செய்திகள் :

காட்டிக்கொடுத்த டி.என்.ஏ. சோதனை; வாய்பேச முடியாத மகளை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய தந்தை

post image

மும்பை தென்பகுதியில் வசிக்கும் வாய்பேச முடியாத 20 வயது பெண் வயிற்று வலியால் அவதிப்பட்டார். இதனால் அவர் சைகை மூலம் தனது பாட்டியிடம் தெரிவித்தார். வயிற்றில் பூச்சிகள் ஊர்வது போன்று இருப்பதாக தெரிவித்தார். இதையடுத்து காமா மருத்துவமனையில் அப்பெண் சேர்க்கப்பட்டார். அவரை டாக்டர்கள் சோதித்தபோது அப்பெண் 5 மாதம் கர்ப்பமாக இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து மருத்துவமனை நிர்வாகம் இது குறித்து போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். போலீஸார் அப்பெண்ணிடம் பேசியபோது அவரால் பதில் சொல்ல முடியவில்லை.

அப்பெண்ணின் தந்தையிடம் விசாரித்தபோது, `எப்படி கர்ப்பமானார் என்பது குறித்து தனக்கு தெரியாது' என்று தெரிவித்தார். அதோடு பாலியல் வன்கொடுமை செய்யப்பட வாய்ப்பு இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும், இச்சம்பவம் குறித்து போலீஸிலும் புகார் செய்ய தயாராக இல்லை. அப்பெண்ணிற்கு கவுன்சிலிங் கொடுத்த பிறகு இச்சம்பவம் குறித்து போலீஸில் புகார் கொடுக்க சம்மதித்தார். அப்பெண் கொடுத்த தகவலின் அடிப்படையில் 17 வயது வாலிபர் உட்பட இரண்டு பேரை கைது செய்தனர்.

அதோடு சந்தேகப்படும் 17 பேரிடம் டி.என்.ஏ.மாதிரிகள் எடுக்கப்பட்டு சோதிக்கப்பட்டது. இதில் பெண்ணின் தந்தையும் அடங்கும். பெண்ணின் வயிற்றில் இருக்கும் குழந்தையின் டி.என்.ஏ.மாதிரி எடுத்து அதோடு யாரது டி.என்.ஏ.ஒத்துக்போகிறது என்பது குறித்து ஆய்வு செய்ததில் பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை டி.என்.ஏ. ஒத்துப்போனது. அதன் அடிப்படையில் அப்பெண்ணின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.

ஏற்கனவே கைது செய்யப்பட்ட இரண்டு பேருக்கு இதில் எந்த வகையில் தொடர்பு இருக்கிறது என்பது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து செப்டம்பர் மாதம் வரை அப்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளது விசாரணையில் தெரிய வந்தது.

கணவன், மனைவி சண்டையை விலக்கிவிடச் சென்ற டிரைவர் கொலை; திருவள்ளூரில் சோகம்!

திருவள்ளூரை அடுத்த புட்லூரைச் சேர்ந்தவர் அசோக்குமார். இவரின் மனைவி இந்துமதி. இவர்கள் காக்களூர் பகுதியில் வசித்து வந்தனர். இந்துமதிக்கு ஏற்கெனவே திருமணமான நிலையில், அசோக்குமாரை இரண்டாவதாக திருமணம் செய்... மேலும் பார்க்க

Honeymoon murder: மேகாலயா சம்பவ பாணியில் `தேனிலவு அதிர்ச்சி' - கணவனைக் காதலன் மூலம் கொலைசெய்த மனைவி!

ராஜஸ்தான் மாநிலம், ஸ்ரீகங்காநகர் பகுதியில் ஒரு தம்பதி மயங்கிய நிலையில் கிடப்பதாக, போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் போலீஸார் விரைந்து சென்று இருவரையும் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர... மேலும் பார்க்க

புதுச்சேரி: `மது போதை’ நண்பர்களுக்குள் ஏற்பட்ட தகராறு - விலக்கி வைக்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம்

புதுச்சேரி கிராமப்புற மதுக்கடை ஒன்றில் இளைஞர் அடித்து படுகொலை செய்யப்பட்ட சி.சி.டி.வி காட்சி, பொதுமக்களை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது. சுமார் இரண்டு நிமிடங்கள் ஓடும் அந்த வீடியோ காட்சியில் ஒரு இளைஞரு... மேலும் பார்க்க

ஊட்டி: கஞ்சா விற்கும் போலீஸ்; போதையில் சுழலும் ஸ்டேஷன் டூட்டி காவலர்கள்; கொந்தளிப்பில் மக்கள்

கஞ்சா விற்பனை முதல் கச்சா ஃபிலிம் தொழிற்சாலையின் வெள்ளி கலந்த மண் திருட்டு வரை நீலகிரி மாவட்டத்தில் காவல்துறையினரே கிரிமினல் குற்றங்களில் ஈடுபட்டு நடவடிக்கைகளுக்கு உள்ளாகி வரும் நிலையில், ஊட்டி நகர மத... மேலும் பார்க்க

`திருமணமானவருடனான காதலை கைவிட கெஞ்சினேன்' - சேலம் மருத்துவ மாணவி கொலை வழக்கில் தந்தை கைது

சேலத்தை அடுத்த சித்தர்கோயில் அருகில் தனியார் ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்தக் கல்லூரியில் திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூர் பாரதி நகரைச் சேர்ந்த வரதராஜன் என்பவரின் மகள் வர்ஷின... மேலும் பார்க்க

தீராத சொத்து தகராறு; தங்கும் விடுதியில் வியாபாரி குத்திக் கொலை; திருப்பூரில் நடந்தது என்ன?

திருப்பூர் மாவட்டம், பல்லடத்தை அடுத்த காமநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்த தொழில் அதிபரான அமரன், திருப்பூர் பங்களா ஸ்டாப் பகுதியில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கியுள்ளார்.பின்னர், அ... மேலும் பார்க்க