செய்திகள் :

காஞ்சிபுரம்: குப்பைக் கிடங்காக மாறிய பஞ்சுப்பேட்டை சாலை; கண்டுகொள்ளாத மாநகராட்சி

post image

காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பஞ்சுப்பேட்டை சாலை எப்போதும் பரபரப்பாக இருக்கும்.

அச்சாலையின் அருகே குப்பைகள் அதிகம் வீசப்பட்டு அவ்விடம் குப்பைக் கிடங்கைப் போல் காட்சியளிக்கிறது.

இரண்டு அல்லது மூன்று வருடங்களுக்கு முன்பு சுத்தமாக இருந்த இடம் தற்போது குப்பை மேடாகவே மாறிவிட்டது.

அவ்வழியே செல்லும் மக்கள் எப்போதும் மூக்கை மூடிக்கொண்டு சென்ற நிலையிலேயே நடந்து செல்கின்றனர்.

அக்குப்பைக் கிடங்கின் அருகிலேயே கோவில், சிறப்புக் பராமரிப்பு மின் நிலையம், துணை மின் நிலையம், தீயணைப்பு நிலையம், சுகாதார மையம் உள்ளன.

பஞ்சுப்பேட்டை சாலை
பஞ்சுப்பேட்டை சாலை

அவ்வலுவலக ஊழியர்கள், அவ்வலுவலகத்திற்குச் செல்லும் மக்கள், அவ்வழியே செல்லும் ஊர் மக்கள் என அனைவரும் கடக்க முடியாமல் அவ்விடத்தை மூக்கை மூடிக்கொண்டு கடந்து செல்கிறார்கள்.

கறிக்கடைகளில் மீர்ந்து போகும் கழிவுகளும் இங்கு கொட்டப்படுகின்றன. பஞ்சுப்பேட்டை மக்கள் மட்டும் இன்றி, சுற்று வட்டார மக்களும் வாகனங்களில் போகும்போது குப்பையை வீசிவிட்டு செல்கின்றனர் என அங்குள்ள மக்கள் கூறினர்.

இது மட்டும் இன்றி மழைக்காலங்களில் மழைநீருடன் அக்குப்பைகளும் சாலையில் மிதந்து பரவி கிடக்கும். அவ்விடத்தைக் கடக்கவே கடினமாக இருக்கும் எனவும் அங்குள்ள மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

இதைப் பற்றி அங்குள்ள சுகாதார மையத்தில், ''அவ்விடத்தைச் சுத்தம் செய்ய மாட்டார்களா?'' என்று கேட்டபோது அதற்கு அவர்கள், ''மாதம் ஒருமுறை TPC(Municipality Workers) சுகாதாரத் தூய்மை பணியாளர்கள் வந்து சுத்தம் செய்துவிட்டு செல்வார்கள். இருந்தாலும் மறுபடியும் குப்பைகள் அதிகம் வீசப்பட்டு குப்பைக் கிடங்காக மாறிவிடும். இதனால் கொசுத்தொல்லை மற்றும் நோய் தொற்றுகள் வர வாய்ப்புள்ளது'' என கூறினார்கள்.

பஞ்சுப்பேட்டை சாலை
பஞ்சுப்பேட்டை சாலை

இதுகுறித்து அப்பகுதி கவுன்சிலிரிடம் கேட்டபோது, இதைத் தடுக்க ஒரு மதில் சுவர் கட்டப் போவதாகக் கூறினார்.

அவ்விடம் பார்ப்பதற்குச் சுகாதாரமின்மையின் உச்சமாகப் பிரதிபலிக்கிறது. அங்கு வீசும் துர்நாற்றமும், குப்பைகளை எரிக்கும்போது வரும் புகையால் மக்கள் அவதிப்படுகின்றனர். எனவே மாவட்ட ஆட்சியர் இப்பிரச்னையைச் சரிசெய்ய வேண்டும் என்பது மக்களின் கோரிக்கையாக உள்ளது.

மாணவர்கள் போராட்டம் குறித்த சுற்றறிக்கை: "பாசிச அரசியலைத் தொடங்க ஆழம் பார்த்ததா தவெக அரசு?"- கனிமொழி

காக்ரோச் ஜனதா கட்சி மற்றும் இடதுசாரி போராட்டங்களில் மாணவர்கள் பங்கேற்பதைத் தடுக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. ஆனால் இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து சில நிமிடங்களிலேயே இந்த ... மேலும் பார்க்க

`ஆளுங்கட்சி ஆகிவிட்டோம்' தவெக கூட்டணியை உறுதி செய்த திருமா; பாமக-வுக்கு வைத்த செக்! - பின்னணி என்ன?

தவெக அமைச்சரவையில் அமைச்சர் வன்னி அரசு இடம்பெற்றிருந்தாலும் எந்தக் கூட்டணியில் விசிக இருக்கிறது என்பதை தெளிவாக கூறாமல் திருமாவளவன் குழப்பி வந்தார். 'திமுகவுடன் எங்களது நட்பு தொடர்கிறது' என்று திமுகவிற... மேலும் பார்க்க

மேகமலை: `துணை ராணுவப் படையை அனுப்ப நேரிடும்; முழுமையாக இடித்து அகற்றுங்கள்'- உச்ச நீதிமன்றம் அதிரடி

மேகமலை புலிகள் சரணாலயம் மற்றும் மாஞ்சோலையைச் சுற்றியுள்ள பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளையும், இலவம் பஞ்சு தோட்டங்களையும் முழுமையாக அப்புறப்படுத்த உச்ச நீதிமன்றம் மிகக் கடுமையான உத்... மேலும் பார்க்க

`முதலமைச்சரை மிஞ்சிய சூப்பர் பவரின் கையில் ஆட்சி இருக்கிறதா?'- திமுக கேள்வி

`முதலமைச்சரை மிஞ்சிய சூப்பர் பவரின் கையில் ஆட்சி இருக்கிறதா?' என திமுக கேள்வி எழுப்பியிருக்கிறது.இது தொடர்பாக வெளியாகியிருக்கும் அறிக்கையில், `நேற்றைய தினம் அதிகார ஆணவத்திமிரோடு, “திண்டுக்கல் மாவட்டம்... மேலும் பார்க்க

`மூன்று தமிழர்களைச் சுட்டுக் கொன்றுவிட்டு, ஆணவத்தோடு டி.கே.சிவக்குமார் பேசுவதா?' - சீமான் கண்டனம்

`கர்நாடக வனப்பகுதியில் மூன்று அப்பாவித்தமிழர்களை ஈவிரக்கமற்றுச் சுட்டுக்கொன்றுவிட்டு, எங்கள் மாநிலத்தின் விவகாரத்தில் தலையிடாது, உங்கள் வேலையைப் பாருங்கள் எனத் துளியும் குற்றவுணர்ச்சியோ, பொறுப்புணர்ச்... மேலும் பார்க்க

"அந்தத் தண்ணீரைக் குடிக்கிறாங்க, கோயிலுக்கு அபிஷேகம் பண்றாங்க" - கூவம் நதி குறித்து சௌமியா அன்புமணி

தமிழக சட்டப்பேரவையில் இன்று நிதிநிலை அறிக்கை, நீர்வளம், ஊரக வளர்ச்சி, சுற்றுலாத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சட்டமன்ற விவாதத்தின்போதுபேசிய பாமக எம்எல்ஏ சௌமியா அன்ப... மேலும் பார்க்க