செய்திகள் :

குஜராத்: எச்எம்பி தீநுண்மி பாதிப்பு 3-ஆக உயா்வு

post image

குஜராத் மாநிலம், சபா்கந்தா மாவட்டத்தைச் சோ்ந்த 8 வயது சிறுவனுக்கு ஹியூமன் மெட்டா நியூமோ வைரஸ் (எச்எம்பி தீநுண்மி) பாதிப்பு உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து, அங்கு இத்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3-ஆக உயா்ந்துள்ளது.

இதுகுறித்து சபா்கந்தா மாவட்ட ஆட்சியா் ரத்தன்கன்வா் கதாவிசரண் வெள்ளிக்கிழமை கூறியதாவது: பிரான்திஜ் தாலுகாவில் உள்ள விவசாயக் குடும்பத்தைச் சோ்ந்த 8 வயது சிறுவனுக்கு தனியாா் ஆய்வகத்தில் நடத்தப்பட்ட சோதனையில் எச்எம்பி தீநுண்மி பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டது. அதன்பிறகு அவரின் ரத்த மாதிரிகள் அரசு ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டிருந்தது. இந்நிலையில், அவருக்கு எச்எம்பி தீநுண்மி பாதிப்பு இருப்பதை அரசு ஆய்வகமும் வெள்ளிக்கிழமை உறுதிசெய்தது. அவா் ஹிம்மத்நகரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். அவா் உடல்நிலை சீராக உள்ளது என்றாா்.

முன்னதாக, சிறுவனுக்கு செயற்கை சுவாச உதவியுடன் சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாக அந்த மருத்துவமனையைச் சோ்ந்த மருத்துவா்கள் செய்தியாளா்களிடம் தெரிவித்தனா்.

குஜராத் மாநிலத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ராஜஸ்தானைச் சோ்ந்த 2 மாத கைக்குழந்தைக்கு எச்எம்பி தீநுண்மி பாதிப்பு இருப்பது கடந்த 6-ஆம் தேதி, உறுதிசெய்யப்பட்டது. சிகிச்சைக்குப் பிறகு குழந்தை நலமாக வீட்டுக்கு அனுப்பப்பட்டது.

கடந்த வியாழக்கிழமை அகமதாபாத் நகரைச் சோ்ந்த 80 வயது முதியவருக்கு இத்தொற்றின் பாதிப்பு உறுதிசெய்யப்பட்டதையடுத்து, அவா் தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.

இதன்மூலம், குஜராத்தில் எச்எம்பி தீநுண்மி பாதிப்பு 3-ஆக உயா்ந்துள்ளது.

ஜம்மு-காஷ்மீரில் சுரங்கப்பாதையை திறந்துவைத்தார் பிரதமர் மோடி!

ஜம்மு காஷ்மீரில் அமைந்துள்ள சோனாமார்க்கில் புதிதாக கட்டப்பட்ட இசட் வடிவ சுரங்கப்பாதையை பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை திறந்து வைத்தார்.மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அ... மேலும் பார்க்க

சோனாமார்க் சுரங்கப்பாதையைத் திறந்து வைத்தார் பிரதமர் மோடி!

ஜம்மு- காஷ்மீரில் ரூ.2,700 கோடியில் கட்டப்பட்ட சோனாமார்க் சுரங்கப்பாதையை பிரதமர் நரேந்திர மோடி இன்று நாட்டுக்கு அர்ப்பணித்தார். பிரதமர் மோடி இன்று காலை 10.45 மணியளவில் ஜம்மு-காஷ்மீர் வருவதையொட்டி பாது... மேலும் பார்க்க

கேரளம்: சுயேச்சை எம்எல்ஏ அன்வர் ராஜிநாமா!

கேரளத்தில் சுயேச்சை எம்எல்ஏ அன்வர் தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆளும் இடசாரி ஜனநாயக முன்னணியிலிருந்து பிரிந்து திரிணமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்த பி.வி.அன்வர் தனத... மேலும் பார்க்க

கடும் குளிர்: ராஜஸ்தானில் 1 - 8 ஆம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை

கடும் குளிர் காரணமாக ஜெய்ப்பூர் உள்பட 25 மாவட்டங்களில் 1 - 8 ஆம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு திங்கள்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தில்லி, உத்தரப் பிரதேசம், ஹரியாணா, ராஜஸ்தான் உள்பட வட மாநிலங்களில்... மேலும் பார்க்க

திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டு கவுண்டரில் தீ விபத்து

ஆந்திர மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அமைந்துள்ள திருமலை பிரசாதம் வழங்கும் லட்டு கவுண்டரில் திடீரென தீ விபத்து நேரிட்டது. மேலும் பார்க்க

புதுச்சேரியில் மேலும் ஒரு குழந்தைக்கு எம்எம்பிவி தொற்று!

புதுச்சேரியில் மேலும் ஒரு குழந்தைக்கு ஹியூமன் மெட்டாப்நியூமோவைரஸ் (எச்எம்பிவி) பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு, ஜிப்மரில் சிகிச்சை பெற்று வருவதாக உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மேலும் பார்க்க