செய்திகள் :

காட்டிக்கொடுத்த டி.என்.ஏ. சோதனை; வாய்பேச முடியாத மகளை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய தந்தை

post image

மும்பை தென்பகுதியில் வசிக்கும் வாய்பேச முடியாத 20 வயது பெண் வயிற்று வலியால் அவதிப்பட்டார். இதனால் அவர் சைகை மூலம் தனது பாட்டியிடம் தெரிவித்தார். வயிற்றில் பூச்சிகள் ஊர்வது போன்று இருப்பதாக தெரிவித்தார். இதையடுத்து காமா மருத்துவமனையில் அப்பெண் சேர்க்கப்பட்டார். அவரை டாக்டர்கள் சோதித்தபோது அப்பெண் 5 மாதம் கர்ப்பமாக இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து மருத்துவமனை நிர்வாகம் இது குறித்து போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். போலீஸார் அப்பெண்ணிடம் பேசியபோது அவரால் பதில் சொல்ல முடியவில்லை.

அப்பெண்ணின் தந்தையிடம் விசாரித்தபோது, `எப்படி கர்ப்பமானார் என்பது குறித்து தனக்கு தெரியாது' என்று தெரிவித்தார். அதோடு பாலியல் வன்கொடுமை செய்யப்பட வாய்ப்பு இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும், இச்சம்பவம் குறித்து போலீஸிலும் புகார் செய்ய தயாராக இல்லை. அப்பெண்ணிற்கு கவுன்சிலிங் கொடுத்த பிறகு இச்சம்பவம் குறித்து போலீஸில் புகார் கொடுக்க சம்மதித்தார். அப்பெண் கொடுத்த தகவலின் அடிப்படையில் 17 வயது வாலிபர் உட்பட இரண்டு பேரை கைது செய்தனர்.

அதோடு சந்தேகப்படும் 17 பேரிடம் டி.என்.ஏ.மாதிரிகள் எடுக்கப்பட்டு சோதிக்கப்பட்டது. இதில் பெண்ணின் தந்தையும் அடங்கும். பெண்ணின் வயிற்றில் இருக்கும் குழந்தையின் டி.என்.ஏ.மாதிரி எடுத்து அதோடு யாரது டி.என்.ஏ.ஒத்துக்போகிறது என்பது குறித்து ஆய்வு செய்ததில் பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை டி.என்.ஏ. ஒத்துப்போனது. அதன் அடிப்படையில் அப்பெண்ணின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.

ஏற்கனவே கைது செய்யப்பட்ட இரண்டு பேருக்கு இதில் எந்த வகையில் தொடர்பு இருக்கிறது என்பது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து செப்டம்பர் மாதம் வரை அப்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளது விசாரணையில் தெரிய வந்தது.

திருமணம் கடந்த உறவு; இடையூறாக இருந்ததாக குழந்தையை சித்ரவதை செய்த தாய் - தருமபுரி அதிர்ச்சி!

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு பகுதியைச் சேர்ந்த இளம்பெண் எழிலரசி, கணவருடன் ஏறட்ட கருத்து வேறுபடு காரணமாக 3 வயது பெண் குழந்தையுடன் தனியாக வசித்து வந்தார்.கைதுஇந்நிலையில் தருமபுரியைச் சேர்ந்த அய்யப்பன் எ... மேலும் பார்க்க

திருச்சி: அரசு மருத்துவமனையில் குழந்தை கடத்தல்; 5 மணி நேரத்தில் மீட்பு - திருச்சி போலீஸ் அதிரடி!

திருச்சி, மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் கடந்த 11-ம் தேதி விக்னேஷ் - சுகன்யா தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த நிலையில், சுகன்யாவிடம் மருத்துவமனைக்கு வந்த பெண் ஒருவர் பேசி பழகி, பி... மேலும் பார்க்க

புதுக்கோட்டை: இளைஞர்களைக் குறிவைத்து போதை ஊசிகள் விற்பனை; மூவரைக் கைதுசெய்த போலீஸ்!

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி பகுதியில் போதை மாத்திரை மற்றும் போதை ஊசி பயன்படுத்துவதோடு அதனை இளைஞர்களை குறிவைத்து சிலர் விற்பனை செய்து வருவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்நிலையில், குற்... மேலும் பார்க்க

கேரளாவில் வீடு புகுந்து 50 சவரன் தங்கநகைகள் கொள்ளை; நெல்லை இளைஞர்கள் சிக்கியது எப்படி?!

கேரள மாநிலம், பந்தளம் பகுதியைச் சேர்ந்த ஒருவர், வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது வீட்டில் கடந்த 21-ம் தேதி மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து 50 சவரன் தங்கநகைகளை கொள்ளையடித்துச் சென்றனர்.... மேலும் பார்க்க

`விஷத்தின் சுவை என்ன?' - சிறுமிகளின் விபரீத எண்ணத்தில் பறிபோன 4 உயிர்; நடந்தது என்ன?

பீகார் மாநிலம் ஔரங்காபாத் மாவட்டத்தில் உள்ள ஹஸ்புரா என்ற இடத்திற்கு அருகில் உள்ள மோடி பிகா என்ற இடத்தை சேர்ந்த 4 மைனர் பெண்கள் விஷம் குடித்து உயிரிழந்துள்ளனர். அவர்கள் அனைவருக்கும் 12 முதல் 15 வயதுட்ப... மேலும் பார்க்க

பிறந்தநாள் பார்ட்டிக்கு வந்த காதலி; நண்பர்களுடன் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற காதலன்

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் எம்.பி.ஏ.படித்து வந்த 24 வயது பெண் தனது தந்தையுடன் பிறப்பு சான்றிதழில் திருத்தம் செய்வதற்காக சென்றார். வேலை முடிந்தவுடன் தனது தந்தையிடம் தனது நண்பர் பியூஷ் தனோடியாவின் ... மேலும் பார்க்க