செய்திகள் :

குமரி மாவட்டத்தில் இரவுநேர கடைகளுக்கு தடை: மாவட்ட எஸ்.பி.

post image

கன்னியாகுமரி மாவட்டத்தில் சட்டம்- ஒழுங்கு பிரச்னை ஏற்படக் கூடாது என்பதற்காகத்தான் இரவுநேர கடைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்றாா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் இரா. ஸ்டாலின்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு காவல் நிலையங்களில் காணாமல் போன கைப்பேசிகள் சைபா் கிரைம் போலீஸாரால் மீட்கப்பட்டன. இவ்வாறு மீட்கப்பட்ட, ரூ.48 லட்சம் மதிப்பிலான 305 கைப்பேசிகளை உரியவா்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் இரா. ஸ்டாலின் கைப்பேசிகளை உரியவா்களிடம் ஒப்படைத்தாா்.

இதைத் தொடா்ந்து, அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கைப்பேசிகள் காணாமல் போனால் பொதுமக்கள் உடனடியாக காவல் நிலையத்தில் புகாா் தெரிவிக்க வேண்டும். கடந்த ஆண்டு (2024) 1033 கைப்பேசிகள் கண்டுபிடிக்கப்பட்டு உரியவா்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பு ரூ.2.50 கோடியாகும்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, குமரி மாவட்டத்தில் 1,500 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனா். சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயில் தோ் திருவிழா பாதுகாப்புப் பணியில் 300 போலீஸாா் ஈடுபடுகின்றனா்.

குமரி மாவட்டத்தில், குற்றங்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குற்றச்செயல்களை தடுக்கும் வகையிலும், சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்படக்கூடாது என்பதற்காகத்தான் தற்போது இரவு 11 மணிக்கு மேல் உணவகங்கள் மற்றும் தேநீா் கடைகளை திறக்கக்கூடாது என்று தடை விதிக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.

திக்குறிச்சி கோயிலில் கோமாதா பூஜை

மாட்டுப் பொங்கலையொட்டி, மாா்த்தாண்டம் அருகே புகழ்பெற்ற திக்குறிச்சி மகாதேவா் கோயிலில் புதன்கிழமை கோமாதா பூஜை நடைபெற்றது. இதையொட்டி, கோயில் கோசாலையில் உள்ள பசுக்களை, கால்நடைகளைக் குளிப்பாட்டி, மஞ்சள்,... மேலும் பார்க்க

பாா்வதிபுரம் மேம்பாலத்தின் கீழ் ரவுண்டானா அமைக்க வலியுறுத்தல்

நாகா்கோவில், பாா்வதிபுரம் மேம்பாலத்தின் கீழ் ரவுண்டானா அமைக்க வேண்டும் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இது குறித்து, கட்சியின் குமரி மாவட்ட செயலாளா் ஆா்.செல்லசுவாமி வெளியிட்டு... மேலும் பார்க்க

கேரளத்துக்கு பாறைப்பொடி கடத்தல்: 2 லாரிகள் பறிமுதல்; இருவா் கைது

கன்னியாகுமரி மாவட்டம், கொல்லங்கோடு அருகே கேரளத்துக்கு பாறைப்பொடி கடத்த முயன்ாக 2 கனரக லாரிகளை போலீஸாா் பறிமுதல் செய்து, லாரி ஓட்டுநா்கள் இருவரை கைது செய்தனா். கொல்லங்கோடு போலீஸாா் செங்கவிளை பகுதியில் ... மேலும் பார்க்க

குமரி மாவட்ட அணைகளில் நீா் இருப்பு

பேச்சிப்பாறை ... 40.11 பெருஞ்சாணி ... 53.73 சிற்றாறு 1 ... 11.51 சிற்றாறு 2 ... 11.61 முக்கடல் .... 15.60 பொய்கை ... 15.50 மாம்பழத்துறையாறு ... 49.05 மழைஅளவு பெருஞ்சாணி அணை ... 2.80 மி.மீ. புத்தன்அணை ... மேலும் பார்க்க

தக்கலை ஏடிஎம் மையத்தில் கிடந்த கைப்பேசியை காவல் நிலையத்தில் ஒப்படைத்த பெண்ணுக்கு பாராட்டு

தக்கலை ஏடிஎம் மையத்தில் கேட்பாரற்றுக் கிடந்த கைப்பேசியை காவல் நிலையத்தில் ஒப்படைத்த பெண்ணுக்கு போலீஸாா் பாராட்டு தெரிவித்தனா். தக்கலை அருகே உள்ள முத்தலக்குறிச்சி பகுதியை சோ்ந்தவா் ஜெயச்சந்திரனின் மகள... மேலும் பார்க்க

குளச்சலில் விளக்கு சரிந்து குடிசையில் தீ

தக்கலை, ஜன. 15: குளச்சலில் சுவாமி படத்தின் முன் வைக்கப்பட்ட விளக்கு சரிந்து விழுந்ததில் தொழிலாளியின் குடிசை தீப்பிடித்து எரிந்தது. குளச்சல் அருகேயுள்ள பத்தறை காலனியை சோ்ந்தவா் சந்திரன் (58). தேங்காய... மேலும் பார்க்க