செய்திகள் :

'காரைக்குடியில் 4 நாள்கள்...' - சீமானின் இறுதிக் கட்ட பிரசார வியூகமென்ன?

post image

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் இறுதிக்கட்ட பரப்புரை பயணத்தில் பல்வேறு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் காரைக்குடியில் அவர் கூடுதல் நாள்கள் செலவிட இருப்பதாகவும் சொல்கிறார்கள் அக்கட்சியின் முக்கியப் புள்ளிகள்.

சீமான்

நம்மிடம் பேசியவர்கள், "கடந்த மார்ச் 23-ம் தேதி திருத்தணி முருகன் கோவிலில் பிரசாரத்தை தொடங்கினார் அண்ணன் சீமான், தற்போதுவரை டெல்டா மண்டலம் நீங்களாக மற்ற மண்டல பிரசாரங்களை ஓரளவுக்கு நிறைவு செய்துவிட்டார். அவரது பரப்புரை பயணத்தில் தென்மாவட்டங்களில் பெரும் வரவேற்பு கிடைத்தது. குறிப்பாக கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்கள் இதுவரை கூடாத கூட்டத்தை பார்த்தோம். மற்ற மண்டலங்களிலும் நல்ல வரவேற்பு கிடைத்தது. இச்சூழலில் இறுதிகட்ட பரப்புரை பயணம் காரைக்குடியை மையப்படுத்தி அமையவுள்ளது" என்றனர்.

தொடர்ந்து பேசியவர்கள் "நான்குமுனைப் போட்டியால் யாருக்கு சாதகம், யாருக்கு பாதகம் என்பதை கணிக்க முடியாத சூழல் நிலவுகிறது. ஆகையால் வாக்கு சதவிகிதத்தில் கவனம் செலுத்துவதைவிட அண்ணனை சட்டமன்றத்துக்குள் அனுப்ப வேண்டும் என்பதில் குறியாக இருக்கிறார்கள் கட்சியின் முன்னணி நிர்வாகிகள். ஆகையால் தேர்தல் பிரசாரம் ஓய்வதற்கு 4 நாள்களுக்கு முன்பே அண்ணன் சீமானை காரைக்குடிக்கு வரவழைத்து தொடர் பரப்புரை மேற்கொள்ள திட்டமிடுகிறோம். அதுபோக, தமிழ்நாட்டில் முன்னணி நிர்வாகிகள் பலநூறு பேரை தொகுதிக்குள் இறக்கி வீடு வீடாக வாக்கு சேகரிப்பில் ஈடுபடுத்தவுள்ளோம். இதுநாள்வரை நாம் தமிழர் அரசு எப்படியிருக்கும் எனப் பேசிய சீமான், அந்த 4 நாள்களில் தி.மு.க தொடங்கி த.வெ.க வரை அனைவரையும் போட்டுத் தாக்குவார். அவரின் இறுதிக்கட்ட பரப்புரை மாநிலம் முழுவதும் தாக்கம் ஏற்படுத்தும்படி அமையவுள்ளது" என்றனர்.

சீமான்
சீமான்

காரைக்குடி கள நிலவரம் குறித்துப் பேசும் அரசியல் விமர்சகர்கள், "காரைக்குடியில் யார் வெல்வார்கள் என்பது கணிக்க முடியாத நிலையில்தான் இருக்கிறது. ஆகவே எனவே எஞ்சி இருக்கும் நாள்களின் பிரசாரம் அனைவருக்குமே மிக முக்கியமானதாக கருதப்படுகிறது" என்றனர்

பணி மாறுதலுக்கு பணம் வாங்கும் முறை ஒழிக்கப்படும்; திருப்பூரில் விஜய் அறிவித்த வாக்குறுதிகள் என்ன?

தவெக தலைவர் விஜய் இன்று திருப்பூரில் பிரசாரம் மேற்கொண்டிருந்தார். அப்போது மக்கள் மத்தியில் பேசிய விஜய் சில வாக்குறுதிகளை அறிவித்தார்.விஜய் பேசியதாவது, 'நாளை மறுநாள் நம்முடைய தேர்தல் வாக்குறுதிகளை புத்... மேலும் பார்க்க

பீகார் அரசியலில் புதிய சகாப்தம்: முதல் பாஜக முதலமைச்சராகிறார் சாம்ராட் சவுத்ரி - பின்னணி என்ன?

பீகாரில் கடந்த 20 ஆண்டுகளாக நீடித்த நிதிஷ் குமாரின் ஆட்சி நிறைவுக்கு வந்துள்ள நிலையில், மாநிலத்தின் புதிய முதலமைச்சராக பா.ஜ.க-வைச் சேர்ந்த சாம்ராட் சவுத்ரி பதவியேற்க உள்ளார். இதன் மூலம், பீகார் மாநில ... மேலும் பார்க்க

'டார்கெட் 1 லட்சம் வாக்குகள்!' - பெரம்பூரில் வெல்வாரா விஜய்? |களநிலவரம் ஓர் அலசல்!

தவெக தலைவர் விஜய் பெரம்பூர், திருச்சி கிழக்கு என இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார். இதில், பெரம்பூரில் விஜய்யை 1 லட்சம் வாக்குகள் பெற வைப்போம் என டார்கெட் நிர்ணயித்து தொகுதிக்குள் தவெகவினர் பணியாற்ற... மேலும் பார்க்க

நொய்டா போராட்டம்: `பாக்கிஸ்தான் சதி' - அரசு குற்றச்சாட்டு; 2027 தேர்தலை நோக்கித் திரும்பும் அரசியல்

உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் குறைந்த ஊதியம் மற்றும் மோசமான பணிச்சூழலைக் கண்டித்து 40,000-க்கும் மேற்பட்ட தொழிற்சாலை தொழிலாளர்கள் நடத்திய போராட்டம் வன்முறையாக வெடித்தது. இந்த விவகாரம் அம்மாநிலத்தி... மேலும் பார்க்க

``பிரதமர் மோடிக்கு இது இறுதி எச்சரிக்கை" - முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டிருக்கும் வீடியோ

நாளை மறுநாள் நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் நடைபெறவிருக்கிறது. இந்தக் கூட்டத்தொடரில் மகளிருக்கான இட ஒதுக்கீடு மசோதா குறித்து விவாதிக்கப்படும் எனக் கூறப்பட்டது. மகளிர் இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட ... மேலும் பார்க்க

திருப்பரங்குன்றத்தில் தீபம்; மாநில விழாவாக தைப்பூசம் - வெளியானது பாஜகவின் தேர்தல் வாக்குறுதி

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இன்று (ஏப்ரல் 14) பாஜக தேர்தல் அறிக்கையை வெளியிட்டிருக்கிறது. மத்திய அமைச்சரும், முன்னாள் தேசிய தலைவருமான ஜேபி நட்டா 'புதிய யுகம் படைக்கும் தாமரை... மேலும் பார்க்க