செய்திகள் :

மேற்கு வங்கம்:``பாஜக ஆட்சிக்கு வந்த 6 மாதங்களில் பொது சிவில் சட்டம்" - அமித் ஷா அதிரடி அறிவிப்பு

post image

மேற்கு வங்கத்தில் இன்னும் சில வாரங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், தேர்தல் பிரசாரம், தலைவர்களின் சுற்றுப்பயணம், தேர்தல் வாக்குறுதி என தூள்பறக்கிறது தேர்தல் களம். இந்தமுறை எப்படியாவது ஆட்சியைக் கைப்பற்றிவிட வேண்டும் என்ற துடிப்பில் பா.ஜ.க-வும், தொடர்ந்து அரியணையில் அமர்ந்திருக்கும் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியை தக்கவைக்க வேண்டும் எனவும் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

மம்தா பானர்ஜி
மம்தா பானர்ஜி

இந்த நிலையில், இன்று கொல்கத்தாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பா.ஜ.க-வின் தேர்தல் அறிக்கையான ‘சங்கல்ப பத்ரா’வை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வெளியிட்டு உரையாற்றினார். அப்போது, ``மதம், சாதி வேறுபாடின்றி அனைத்துக் குடிமக்களுக்கும் திருமணம், விவாகரத்து, வாரிசுரிமை மற்றும் தத்தெடுத்தல் ஆகிய விவகாரங்களில் ஒரே மாதிரியான சட்டத்தைக் கொண்டு வருவதே பொது சிவில் சட்டத்தின் நோக்கமாகும். ஏற்கெனவே பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் இச்சட்டம் அமல்படுத்தப்பட்டு வருகிறது.

தேசிய ஒருமைப்பாட்டை ஊக்குவிக்க பெங்காலிலும் பா.ஜ.க ஆட்சிக்கு வந்த 6 மாதங்களில் இது நடைமுறைக்கு வரும். மேற்கு வங்க மாநில எல்லைகள் வழியாக நடைபெறும் சட்டவிரோத ஊடுருவல்களை முற்றிலும் தடுப்போம். ஊடுருவல்காரர்களுக்கு எதிராக முழுமையாக சீல் வைக்கப்படும். அதுமட்டுமின்றி, பெங்கால் வழியாக ஒரு பசு கூட இந்தியாவுக்கு வெளியே கடத்தப்படாமல் இருப்பதை நாங்கள் உறுதி செய்வோம்.

அமித் ஷா
அமித் ஷா

பா.ஜ.க ஆட்சிக்கு வந்ததும் ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் ஒரு விசாரணை ஆணையம் அமைக்கப்படும். கடந்த காலங்களில் நடைபெற்ற அனைத்து அரசியல் வன்முறைகளும் பாரபட்சமின்றி விசாரிக்கப்பட்டு, குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை பெற்றுத் தரப்படும். ஊழல் மற்றும் சட்டம் ஒழுங்கைச் சீரமைக்க மூன்று 'வெள்ளை அறிக்கைகள்' தாக்கல் செய்யப்படும். மூன்று முறை முதல்வராக இருக்கும் மம்தா பானர்ஜியின் ஆட்சிக்கு எதிராக மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். அது நடக்கும்" என்றார்.

“காசு வாங்கி சீட்டை கொடுத்தார் கார்க்கே” - ஹசீனா சையத் பதவி பறிப்பின் பின்னணி!

``மகிளா காங்கிரஸ் கட்சிக்கு எம்.எல்.ஏ சீட் கொடுக்காமல் போனதற்கு காங்கிரஸ் கட்சியில் பணத்திற்கு சீட்டை விற்றதே காரணம்” என்று பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார் மகிளா காங்கிரஸ் மாநில தலைவர் ஹசினா சையத்... மேலும் பார்க்க

“எடப்பாடி தொகுதிக்கு... விஜய் போட்ட புதிய ஸ்கெட்ச்” - விரைவில் அதிரடி அறிவிப்பு!

234 தொகுதிகளில் போட்டியிட வேண்டிய த.வெ.க கட்சி, எடப்பாடி தொகுதியில் போட்டியிட முடியாத காரணத்தினால் 233 தொகுதிகளில் மட்டுமே களமிறங்க உள்ளது. எனவே எடப்பாடி தொகுதியிலும் தனது கொடி பறக்க வேண்டுமென முடிவெட... மேலும் பார்க்க

'அமெரிக்கா போனால் போகாட்டும்' NATO-விற்கு வேறு ஐடியா சொல்லும் ஜெலன்ஸ்கி; அதில் உக்ரைனுக்கு லாபம்

'நமக்கு வேண்டியபோது உதவவில்லை; இனியும் தேவை வந்தால் உதவமாட்டார்கள்' என்று ஈரான் போரில் அமெரிக்காவிற்கு நேட்டோ உதவாததால் கடும் அதிருப்தியில் இருக்கிறார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப். இதனால், நேட்டோவில் இருந... மேலும் பார்க்க

"இந்தியப் பெண்களிடம் பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்" - ஜெய்ராம் ரமேஷ் காட்டம்

2023-ம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட 'நாரி சக்தி வந்தன் அதினியம்' எனும் மசோதா மக்களவையிலும், மாநில சட்டமன்றங்களிலும் பெண்களுக்கு 33 சதவிகித இட ஒதுக்கீட்டை வழங்குகிறது. இந்த மசோதா நிறைவேற்ற 2027-ம் ஆண்டு மக... மேலும் பார்க்க

`கண்டா வரச் சொல்லுங்க ராகுலை கையோட கூட்டி வாருங்க.!' ஸ்டாலினுடன் ஒரே மேடையில் ஏற மறுக்கிறாரா ராகுல்?

கொளுத்திப் போட்ட விஜய்!''கண்டா வரச் சொல்லுங்க..ராகுலைக் கையோட கூட்டி வாருங்க..''திமுக உடன் பிறப்புகள் மற்றும் தமிழக காங்கிரஸ் தொண்டர்களின் இன்றைய சிக்சுவேஷன் சாங் இதுதான்.நடைபெறவிருக்கும் தமிழக சட்டசப... மேலும் பார்க்க