செய்திகள் :

கெளதம் அதானி மீதான குற்ற வழக்குகள்; கைவிட்ட அமெரிக்க அரசு; தள்ளுபடி செய்த நீதிமன்றம்; காரணம் என்ன?

post image

தொழிலதிபர் கெளதம் அதானி இந்தியாவில் சோலார் மின் திட்டங்களைப் பெற அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

லஞ்சம் கொடுத்ததை மறைத்து அமெரிக்க முதலீட்டாளர்களிடம் நிதி திரட்டியதாக அமெரிக்க நீதித்துறை மற்றும் அமெரிக்க பங்கு மற்றும் பரிவர்த்தனை கமிஷன் அதானி மீதும், அவரது உறவினர் சாகர் அதானி மீதும் கிரிமினல் நடவடிக்கை எடுத்தது.

இது தொடர்பான வழக்கு நியூயார்க் கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வந்தது. சமீபத்தில் அதானி மற்றும் அவரது உறவினர் மீதான வழக்குகளை அமெரிக்கா கைவிட இருப்பதாக செய்தி வெளியானது.

இவ்வழக்கு விசாரணையின்போது தன் மீதான வழக்குகளைக் கைவிட அதானி 6 மில்லியன் டாலரும், அவரது உறவினர் சாகர் அதானி 12 மில்லியன் டாலரும் கொடுக்கத் தயாராக இருப்பதாக கோர்ட்டில் தெரிவித்தனர்.

அதானி
அதானி

அதனை கோர்ட் ஏற்றுக்கொண்டது. அவர்கள் தங்கள் மீதான புகாரை மறுக்கவும் இல்லை. ஒப்புக்கொள்ளவும் இல்லை. அவர்களின் கோரிக்கையை ஏற்று அமெரிக்க பங்கு மற்றும் பரிவர்த்தனை கமிஷன் இரண்டு பேர் மீதான அனைத்து குற்றச்சாட்டுக்களையும் கைவிடுவதாக கோர்ட்டில் தெரிவித்துள்ளது.

இது தவிர ஈரானில் இருந்து தடையை மீறி எல்.பி.ஜி வாங்கியது தொடர்பான குற்றச்சாட்டுக்களையும் அமெரிக்க கருவூலத்துறை கைவிட்டுள்ளது. இதற்காக 275 மில்லியன் டாலர் கொடுக்க அதானி ஒப்புக்கொண்டுள்ளார். அமெரிக்க நீதித்துறை இது தொடர்பாக கோர்ட்டில் ஒரு மனுத்தாக்கல் செய்துள்ளது.

அதில் அதானி மற்றும் சாகர் அதானிக்கு எதிரான குற்றச்சாட்டுக்களைத் தள்ளுபடி செய்யும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. அதானி மீதான குற்றச்சாட்டுக்களை ஆய்வு செய்ததாகவும், இனிமேல் இதற்காக மேற்கொண்டு செலவிடப்போவதில்லை என்றும் நீதித்துறை கோர்ட்டில் தெரிவித்துள்ளது.

இதை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் இருவர் மீதான புகார்களைத் தள்ளுபடி செய்தது. அதானி குழுமத்தின் உலகளாவிய விரிவாக்கத் திட்டங்களுக்குப் பெரும் இடையூறை ஏற்படுத்தக்கூடிய சூழல் இருந்ததால் அதானி இவ்வழக்கை மேற்கொண்டு இழுத்தடிக்காமல் முடித்துக்கொண்டுள்ளதாகப் பார்க்கப்படுகிறது.

அமெரிக்கக் குற்றவியல் நடவடிக்கைகளில் இத்தகைய வழக்குத் தள்ளுபடிகள் அரிதானவை. விரிவான விசாரணைக்குப் பிறகு, இவ்வழக்கை மேற்கொண்டு முன்னெடுத்துச் செல்வது இனி அவசியமில்லை என்ற முடிவுக்கு கோர்ட் வந்துள்ளதையே இது காட்டுகிறது.

குற்றச்சாட்டுகளை நிலைநிறுத்தப் போதுமான ஆதாரங்கள் இல்லை என்று அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் கண்டறிந்ததை அடுத்து, இந்த வழக்கு அதானிக்குச் சாதகமாகத் திரும்பியது என இவ்விவகாரம் குறித்து அறிந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

Gautam Adani - கெளதம் அதானி
Gautam Adani - கெளதம் அதானி

அமெரிக்க அரசுத் தரப்பு வழக்கறிஞர்களுக்கும், அதானி தரப்பு சட்டக் குழுவிற்கும் இடையே மாதக்கணக்கில் நடைபெற்ற தீவிரமான விசாரணைக்குப் பிறகு இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது.

அமெரிக்க சட்ட ஆலோசகர்கள் விசாரணையின் போது தொடர்ச்சியாக ஆவணங்களையும், விளக்கக் காட்சிகளையும் கோர்ட்டில் அளித்தனர். கௌதம் மற்றும் சாகர் அதானி ஆகியோருக்கு எதிராகக் குற்றச்சாட்டுகளை நிரூபிக்க எவ்விதக் ஆதாரங்களையும் அமெரிக்க சட்டவல்லுனர்களால் வெளிக்கொண்டு வர முடியவில்லை. இதன் விளைவாக, அமெரிக்க நீதித்துறை வழக்கை ரத்து செய்ய முடிவு செய்தது.

`அந்த வலையில் மாட்டிக்கொண்டேன்...'- நண்பர்களுக்கு மெசேஜ் அனுப்பிவிட்டு இளம்பெண் எடுத்த விபரீத முடிவு

உத்தரப் பிரதேச மாநிலம், நொய்டாவைச் சேர்ந்தவர் துவிஷா சர்மா. எம்.பி.ஏ பட்டதாரியான இவர், டெல்லியில் உள்ள ஒரு நிறுவனத்தில் பல ஆண்டுகள் பணியாற்றியிருக்கிறார். 2024-ல் ஒரு டேட்டிங் செயலி மூலம் போபாலைச் சேர... மேலும் பார்க்க

டிரைவருடனான பழக்கத்தை கைவிட மறுத்த அக்கா; வீட்டின் முன் கொடூரக் கொலை செய்த தம்பி - நடந்தது என்ன?

தூத்துக்குடி மாவட்டம், வல்லநாடு அருகேயுள்ள சென்னல்பட்டியைச் சேர்ந்தவர் பெருமாள். இவரது மகள் முத்துமாலை. இவர், பாளையங்கோட்டையில் உள்ள ஒரு அரசுடைமை வங்கியில் மேலாளராகப் பணிபுருந்து வந்தார். இவரும் இவரது... மேலும் பார்க்க

திருச்சி: திருமணம் செய்ய மறுத்த கல்லூரி மாணவி; தலையில் கல்லால் கொடூரத் தாக்குதல் நடத்திய இளைஞர்

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியைச் சேர்ந்த 22 வயது இளம்பெண், திருச்சியில் தங்கி அங்குள்ள கல்லூரி ஒன்றில் எம்.பி.ஏ படித்துக் கொண்டே, பகுதிநேர வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கும், சிவகங்கை மாவட்டம், ... மேலும் பார்க்க

சனி பூஜைக்கு வந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சி - மறுத்த பெண், உறவினரை கொன்ற மந்திரவாதி

மகாராஷ்டிரா மாநிலம் துலே அருகில் உள்ள நிஜாம்பூர் ஜெய்தானே என்ற பகுதியில் வசிப்பவர் யோகேஷ் கெய்ர்னார். இவர் பில்லி சூனியம் வைக்கக்கூடிவராக அறியப்படும் ஒரு மந்திரவாதி. இவர் சொந்தமாக ஒரு கோயில் நடத்தி வர... மேலும் பார்க்க

மும்பை: கணவன் துணையோடு காதலன் கொலை; டிரம்மில் அடைத்து சாக்கடையில் வீசிய பெண் சிக்கியது எப்படி?

டிரம் கொலைகள் பற்றி உத்தரப் பிரதேசத்தில் கேள்விப்பட்டு இருக்கிறோம். ஆனால் மும்பையில் தற்போது அது போன்ற ஒரு சம்பவம் நடந்து இருக்கிறது. மும்பை அருகில் உள்ள மும்ப்ரா என்ற இடத்தில் வசித்தவர் அர்பாஸ் அலிகா... மேலும் பார்க்க

வாடகைக்கு பதிலாக மனைவி, 13 வயது மகளைப் பாலியல் வன்கொடுமைக்கு அனுமதித்த தந்தை; குஜராத்தில் அதிர்ச்சி

குஜராத் மாநிலம் மொர்பி என்ற இடத்தில் வசித்து வந்தவர் நரேந்திரா(பெயர் மாற்றப்பட்டுள்ளது). 45 வயதாகும் நரேந்திரா தனது மனைவி, மகளுடன் வாடகை வீடு ஒன்றில் வசித்து வந்தார். வீட்டிற்கு மாதம் ரூ.2 ஆயிரம் கொடு... மேலும் பார்க்க