செய்திகள் :

காஞ்சிபுரம்: குப்பைக் கிடங்காக மாறிய பஞ்சுப்பேட்டை சாலை; கண்டுகொள்ளாத மாநகராட்சி

post image

காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பஞ்சுப்பேட்டை சாலை எப்போதும் பரபரப்பாக இருக்கும்.

அச்சாலையின் அருகே குப்பைகள் அதிகம் வீசப்பட்டு அவ்விடம் குப்பைக் கிடங்கைப் போல் காட்சியளிக்கிறது.

இரண்டு அல்லது மூன்று வருடங்களுக்கு முன்பு சுத்தமாக இருந்த இடம் தற்போது குப்பை மேடாகவே மாறிவிட்டது.

அவ்வழியே செல்லும் மக்கள் எப்போதும் மூக்கை மூடிக்கொண்டு சென்ற நிலையிலேயே நடந்து செல்கின்றனர்.

அக்குப்பைக் கிடங்கின் அருகிலேயே கோவில், சிறப்புக் பராமரிப்பு மின் நிலையம், துணை மின் நிலையம், தீயணைப்பு நிலையம், சுகாதார மையம் உள்ளன.

பஞ்சுப்பேட்டை சாலை
பஞ்சுப்பேட்டை சாலை

அவ்வலுவலக ஊழியர்கள், அவ்வலுவலகத்திற்குச் செல்லும் மக்கள், அவ்வழியே செல்லும் ஊர் மக்கள் என அனைவரும் கடக்க முடியாமல் அவ்விடத்தை மூக்கை மூடிக்கொண்டு கடந்து செல்கிறார்கள்.

கறிக்கடைகளில் மீர்ந்து போகும் கழிவுகளும் இங்கு கொட்டப்படுகின்றன. பஞ்சுப்பேட்டை மக்கள் மட்டும் இன்றி, சுற்று வட்டார மக்களும் வாகனங்களில் போகும்போது குப்பையை வீசிவிட்டு செல்கின்றனர் என அங்குள்ள மக்கள் கூறினர்.

இது மட்டும் இன்றி மழைக்காலங்களில் மழைநீருடன் அக்குப்பைகளும் சாலையில் மிதந்து பரவி கிடக்கும். அவ்விடத்தைக் கடக்கவே கடினமாக இருக்கும் எனவும் அங்குள்ள மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

இதைப் பற்றி அங்குள்ள சுகாதார மையத்தில், ''அவ்விடத்தைச் சுத்தம் செய்ய மாட்டார்களா?'' என்று கேட்டபோது அதற்கு அவர்கள், ''மாதம் ஒருமுறை TPC(Municipality Workers) சுகாதாரத் தூய்மை பணியாளர்கள் வந்து சுத்தம் செய்துவிட்டு செல்வார்கள். இருந்தாலும் மறுபடியும் குப்பைகள் அதிகம் வீசப்பட்டு குப்பைக் கிடங்காக மாறிவிடும். இதனால் கொசுத்தொல்லை மற்றும் நோய் தொற்றுகள் வர வாய்ப்புள்ளது'' என கூறினார்கள்.

பஞ்சுப்பேட்டை சாலை
பஞ்சுப்பேட்டை சாலை

இதுகுறித்து அப்பகுதி கவுன்சிலிரிடம் கேட்டபோது, இதைத் தடுக்க ஒரு மதில் சுவர் கட்டப் போவதாகக் கூறினார்.

அவ்விடம் பார்ப்பதற்குச் சுகாதாரமின்மையின் உச்சமாகப் பிரதிபலிக்கிறது. அங்கு வீசும் துர்நாற்றமும், குப்பைகளை எரிக்கும்போது வரும் புகையால் மக்கள் அவதிப்படுகின்றனர். எனவே மாவட்ட ஆட்சியர் இப்பிரச்னையைச் சரிசெய்ய வேண்டும் என்பது மக்களின் கோரிக்கையாக உள்ளது.

"மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தாமல் எப்படி?"- மெட்ரோ ரயில் நிராகரிப்புக்கு மாணிக்கம் தாகூர் கண்டனம்

கோவை, மதுரை நகரங்களுக்கான மெட்ரோ ரயில் திட்டத்தை மீண்டும் நிராகரித்திருப்பதற்கு தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் கண்டனம் தெரிவித்திருக்கிறார். மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்தும் அளவுக்கு மக்... மேலும் பார்க்க

சர்வதேச மீடியாவின் கவனத்தை ஈர்த்த போராட்டம்; பிரதானை இழக்க பாஜக சம்மதிக்கக் காரணமான 72 மணிநேர கெடு

நீட் தேர்வு முறைகேடு விவகாரத்தில் டெல்லியில் காக்ரோச் ஜனதா கட்சியினர் நடத்திய மாணவர்கள் போராட்டம் வெற்றிகரமாக முடிவுக்கு வந்துள்ளது. மாணவர்களின் பிரதான கோரிக்கையான மத்திய அமைச்சர் பதவியில் இருந்து தர்... மேலும் பார்க்க

Zoho: ``நான் மத்திய அரசுக்கு ஆதரவாக இருக்கிறேனா?'' - கொந்தளிக்கும் ஸ்ரீதர் வேம்பு

நீட் வினாத்தாள் கசிவு, அரசுத் தேர்வுகள் குளறுபடி உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து, டெல்லி ஜந்தர் மந்தரில் காக்ரோச் ஜனதா கட்சி (சிஜேபி) தலைமையிலான இளைஞர் போராட்டம் நடந்தது. போராட்டம் தீவிரம... மேலும் பார்க்க

கோவை: கோனியம்மன் கோவிலில் உண்டியல் பணம் திருட்டு; 8 பேர் பணிநிடை நீக்கம்

கோவையின் காவல் தெய்வமாகக் கருதப்படும் கோனியம்மன் கோவில், டவுன்ஹால் பகுதியில் அமைந்துள்ளது. அந்தக் கோவிலில் 9 இடங்களில் நிரந்தர உண்டியல்களும், 7 இடங்களில் தற்காலிக உண்டியல்களும் என 16 இடங்களில் உண்டியல... மேலும் பார்க்க

"முதல்வராகும் அனைத்து தகுதிகளும் சரத்குமாருக்கு உள்ளன" - நயினார் நாகேந்திரன் பாராட்டு

நடிகரும் பாஜக நிர்வாகியுமான சரத்குமாரின் பிறந்தநாள் விழா திருநெல்வேலியில் நேற்று ( ஜூலை.25) நடைபெற்றது.இந்த விழாவில், பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்... மேலும் பார்க்க

கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டம்; மீண்டும் நிராகரித்த மத்திய அரசு

கோவை, மதுரை நகரங்களுக்கான மெட்ரோ ரயில் திட்டத்தை மீண்டும் நிராகரித்திருக்கிறது மத்திய அரசு. சென்னையைத் தொடர்ந்து, மதுரை, கோவை உள்ளிட்ட நகரங்களிலும் மெட்ரோ ரயில் திட்டத்தைச் செயல்படுத்த தமிழக அரசு திட்... மேலும் பார்க்க