செய்திகள் :

காரைக்குடி: 4 மணிநேர 'ரோட் ஷோ' - பேசாமல் சென்ற விஜய்; ஏமாற்றமடைந்த தொண்டர்கள்! - என்ன நடந்தது?

post image

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், த.வெ.க தலைவர் விஜய் இன்று சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார். காரைக்குடி தொகுதி வேட்பாளர் பிரபுவை ஆதரித்து, கண்ணதாசன் மணிமண்டபம் அருகே உள்ள திடலில் விஜய் உரையாற்றுவார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

காரைக்குடி நட்சத்திர வேட்பாளர்கள் தொகுதி. நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தொடர்ந்து அந்தத் தொகுதியில் கோலோச்சும் மாங்குடி என தவெக-வுக்கு சவாலான தொகுதிகளில் ஒன்று. எனவே, இந்த தொகுதியில் விஜய் என்ன பேசுவார் என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.

விஜய்
விஜய்

சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் மதுரை சென்றடைந்த விஜய், அங்கிருந்து பிரத்யேக பிரசார வாகனம் மூலம் காரைக்குடி நோக்கிப் புறப்பட்டார். மதுரையிலிருந்து காரைக்குடி செல்லும் வழிநெடுகிலும் ரசிகர்களும், கட்சித் தொண்டர்களும் திரண்டிருந்தனர். கூட்ட நெரிசல் காரணமாக விஜய்யின் வாகனம் மெதுவாகவே நகர முடிந்தது.

திறந்தநிலை வாகனத்தின் மேலே நின்றபடி, ரசிகர்களைப் பார்த்துக் கையசைத்து சுமார் 4 மணிநேரத்திற்கும் மேலாக விஜய் சாலைப் பயணம் மேற்கொண்டார்.

தேர்தல் ஆணையத்தின் விதிமுறைப்படி, குறிப்பிட்ட அந்த இடத்தில் பிரசாரம் மேற்கொள்ள மதியம் 12 மணி முதல் 2.30 மணி வரை மட்டுமே அனுமதி வழங்கப்பட்டிருந்தது. ஆனால், வழியெங்கும் நிலவிய கடுமையான கூட்டத்தால் விஜய்யால் நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குள் பிரசாரத் திடலுக்கு வர முடியவில்லை. அவர் பிற்பகல் 2.40 மணியளவில்தான் மேடைக்கு அருகில் வந்து சேர்ந்தார்.

அனுமதி வழங்கப்பட்ட நேரம் முடிந்துவிட்டதாலும், தேர்தல் விதிமீறல் சிக்கல்களைத் தவிர்க்கவும் விஜய் மேடையில் உரையாற்றவில்லை. வாகனத்தில் இருந்தபடியே காரைக்குடி வேட்பாளர் பிரபுவை மட்டும் பொதுமக்களுக்கு அறிமுகப்படுத்தினார்.

தவெக விஜய் காரைக்குடி
தவெக விஜய் காரைக்குடி

காலை முதலே சுமார் 40 டிகிரிக்கும் மேலான கடும் வெயிலில், தனது தலைவரின் பேச்சைக் கேட்கக் காத்திருந்த தொண்டர்களுக்கு இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

விஜய் ஒரு சில வார்த்தைகளாவது பேசுவார் என்று எதிர்பார்த்த நிலையில், அவர் அறிமுகத்தோடு அங்கிருந்து புறப்பட்டதால் தொண்டர்கள் ஏமாற்றத்துடன் கலைந்து சென்றனர்.

நிர்ணயிக்கப்பட்ட நேரத்தைத் தாண்டி விஜய் வந்ததால், அங்கு நிலவிய சூழலைத் தேர்தல் அதிகாரிகள் வீடியோ பதிவு செய்துள்ளனர். நேரக் கட்டுப்பாடு மீறப்பட்டதா என்பது குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

`கண்டா வரச் சொல்லுங்க ராகுலை கையோட கூட்டி வாருங்க.!' ஸ்டாலினுடன் ஒரே மேடையில் ஏற மறுக்கிறாரா ராகுல்?

கொளுத்திப் போட்ட விஜய்!''கண்டா வரச் சொல்லுங்க..ராகுலைக் கையோட கூட்டி வாருங்க..''திமுக உடன் பிறப்புகள் மற்றும் தமிழக காங்கிரஸ் தொண்டர்களின் இன்றைய சிக்சுவேஷன் சாங் இதுதான்.நடைபெறவிருக்கும் தமிழக சட்டசப... மேலும் பார்க்க

மேற்கு வங்கம்:``பாஜக ஆட்சிக்கு வந்த 6 மாதங்களில் பொது சிவில் சட்டம்" - அமித் ஷா அதிரடி அறிவிப்பு

மேற்கு வங்கத்தில் இன்னும் சில வாரங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், தேர்தல் பிரசாரம், தலைவர்களின் சுற்றுப்பயணம், தேர்தல் வாக்குறுதி என தூள்பறக்கிறது தேர்தல் களம். இந்தமுறை எப்படியாவ... மேலும் பார்க்க

அஜித் ரசிகர்கள் வாக்குகளை குறிவைக்கும் அதிமுக – விஜய் பிரிக்கும் வாக்குகளை ஈடுகட்டுமா?

தமிழ் திரைத்துறைக்கும், தமிழ்நாடு அரசியலுக்கும் நீண்ட நெடிய தொடர்புண்டு. திரைத்துறையில் இருந்து வந்த பலர், அரசியலிலும் ஜொலித்துள்ளனர். அந்த வரிசையில் சமீபத்திய வரவான நடிகர் விஜயின் வருகை, முன்னணி அரசி... மேலும் பார்க்க

ஜனநாயகத் திருவிழா 2026: விகடனின் சிறப்புத் தேர்தல் களம்!

தேர்தல் பரபரப்பு விகடன் அலுவலகத்தில் கடந்த நவம்பர் மாதத்திலேயே தொடங்கிவிட்டது. புதிய தொடர்கள், ஸ்பெஷல் பக்கங்கள், புதிய முன்னெடுப்புகள், சிறப்புப் பேட்டிகள், தேர்தல் கணக்கெடுப்புகள் என ஒவ்வொன்றையும் ஆ... மேலும் பார்க்க

'ஊழல்' செல்வப்பெருந்தகை, 'வீண் முறையீடு' கார்கே - ஹசீனா சையத் காங்கிரஸில் இருந்து விலகல்

வருகிற தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் தனக்கு சீட்டு வழங்கப்படவில்லை என்று தமிழ்நாடு மகிளா காங்கிரஸின் தலைவர் ஹசீனா சையத் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். ஹசீனா சையத் தனது ராஜினாமா கடிதத்தில் குறிப்பிட... மேலும் பார்க்க