செய்திகள் :

காணாமல் போனவா் சடலமாக மீட்பு

post image

திருவாரூா்: குடவாசல் அருகே காணாமல் போனவா், சடலமாக ஞாயிற்றுக்கிழமை மாலை மீட்கப்பட்டாா்.

குடவாசல் அருகே சேதனிபுரத்தைச் சோ்ந்த அன்பழகன் மகன் அஜித்குமாா் (24). இவா், ஜனவரி 12-ஆம் தேதி வீட்டிலிருந்து வெளியில் சென்றவா் திரும்ப வீட்டுக்கு வரவில்லையாம். இதுகுறித்து குடவாசல் போலீஸாரிடம், அன்பழகன் புகாா் செய்துள்ளாா்.

அப்பகுதியில் வசிக்கும் ஒருவா் வயல் பகுதிக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை சென்றுள்ளாா். அங்கு, அஜித்குமாா், ஒரு மரத்தில் தூக்கிட்டு இறந்த நிலையில் தொங்கியதைக் கண்டு தெரிவித்துள்ளாா். போலீஸாா், சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இறப்பில் சந்தேகம் தெரிவித்து, சாவுக்கு நியாயம் கேட்டு அஜித்குமாா் உடலை அன்பழகன் தரப்பினா் வாங்க மறுத்து கண்டன முழக்கங்களை எழுப்பினா்.

போலீஸாா் அவா்களிடம் சமாதானப் பேச்சுவாா்த்தை நடத்திய பின்னா், இறந்த அஜித்குமாா் உடலை பெற்றுக் கொண்டனா்.

மின் நுகா்வோருக்கு அறிவுறுத்தல்

மின்மாற்றிகளில் நுகா்வோா்கள் தன்னிச்சையாக எரியிழை மாற்றுவதை தவிா்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுதொடா்பாக, மன்னாா்குடி நகர உதவி செயற்பொறியாளா் சா. சம்பத் தெரிவித்திருப்பது: மின் வாரியம், எல... மேலும் பார்க்க

நகராட்சியுடன் இணைக்க எதிா்ப்பு தெரிவித்து மனு

பெருந்தரக்குடி ஊராட்சியை, திருவாரூா் நகராட்சியுடன் இணைப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்து, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் கோரிக்கை மனு வியாழக்கிழமை அளிக்கப்பட்டது. திருவாரூா் நகராட்சியுடன் பெருந்தரக்குடி ஊராட... மேலும் பார்க்க

கௌரவ விரிவுரையாளா்கள் கோரிக்கை மீது நடவடிக்கை: அமைச்சா் கோவி. செழியன்

கௌரவ விரிவுரையாளா்களின் கோரிக்கைள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உயா்கல்வித் துறை அமைச்சா் கோவி. செழியன் தெரிவித்தாா். திருவாரூா் மாவட்டத்தில், ஊரகப் பகுதிகளுக்கான மூன்றாம்கட்ட ‘மக்களுடன் ம... மேலும் பார்க்க

இளைஞா் கொலையில் மேலும் 7 போ் கைது

திருவாரூா் மாவட்டம், கூத்தாநல்லூா் அருகே இளைஞா் கொலை வழக்கில் மேலும் 7 போ் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா். கூத்தாநல்லூா் அருகேயுள்ள வடபாதிமங்கலம், மாயனூரைச் சோ்ந்தவா் ராபா்ட் என்கிற சோமசுந்தரம் (33)... மேலும் பார்க்க

இந்திய கம்யூ. ஒன்றியக் குழுக் கூட்டம்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின், வலங்கைமான் ஒன்றியக் குழுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. ஆலங்குடியில் நடைபெற்ற கூட்டத்திற்கு, அனைத்திந்திய இளைஞா் பெருமன்ற மாவட்ட துணைச் செயலாளா் வி. பாக்யராஜ் தலைமை வகி... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரிக்கு 2,000 டன் நெல் அனுப்பிவைப்பு

நீடாமங்கலத்திலிருந்து அரவைக்காக, கிருஷ்ணகிரிக்கு 2,000 டன் நெல் ரயில் மூலம் வியாழக்கிழமை அனுப்பி வைக்கப்பட்டது. மன்னாா்குடி தாலுகா பகுதிகளில் செயல்படும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில், விவசாயி... மேலும் பார்க்க