செய்திகள் :

`கலாம் ஐயா வழியில் வந்தவன் நான்; ஒரு லட்சம் பேருக்கு பயிற்சி; ஆக்., 15-ல் அறிவிப்பு!' - அண்ணாமலை

post image

முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ஏ.பி.ஜெ.அப்துல் கலாம், கடந்த 2015-ஆம் ஆண்டு மேகாலாயா மாநிலத்தில் மாணவர்களிடையே உரையாற்றிக் கொண்டிருந்தபோது இயற்கை எய்தினார். அவர் உடல் ராமேஸ்வரம் அருகில் உள்ள பேய்கரும்பு கிராமத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. இங்கு மத்திய பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் சார்பில் அப்துல் கலாமிற்கு தேசிய நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது.

இங்கு ஆண்டுதோறும் அவரது பிறந்த நாள், நினைவு நாளில் சிறப்பு துவா நடத்தப்படுவது வழக்கம். இது தவிர ராமேஸ்வரம் வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் மாணவர்கள் இங்கு வந்து நினைவிடத்தைப் பார்வையிட்டு செல்கின்றனர். இதுவரை சுமார் 2 கோடி பார்வையாளர்கள் வந்து சென்றுள்ளனர்.

அப்துல்கலாம் நினைவிடம்

இந்நிலையில் அப்துல் கலாமின் 11-வது நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி அவரது நினைவிடம் மலர்கள் மற்றும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இன்று காலை அவரது நினைவிடத்தில் கலாம் குடும்பத்தினர் சிறப்பு துவா நடத்தி மரியாதை செலுத்தினர்.

இதில் வீ த லீடர்ஸ் அமைப்பின் தலைமை பொறுப்பாளர் அண்ணாமலை, பா.ஜ.க தேசிய சிறுபான்மை பிரிவு தலைவர் ஜலால் சித்திக், பா.ஜ.க மாவட்ட தலைவர் முரளிதரன், முன்னாள் மாவட்ட தலைவர் தரணி முருகேசன், கவுன்சிலர் சங்கர் மற்றும் கலாமின் அண்ணன் மகள் நசீமா மரைக்காயர், பேரன்கள் ஷேக் தாவுத், ஷேக் சலீம்  உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அஞ்சலி செலுத்திய மாவட்ட ஆட்சியர் சிவகுரு பிரபாகரன்

இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் சிவகுரு பிரபாகரன், அரசின் சார்பில் கலாம் நினைவிடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். ராமநாதபுரம் எம்.எல்.ஏ காதர்பாட்சா முத்துராமலிங்கம், நகர்மன்றத் தலைவர் நாசர் கான் உள்ளிட்ட தி.மு.க-வினர் அஞ்சலி செலுத்தினர். இதேபோல் ராமேஸ்வரம் அரசு மேல்நிலைப்பள்ளியின் சார்பில் இளையோர் செஞ்சிலுவை சங்க மாணவர்கள் அதன் பொறுப்பாசிரியர் தினகரன் தலைமையில் அஞ்சலி செலுத்தி மரியாதை செய்தனர்.

அப்துல்கலாம் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பின் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, ''அய்யா அப்துல் கலாம் அவர்கள் அரசியலில் நெறிமுறை இருக்க வேண்டும் என கனவு கண்டார். அவரது வழியில் வந்த நான் அவர் கண்ட கனவை நிறைவேற்றும் வகையில் புதிய அமைப்பினை துவங்கியுள்ளேன். அந்த அமைப்பின் மூலம் அய்யாவின் பிறந்த தினத்தில் புதிய பயிற்சி மையம் ஒன்றை துவக்க உள்ளோம். அதில் வருங்கால மாணவர்களுக்கு அரசியல் நெறிமுறைகளை கற்றுத் ததர உள்ளோம். சுமார் ஒரு லட்சம் பேருக்கு இந்தப் பயிற்சியினை வழங்க இருக்கிறோம். இதற்கான செயல் திட்டங்கள் குறித்து அக்டோபர் 15 அன்று அறிவிப்பேன்'' என்றார்.

மதுரை: `எந்த layout வந்தாலும் என்னிடம் அப்ரூவல் வாங்கிய பிறகே அனுமதி'- எம்எல்ஏ கார்த்திகேயன்

மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆலத்தூர் ஊராட்சியில் சுதந்திர தினத்தையொட்டி நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் த.வெ.க சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன் கலந்துகொண்டு பொதுமக்களின் கோரிக்கை மனுக்கள... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூர்: 88 மணி நேர தாக்குதலின் ரகசியங்களை முதன்முறையாக உடைத்த அஜித் தோவல்!

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலடியாக இந்தியா நடத்திய 88 மணி நேர ‘ஆபரேஷன் சிந்தூர்’ ராணுவ நடவடிக்கை குறித்து தேசிய பாதுகாப்பு ஆலோசகர் (NSA) அஜித் தோவல் முதன்முறையாக விரிவாக பேசியிருக்கிறார். ... மேலும் பார்க்க

சுட்டுக் கொல்லப்பட்ட தமிழர்கள்: ``தமிழ்நாடு அரசு கண்டனம் தெரிவிக்க வேண்டும்" - சிபிஎம் சண்முகம்

கர்​நாடக மாநிலம், சாம்​ராஜநகர் மாவட்​டத்​தில் உள்ள ஹனூர் அரு​கில், காவிரி வனவிலங்கு சரணால​யத்​துக்கு உட்​பட்ட ஷாக்யா வனப்​பகுதி உள்​ளது. நேற்று அதி​காலை 5 மணி​யள​வில் தோமை​யார்​பாளை​யத்தை ஒட்​டி​யுள்ள... மேலும் பார்க்க

அமுதன் கொலை: ``பெற்றோரின் புகாரைப் பெற மறுத்த குற்றச்சாட்டில் உண்மையில்லை" - அமைச்சர் சம்பத் குமார்

கோயம்புத்தூர் மாவட்டம், கோயம்புத்தூர்-பொள்ளாச்சி சாலையில் உள்ள பிரபல கல்வி நிறுவனத்தில் மூன்றாம் ஆண்டு படித்து வந்த மாணவர் அமுதன் தனது நண்பருடன் நடந்துச் சென்றுகொண்டிருந்தபோது அவர்களை வழிமறித்து சக மா... மேலும் பார்க்க

அமுதன் கொலை: ``இதற்கு பிறகும் வாயைத் திறக்காமல் மயக்கத்தில் இருக்குறீர்களே CM sir?"- அப்பாவு காட்டம்

கோயம்புத்தூர் மாவட்டம், கோயம்புத்தூர்-பொள்ளாச்சி சாலையில் உள்ள பிரபல கல்வி நிறுவனத்தில் மூன்றாம் ஆண்டு படித்து வந்த மாணவர் அமுதன் தனது நண்பருடன் நடந்துச் சென்றுகொண்டிருந்தபோது அவர்களை வழிமறித்து சக மா... மேலும் பார்க்க