செய்திகள் :

கிருஷ்ணகிரி: முதியவரைக் கொன்று மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்த நபர்; 7 தனிப்படைகள் அமைத்து போலீஸ்

post image

75 வயது முதியவரைக் கொடூரமாகக் கொலை செய்து மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்த கொலைகாரனை கிருஷ்ணகிரி எஸ்.பி தலைமையில் 7 தனிப்படையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

murder
Murder

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே மூன்றம்பட்டி ஊராட்சிப் பகுதியில் 75 வயதான கண்ணப்பன் மனைவியுடன் வசித்து வருகிறார். கடந்த 8 ஆம் தேதி இரவு வீட்டுக்கு வெளியே கட்டிலில் படுத்திருந்த கண்ணப்பனை அங்கு வந்த மர்ம நபர் கல்லால் கடுமையாகத் தாக்கியுள்ளார்.

அவர் அலறல் சத்தம் கேட்டு வீட்டுக்குள் படுத்திருந்த மனைவி பதறி அடித்து வெளியில் வந்தபோது கணவர் ரத்த வெள்ளத்தில் கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த நிலையில், அந்த நபர் மூதாட்டியைத் தாக்கி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

மூதாட்டியின் அலறல் சத்தம் கேட்டு அருகில் வசிப்பவர்கள் வருவதை அறிந்து அந்த நபர் அங்கிருந்து தப்பித்துச் சென்றுள்ளார். அதன் பின்பு அங்கு வந்த மக்கள் இருவரையும் மீட்டு ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். ஆனால், சிகிச்சை பலனின்றி கண்ணப்பன் உயிரிழந்தார். காயமடைந்த மூதாட்டிக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

எஸ்.பி. தங்கதுரை
எஸ்.பி. தங்கதுரை

ஊத்தங்கரை பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்தச் சம்பவத்தை சிங்காரப்பேட்டை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ள நிலையில் கிருஷ்ணகிரி எஸ்.பி. தங்கத்துரை சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினார்.

கொலைகாரன் நிர்வாணமாக வந்ததாகச் சொல்லப்படும் நிலையில் அருகிலுள்ள வனப்பகுதிக்குள் பதுங்கியிருக்கலாம் என்பதால் 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டு கொலைகாரனைத் தீவிரமாகத் தேடி வருகிறார்கள்.

நெல்லை: போதையில் தகராறு செய்த மகன்; ஆத்திரத்தில் தாய் செய்த செயல்... விபரீதத்தில் முடிந்த சோகம்!

நெல்லையை அடுத்துள்ள கிருஷ்ணாபுரம் கிராமத்தின் தனலட்சுமி நகரைச் சேர்ந்த கண்ணன் என்பவரின் மனைவி லதா. 56 வயதான அவருக்கு கிருஷ்ணவேணி என்ற மகளும், மாயாண்டி என்ற மகனும் உள்ளனர். மாயாண்டி மது போதைக்கு அடிமைய... மேலும் பார்க்க

சென்னை: மகனின் கண் முன்னால் தாய்க்கு பாலியல் தொல்லை; தனியார் நிறுவன ஊழியர் கைது; என்ன நடந்தது?

சென்னை, கோயம்பேடு காவல் மாவட்டத்தில் 41 வயதான பெண் ஒருவர் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். கடந்த 08.03.2026-ம் தேதி மதுரவாயல் பகுதியிலுள்ள மைதானத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு அந்தப் பெண் தன்னுடைய மகனு... மேலும் பார்க்க

சென்னை: மகளுக்கு திருமணமாகாத விரக்தியில் தந்தை தற்கொலை; அடுத்த நொடியில் மகள் எடுத்த விபரீத முடிவு

சென்னை வடபழனி கங்கையம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் கிருஷ்ணகுமார் (57). ஆட்டோ டிரைவரான இவருக்கு இரண்டு மகள்கள். மூத்த மகள் பிருந்தா திருமணமாகி கணவருடன் அம்பத்தூரில் வாழ்ந்து வருகிறார். இளைய மகள் பாக்... மேலும் பார்க்க

நெல்லை: பாலியல் தொந்தரவு கொடுத்து தப்பிய இளைஞர்கள்; தந்தையுடன் பைக்கில் விரட்டிப் பிடித்த மாணவி!

நெல்லை மாவட்டம், களக்காடு பகுதியைச் சேர்ந்த 12-ம் வகுப்பு மாணவி, அருகிலுள்ள கோவில்பத்துவில் உள்ள டியூசன் சென்டரில் மாலை நேரத்தில் டியூசன் படித்து இரவில் வீடு திரும்புவது வழக்கம். இந்த நிலையில், வழக்கம... மேலும் பார்க்க

ஈரோடு: கொத்தடிமைகளாக இருந்த மத்தியப் பிரதேச சிறுவர், சிறுமியர்; மாவட்ட நிர்வாகம் மீட்ட பின்னணி என்ன?

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகில் உள்ள ஓலப்பாளையம் பகுதியில் குறிப்பிட்ட சில தனியார் கரும்பு தோட்டங்களில் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த தொழிலாளர்களைக் கொத்தடிமைகளைப் போல நடத்துவதாக மாவட்ட நிர்வாகத்... மேலும் பார்க்க

சென்னை: ரௌடி, அவரின் நண்பன் கொடூர கொலை - அதிகாலையில் நடந்த அதிர்ச்சி!

சென்னை பல்லாவரம் அடுத்த திரிசூலம், துளசிங்க முதலியார் தெருவில் உள்ள வீட்டில் ரௌடி ஆறுமுகம் வாடகைக்கு குடியிருந்து வந்தார். அவரோடு அவரின் நண்பன் சதீஷ் என்பவரும் தங்கியிருந்தார். அதிகாலை நேரத்தில் பைக்க... மேலும் பார்க்க