செய்திகள் :

கோவை: சட்டவிரோதமாக மின்வேலியில் பாய்ச்சப்பட்ட மின்சாரம் - துடிதுடித்து உயிரை விட்ட காட்டு யானை!

post image

கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் தென்மேற்கு பருவ மழை பொய்த்ததின் காரணமாக, வனப்பகுதிக்குள் உணவு மற்றும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக உணவு மற்றும் தண்ணீர் தேடி யானை உள்ளிட்ட வன விலங்குகள் இரவு நேரங்களில் அருகில் உள்ள கிராமத்திற்குள் நுழைவது அதிகரித்துள்ளது. இந்நிலையில் நேற்றிரவு வனப்பகுதியில் இருந்து வெளியே வந்த ஒற்றை ஆண் காட்டு யானை, மேட்டுப்பாளையம் அருகே வேடர் காலனியில் குமார் என்பவர் தோட்டத்திற்குள் புகுந்துள்ளது.

காட்டு யானை
காட்டு யானை

அப்போது எதிர்பாராத விதமாக தோட்டத்தைச் சுற்றிலும் பாதுகாப்பிற்காக அமைக்கப்பட்ட மின்சார வேலியில் காட்டு யானை சிக்கி பரிதாபமாக உயிரிழந்தது. இது குறித்து தகவல் அறிந்த சிறுமுகை வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். அதில் குமாரின் தோட்டத்தை பாக்யராஜ் என்பவர் குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருவதும், சட்ட விரோதமாக  உயர் அழுத்த மின்சாரத்தை மின்வேலியில் நேரடியாக செலுத்தியதே காட்டு யானை உயிரிழப்பிற்கு காரணம் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து தோட்ட உரிமையாளர் குமார் மற்றும் குத்தகைதாரர் பாக்கிரராஜ் ஆகியோரைப் பிடித்து வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர். இந்தச் சம்பவம் வன ஆர்வலர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புளிய மரக்கன்றுகளை நட்டு குறுங்காடு - பசுமைப் பரப்பை அதிகரிக்க ஆர்வம் காட்டும் வேலூர் இளைஞர்!

ராணிப்பேட்டை மாவட்டம், கலவை அருகேயுள்ள கீராம்பாடி கிராமத்தில் `குறுங்காடு’ உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார் இயற்கை தன்னார்வலரும் வேலூரைச் சேர்ந்தவருமான தினேஷ் சரவணன். இதற்காக, ஊராட்சி நிர்வா... மேலும் பார்க்க

கோவை: கூண்டில் சிக்காமல் போக்கு காட்டிய காட்டுப்பன்றிகள்; சுட்டுக் கொன்ற வனத்துறை

கோவை மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய வனப்பகுதிகளில் காட்டு யானை, காட்டுப்பன்றி உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன. இவை உணவு மற்றும் தண்ணீர் தேடி கிராமப்பகுதிகளுக்குள் நுழைவது அதிகரித்து வருகிறது... மேலும் பார்க்க

Ooty: பூச்சிகளால் முடங்கும் இயல்பு வாழ்க்கை; கடையடைப்பு போராட்டம்; என்ன நடக்கிறது ஊட்டியில்?

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மற்றும் குன்னூர் சுற்றுவட்டாரப்‌ பகுதிகளில் புதிதாக பூச்சியினம் ஒன்று குடியிருப்புப் பகுதிகளை நோக்கி படையெடுத்து வருகின்றன. ஒவ்வொரு வீடுகளிலும் லட்சக்கணக்கில் படையெடுக்கும் ... மேலும் பார்க்க

கருமந்தி: மேற்குத் தொடர்ச்சி மலையில் அடர் வனத்தில் அரிதாக காணப்படும் கருங்குரங்குகள் | Photo Album

மேற்கு தொடர்ச்சி மலையில் காணப்படும் கருங்குரங்குகள்கருங்குரங்குகள் (கருமந்தி)கருங்குரங்குகள் (கருமந்தி)கருங்குரங்குகள் (கருமந்தி)கருங்குரங்குகள் (கருமந்தி)கருங்குரங்குகள் (கருமந்தி)கருங்குரங்குகள் (கர... மேலும் பார்க்க

Kurinji: 'நீலக் கம்பளம் விரித்தார் போல்...' - பூத்துக்குலுங்கும் நீலக்குறிஞ்சி மலர்கள்!

நீலக்குறிஞ்சி மலர்கள் (Strobilanthes)‌ மலையெங்கும் பூத்துக்குலுங்கி நீல நிறத்தில் காட்சியளிப்பதாலேயே நீலகிரி என்று காரணப்பெயரை கொண்டிருக்கிறது நீலகிரி மலை. குறிஞ்சி மலையான இங்கு ஆண்டுக்கு ஒருமுறை பூக்... மேலும் பார்க்க

விழுப்புரம்: மரக்காணம் பகுதியில் அதிகளவில் அரிதான நீர் வாத்துகள் | Photo Album

கழுவேலியில் நீர் வாத்துகள்கழுவேலியில் நீர் வாத்துகள்கழுவேலியில் நீர் வாத்துகள்கழுவேலியில் நீர் வாத்துகள்கழுவேலியில் நீர் வாத்துகள்கழுவேலியில் நீர் வாத்துகள்கழுவேலியில் நீர் வாத்துகள்கழுவேலியில் நீர் வ... மேலும் பார்க்க