செய்திகள் :

"கேலி செய்வது கோழைத்தனம்" - குஷ்பு மகள்களுக்கு நடந்த உருவக்கேலிக்கு நடிகை ராதிகா கண்டனம்

post image

நடிகையும் அரசியல்வாதியுமான குஷ்பு மற்றும் திரைப்பட இயக்குநரும் நடிகருமான சுந்தர் சி ஆகியோரின் இரண்டாவது மகள் அனந்திதா.

இயக்குநர் மணிரத்னத்திடம் 'பொன்னியின் செல்வன்' உள்ளிட்ட படங்களில் உதவி இயக்குநராகப் பணிபுரிந்திருக்கிறார். சமீபத்தில் வெளியான 'டபுள் ஆக்குபன்ஸி' திரைப்படத்தில் க்ரியேட்டிவ் தயாரிப்பாளராகப் பணியாற்றியிருந்தார்.

அனந்திதா
அனந்திதா

இந்தப் படம் தொடர்பான புரொமோஷன் பணிகளில் ஈடுபட்டிருந்தபோது அவரது புகைப்படங்களையும், வீடியோக்களையும் பார்த்து பலரும் உருவக்கேலி செய்திருந்தனர். அதற்கு அவர் பேட்டிகளில் பதிலடியும் கொடுத்திருந்தார்.

அதேபோல சமீபத்தில் திருமணம் முடிந்த குஷ்புவின் மூத்த மகள் அவந்திகாவும் உருவக்கேலியைச் சந்தித்திருக்கிறார்.

இந்நிலையில் குஷ்புவின் மகள்களுக்கு ஆதரவாக நடிகை ராதிகா குரல் கொடுத்திருக்கிறார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், "பேச்சுரிமை என்பது மற்றவர்களைத் துன்புறுத்துவதற்கான உரிமை அல்ல.

குஷ்பு மூத்த மகள் திருமண விழாவில்
குஷ்பு மூத்த மகள் திருமண விழாவில்

ஒரு பொது நபரின் மகள்களைக் கேலி செய்வது நகைச்சுவை ஆகாது. அது கோழைத்தனமான செயல். ஒருவரது தோற்றம் என்பது சாதனையும் அல்ல, தோல்வியும் அல்ல. அவரது குணாதிசயமே முக்கியமானது.

நான் குஷ்பு மற்றும் அவரது மகள்களுக்கு எனது ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறேன். இதுபோன்ற தரமற்ற செயல்களில் யார், எங்கு ஈடுபட்டாலும் அதனை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

ஒரு பெண்ணை விமர்சிக்கலாம், ஆனால் அவளுடைய குழந்தைகளைக் கேலி செய்வது நாகரிகம் அல்ல. அது ஒரு சமூகத்தின் ஒழுக்கத் தோல்வி'' என்று பதிவிட்டிருக்கிறார்.

ஜானகி மறைவு: "சொந்த வாழ்வில் எத்தனையோ துக்கங்களைத் தாங்கியிருக்கிறார்..." - இளையராஜா இரங்கல்

பின்னணி பாடகி ஜானகியின் மறைவிற்கு திரைபிரபலங்கள், அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் இசையமைப்பாளர் இளையராஜா ஜானகியின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியி... மேலும் பார்க்க

"ஒரு தாயிடம் ஒருபோதும் விளையாடாதீர்கள்" - மகள்கள் மீதான உருவக்கேலிக்கு குஷ்பு பதிலடி

நடிகையும், அரசியல்வாதியுமான குஷ்புவின் மகள்கள் உருவக்கேலியைச் சந்தித்து வந்த நிலையில் குஷ்பு தனது எக்ஸ் தளப்பக்கத்தில் விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார். அ... மேலும் பார்க்க

Anbe Diana:``'பெரம்பூர்' சுற்றுலாத் தலம் போல மக்களின் கவனத்தை ஈர்க்கப்போகிறது" - நடிகர் சமுத்திரகனி

'ஜமா' திரைப்படத்தின் மூலம் கவனம் ஈர்த்த பாரி இளவழகன் கதை, திரைக்கதை எழுதி கதாநாயகனாக நடித்து 'அன்பே டயானா' என்ற திரைப்படத்தை உருவாக்கியிருக்கிறார். 'குட் நைட்' போன்ற வெற்றிப் படங்களைத் தயாரித்த மில்லி... மேலும் பார்க்க

Anbe Diana: ``'டைரக்ஷன் மட்டும் பண்ணுங்க; ஹீரோவா வேணாம்' என்றார்கள்; ஆனால்..." - பாரி இளவழகன்

'ஜமா' திரைப்படத்தின் மூலம் கவனம் ஈர்த்த பாரி இளவழகன் கதை, திரைக்கதை எழுதி கதாநாயகனாக நடித்து 'அன்பே டயானா' என்ற திரைப்படத்தை உருவாக்கியிருக்கிறார். இந்த படத்தில், ரம்யா ரங்கநாதன், ரோஜா, சேத்தன் ஆகியோர... மேலும் பார்க்க

Anbe Diana:``ஒரு படைப்பாளியின் பாதையை மக்கள்தான் தீர்மானிக்கிறார்கள்" - சசிகுமார்

'ஜமா' திரைப்படத்தின் மூலம் கவனம் ஈர்த்த பாரி இளவழகன் கதை, திரைக்கதை எழுதி கதாநாயகனாக நடித்து 'அன்பே டயானா' என்ற திரைப்படத்தை உருவாக்கியிருக்கிறார். 'குட் நைட்' போன்ற வெற்றிப் படங்களைத் தயாரித்த மில்லி... மேலும் பார்க்க

Anbe Diana: ``டப்பிங் பேசும்போது எனக்கு கண்ணீர் வந்தது" - 12 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழில் ரோஜா!

'ஜமா' திரைப்படத்தின் மூலம் கவனம் ஈர்த்த பாரி இளவழகன் கதை, திரைக்கதை எழுதி கதாநாயகனாக நடித்து 'அன்பே டயானா' என்ற திரைப்படத்தை உருவாக்கியிருக்கிறார். 'குட் நைட்' போன்ற வெற்றிப் படங்களைத் தயாரித்த மில்லி... மேலும் பார்க்க