செய்திகள் :

அண்ணா நகர் களத்தில் சிற்றரசை முன்னிறுத்திய உதயநிதி! - உச்சகட்ட பரபரப்பில் தேர்தல் பிரசாரம்

post image

அண்ணா நகர் தெருக்கள் முழுவதும் பிரசாரக் குரல் முழங்க, பொதுமக்கள் மத்தியில் உற்சாகம் காணப்பட்டது. திமுக கொண்டு வந்த திட்டங்கள், செய்த வளர்ச்சிப் பணிகள் ஆகியவற்றைப் பட்டியலிட்டு பேசிய உதயநிதி, "சிற்றரசு பற்றி உங்களுக்கு அறிமுகம் தேவையில்லை" என தனது பேச்சை தொடங்கி, இளைஞரணியில் இருந்து வளர்ந்து வந்த கட்சி நிர்வாகியாக சிற்றரசுவை முன்னிறுத்தினார்.

“நான் இளைஞரணி செயலாளர், சிற்றரசு இளைஞரணியில் பயிற்சி பெற்று இன்று மாவட்டக் கழகச் செயலாளராக இருக்கிறார். உங்களின் ஆதரவுடன் விரைவில் சட்டமன்ற உறுப்பினராக வரப் போகிறார்” என்று நம்பிக்கை தெரிவித்தார்.

தன் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியை எடுத்துக்காட்டாக கூறிய உதயநிதி, “அந்த தொகுதி பல விஷயங்களில் ஒரு ரோல் மாடல். அதுபோலவே அண்ணா நகரையும் மாற்றும் திறன் சிற்றரசுவுக்கு உள்ளது” என வலியுறுத்தினார்.

மேலும், கலைஞர் கருணாநிதி போட்டியிட்டு வெற்றி பெற்ற தொகுதிகளின் மரபை நினைவுபடுத்தி, "எனக்கும் சிற்றரசுவுக்கும் ஒரு ஒற்றுமை உண்டு. கலைஞர் கருணாநிதி நின்று வெற்றி பெற்ற சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏ நான். சிற்றரசு, கலைஞர் கருணாநிதி நின்று வெற்றி பெற்ற அண்ணா நகர் தொகுதியில் போட்டியிட்டு விரைவில் சட்டமன்ற உறுப்பினராகப் போகிறார்" என கூறி உணர்ச்சிரீதியாக இணைத்தார்.

கடைசியாக வாக்கு வித்தியாசத்தையும் இலக்காக முன்வைத்த உதயநிதி, “கடந்த முறை 28 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் திமுகவின் எம்.கே.மோகனை வெற்றி பெற செய்த நீங்கள் இந்த முறை 50 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் சிற்றரசுவை வெற்றி பெறச் செய்ய வேண்டும்” என்று மக்களிடம் கோரிக்கை வைத்தார்.

அண்ணா நகர் தொகுதியில் திமுக சார்பில் சிற்றரசு, அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா, தவெக வேட்பாளர் ராம் குமார், நாதக வேட்பாளர் சங்கர் உள்ளிட்ட பலர் போட்டியிடும் நிலையில், தேர்தல் களம் நாளுக்கு நாள் சூடுபிடித்து வருகிறது.

இந்த நிலையில், உதயநிதி ஸ்டாலின் நேரடி பிரசாரம், அண்ணா நகர் அரசியல் போட்டிக்கு புதிய திருப்பமாக பார்க்கப்படுகிறது.

'என்னுடைய பணம் இல்லை' முதல் ராஜினாமா வரை: யஷ்வந்த் வர்மா 'கட்டுக்கட்டான' பண வழக்கு|Timeline

வீட்டில் கட்டுக்கட்டாக பணம் கண்டுபிடிக்கப்பட்ட குற்றச்சாட்டு எழுந்தும், ஓராண்டு கழித்து இன்று தான் நீதிபதி யஷ்வந்த் வர்மா ராஜினாமா செய்த செய்தி வெளியாகியுள்ளது. இந்த வழக்கில் டைம்லைனை இங்கே காணலாம். ம... மேலும் பார்க்க

காரைக்குடி: 4 மணிநேர 'ரோட் ஷோ' - பேசாமல் சென்ற விஜய்; ஏமாற்றமடைந்த தொண்டர்கள்! - என்ன நடந்தது?

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், த.வெ.க தலைவர் விஜய் இன்று சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார். காரைக்குடி தொகுதி வேட்பாளர் பிரபுவை ஆதரித்த... மேலும் பார்க்க

``திமுகவின் 'சைடு டிஷ்' திருமாவளவன்" - தேர்தல் பரப்புரையில் நடிகை விந்தியா சாடல்!

தமிழகச் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தேர்தல் பரப்புரை தீவிரமாகியிருக்கிறது. திண்டிவனம் தொகுதி தி.மு.க கூட்டணிக் கட்சியான விசிக-வுக்கு ஒதுகப்பட்டது. அதனடிப்படையில் விசிக பொதுச் செயலாளர் வன்னி அரசு தி... மேலும் பார்க்க

'இடஒதுக்கீடு குறித்த பேச்சு?' - எம்.ஜி.ஆர் சந்தித்த மிகப்பெரிய தோல்வி பற்றி தெரியுமா? | Vote Vibes

தமிழக அரசியலில் தோல்வியே காணாதவர் என்று போற்றப்படும் எம்.ஜி.ஆர் தனது அரசியல் பயணத்தில் ஒரு தேர்தலில் மோசமான தோல்வியைத் தழுவி இருக்கிறார். அது எப்போது தெரியுமா? திமுகவில் இருந்து விலகிய எம்.ஜி.ஆர் 1972... மேலும் பார்க்க

சமாதானப் பேச்சுவார்த்தைக்குத் திரும்பிய ஈரான்: சீனா - பாகிஸ்தான் கூட்டணி சாதித்தது என்ன?

கடந்த 38 நாள்களாக ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே மிகக் கடுமையான போர் பதற்றம் நீடித்து வந்தது. திங்களன்று, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ``புதன்கிழமைக்குள் ஹார்முஸ் ஜலசந்தி மீண்டும் திறக்கப்படாவிட... மேலும் பார்க்க