செல்வேன்" என்று பேசியுள்ளார்.

டி.கே.சிவக்குமார் என்ன சொல்கிறார்?

டி.கே சிவக்குமாரோ, "கட்சி உறுப்பினர்கள் அடுத்து என்ன நடக்கும் என்று ஆர்வமாக இருக்கலாம். ஆனால், எனக்கு எந்தவொரு அவசரமும் இல்லை. கட்சி தான் முடிவு எடுக்கும்" என்று கூறியுள்ளார்.

திருப்பரங்குன்றம்: ``நீதிமன்ற உத்தரவை இந்து விரோத திமுக அரசு செயல்படுத்த வேண்டும்" - அண்ணாமலை

வருடந்தோறும் கார்த்திகை தீபம் தினத்தன்று திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றப்படும் உச்சிப் பிள்ளையார் கோயிலின் தீபத் தூணில் நேற்று (டிசம்பர் 3) தீபம் ஏற்றப்பட்டது.ஆனால், இந்து தமிழர் கட்சியின் ராம ர... மேலும் பார்க்க

திருப்பரங்குன்றம்: "நீதிமன்ற தீர்ப்பை நிறைவேற்றாதது ஏன்?" - அமைச்சர் ரகுபதி விளக்கம்!

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்ற வேண்டுமென எழுந்த கோரிக்கையும் அதைத்தொடர்ந்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அளித்த தீர்ப்பும் பேசுபொருளாகியிருக்கிறது. இந்த சூழலில் தமிழ்நாடு அரசு நீத... மேலும் பார்க்க

திருப்பரங்குன்றம்: ``தேவையில்லாத பதற்றத்தை உண்டாக்க திமுக கபட நாடகம்" - எடப்பாடி பழனிசாமி கண்டனம்

வருடந்தோறும் கார்த்திகை தீபம் தினத்தன்று திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றப்படும் உச்சிப் பிள்ளையார் கோயிலின் தீபத் தூணில் நேற்று (டிசம்பர் 3) தீபம் ஏற்றப்பட்டது.ஆனால், இந்து தமிழர் கட்சியின் ராம ர... மேலும் பார்க்க

'இவர்கள் சிக்கந்தர் தர்காவையே தரைமட்டமாக்கி விடுவார்கள்!' - கொதிக்கும் பெ.சண்முகம் | பேட்டி

திருப்பரங்குன்றத்தில் நேற்று பதட்டமான சூழல் நிலவிய நிலையில், மனுதாரர் கேட்ட இடத்திலேயே தீபம் ஏற்ற மதுரை உயர்நீதிமன்றம் மீண்டும் உத்தரவிட்டுள்ளது. பரபரப்பான இந்த சூழலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிய... மேலும் பார்க்க

Madurai, Coimbatore Metro: நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பிய தயாநிதி மாறன்!

சென்னையைத் தொடர்ந்து கோவை மற்றும் மதுரை மாநகரங்களில் மெட்ரோ போக்குவரத்து வசதியை அமைக்க தமிழ்நாடு அரசு வகுத்த திட்டத்தை சமீபத்தில் திருப்பி அனுப்பியது மத்திய அரசு. Metro திட்டம் நிராகரிப்பு: மத்திய அரச... மேலும் பார்க்க

திண்டுக்கல்: `கோயில் தீபம் விவகாரம்'- ஒரே சமூகத்தினரிடையே பிரச்னை; 144 தடை உத்தரவு- என்ன நடந்தது?

திண்டுக்கல் மாவட்டம், சின்னாளப்பட்டி அருகே உள்ள பெருமாள் கோயில் பட்டியில் வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்த இந்து மக்கள் மற்றும் கிறிஸ்துவ மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இப்பகுதியில் மண்டு கருப்பணசாமி கோயில... மேலும் பார்க்க