செய்திகள் :

கோவை அருகே காட்டு யானை – மனித எதிர்கொள்ளல்... பரிதாபமாக உயிரிழந்த முதியவர்

post image

கோவை மாவட்டத்தின்  மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதிகளான  மதுக்கரை, போளுவாம்பட்டி, ஆனைகட்டி  பகுதிகளில் தற்போது யானைகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது.

இந்நிலையில் கேரள வனப்பகுதியை ஒட்டியுள்ள கந்தே கவுண்டன் சாவடி அருகேயுள்ள புதுப்பதி கிராமத்தை  சேர்ந்த 75 வயதான முதியவர் நடராஜ், இன்று காலை 6 மணியளவில் காலை கடனை கழிக்க அருகில் உள்ள ஓடைப் பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது அவ்வழியாக வந்த ஒற்றை யானை நடராஜை துரத்தி வந்து தாக்கியதில் படுகாயமடைந்தார்.

இதனையடுத்து அவரின் அலறல் சத்தத்தை கேட்ட அருகில் இருந்தவர்கள் அங்கு வந்து சத்தம் எழுப்பி யானையை விரட்டினர்.

இது குறித்து வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதன் பேரில் விரைந்து வந்த வனப்பணியாளர்கள் உதவியுடன் நடராஜ் மீட்கப்பட்டு, ஆம்புலன்ஸ் மூலம் அருகில் உள்ள  மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவர்கள் நடத்திய பரிசோதனையில் நடராஜ் மருத்துவமனைக்கு கொண்டு வரும் வழியிலேயே உயிரிழந்தது தெரியவந்தது.

இதனை தொடர்ந்து நடராஜ் உடல் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி  வைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். காட்டு யானை தாக்கி முதியவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோத்தகிரி: வீடுகளை நோக்கி படையெடுக்கும் லட்சக்கணக்கான பூச்சிகள்; அச்சத்தில் மக்கள்!

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பல கிராமங்களில் கடந்த ஒருவாரமாக லட்சக்கணக்கான பறக்கும் பூச்சிகள் வீடுகளை நோக்கி படையெடுத்து வருவதால் மக்கள் அச்சமடைந்து வருகின்றனர். இது குறித்த... மேலும் பார்க்க

பொள்ளாச்சி: கிணற்றுக்குள் தவறி விழுந்த காட்டுப்பன்றி கூட்டம்; வனத்துறை போராடி மீட்டது எப்படி?

கோவை மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய வனப்பகுதிகளில் காட்டு யானை, காட்டுப்பன்றி உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் உள்ளன.இவை உணவு மற்றும் தண்ணீர் தேடி சுற்று வட்டாரக் கிராமப் பகுதிகளுக்குள் நுழ... மேலும் பார்க்க

தாமிரபரணி ஆற்றங்கரையை பசுமைவனமாக்கிய லூர்துராஜா!

ஆறு, குளங்கள் போன்ற நீர்நிலைகளை தெய்வமாகவும், தாயாகவும் பார்க்கின்ற இதே சமூகம்தான் அவற்றில் குப்பை, அழுக்குத் துணிகளை வீசி நீர்நிலைகளையும், ஆற்றின் கரைகளையும் நாசப்படுத்தி வருகிறது. எவற்றையும், எந்த வ... மேலும் பார்க்க

Birds: "இந்தப் பூமி வெறும் மனிதர்களுக்கானது மட்டுமல்ல..." - கண்ணாடிச் சுவர்களால் பலியாகும் பறவைகள்

மலைகளின் அரசியான நீலகிரி மலையில் இயற்கை எழிலைச் சிதைத்து கட்டப்பட்டு வரும் ஆடம்பர தங்கும் விடுதிகளால் ஏற்படும் சூழலியல் பாதுகாப்புகள் ஒருபுறம் என்றால் தங்கும் விடுதிக்குள் இருந்தவாறே இயற்கை எழிலைக் கண... மேலும் பார்க்க

Vulture: மின்கம்பியில் முடிந்த பாறு கழுகின் வனாந்திர பெருங்கனவு - வேதனையில் ஆய்வாளர்கள்!

இயற்கையின் பெருங்கொடைகளில் ஒன்றாக அறியப்படும் பாறு கழுகுகள் பறவையினம், கானகத்தின் தூய்மைக் காவலனாகப் பெரும் பங்காற்றி வருகின்றன. வனத்தில் செத்து மடியும் சடலங்களை உண்டு வாழும் இவை, இறந்த சடலங்களால் மற்... மேலும் பார்க்க