செய்திகள் :

கோவை கல்லூரி மாணவி மீது கத்தியால் குத்தி தாக்குதல் - சக மாணவன் வெறிச் செயல்

post image

கோவை சத்தி உள்ள தனியார் பொறியியல் கல்லூரி இயங்கி வருகிறது. அங்கு 17 வயது மாணவி ஒருவர் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். அதே வகுப்பில் ஹர்ஷவர்தன் என்கிற 18 வயது மாணவர் படித்து வருகிறார். ஹர்ஷவர்தன் மாணவியுடன் பழகி வந்துள்ளார்.

கோவை
கோவை

இந்நிலையில் இன்று காலை கல்லூரி வளாகத்தில் வைத்து ஹர்ஷவர்தன் மாணவியை கத்தியால் குத்தியுள்ளார். இந்த சம்பவம் பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது. காயமடைந்த மாணவி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

இந்த சம்பவம் குறித்து சரவணம்பட்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். முதல்கட்ட விசாரணையில், ஹர்ஷவர்தன் மற்றும் மாணவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு வந்துள்ளது. கல்லூரியில் மற்ற மாணவர்களுடன் பேசக்கூடாது என்று ஹர்ஷவர்தன் மிரட்டியுள்ளார்.

தாக்குதல்

இன்று அவர்களிடையே வாக்குவாதம் தீவிரமடைந்த நிலையில் அவர் மாணவியை கத்தியால் குத்தியுள்ளார். இதில் மாணவியின் கழுத்து, கன்னம் உள்ளிட்ட பகுதிகளில் காயம் ஏற்பட்டுள்ளது.

ஹர்ஷவர்தன் அந்த மாணவியை ஒரு தலைபட்சமாக காதலித்து வந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக காவல்துறையினர் பாதிக்கப்பட்ட மாணவி, ஹர்ஷவர்தன் மற்றும் கல்லூரி நிர்வாகத்திடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவத்திற்கு அரசியல் கட்சியினர் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.

கோவை

கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோவை விமான நிலையம் அருகே தனியார் கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். அதே கோவையில் நடைபெற்றுள்ள மற்றொரு சம்பவம் மாணவிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத்: 33 கிராமங்களுக்காக ரூ.21 கோடிக்கு கட்டிய தண்ணீர் தொட்டி- திறக்கப்படுவதற்கு முன்பே இடிந்தது!

குஜராத் மாநிலம் சூரத் அருகில் உள்ள தட்கேஷ்வர் என்ற கிராமத்தில் மாநில அரசு, 33 கிராமங்களுக்கு தண்ணீர் சப்ளை செய்வதற்காக ரூ.21 கோடியில் 9 லட்சம் லிட்டர் தண்ணீரை சேமிக்கும் வகையில் 15 மீட்டரில் பிரம்மாண்... மேலும் பார்க்க

நெல்லை: சாலையில் தூக்கி வீசப்பட்ட ஆண் சிசுவின் சடலம்; நாய் கவ்விச் சென்ற அவலம்; பின்னணி என்ன?

நெல்லை, மேலப்பாளையம் அருகில் உள்ளது மேலநத்தம். இங்கு பழைய அரிசி ஆலை ஒன்று உள்ளது. இந்த ஆலைக்குச் செல்லும் சாலையின் ஓரத்தில் தெருநாய் ஒன்று சிவப்பு நிறத் துணி சுற்றப்பட்ட ஒரு பார்சலை கவ்விச் சென்று வாய... மேலும் பார்க்க

`பொண்டாட்டினு கூட பார்க்காம அசிங்கமா வீடியோ எடுத்து.!’ அதிர வைக்கும் வரதட்சனை புகார்; விபரீத முடிவு

விழுப்புரம் மாவட்டம் பக்கிரிப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த எம்.ஏ பட்டதாரியான பிரியங்காவுக்கும், புதுச்சேரி பிள்ளையார்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த கார்த்திகேயனுக்கும் கடந்த 2025 அக்டோபர் 31-ம் தேதி திரும... மேலும் பார்க்க

தூத்துக்குடி: திருமணம் மீறிய உறவுக்கு இடையூறு; 4 வயது பெண் குழந்தையை வன்கொடுமை செய்து கொன்ற கொடூரன்

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோயில் இருளப்பபுரத்தைச் சேர்ந்தவர் சத்யா . இவருக்கும் ராஜா என்பவருக்கும் திருமணமாகி ஒரு பெண் குழந்தை உள்ளது. ராஜா இறந்து விட்டதால், தற்போது அந்தக்குழந்தை ராஜாவின் தாயிடம் வ... மேலும் பார்க்க

பொங்கல் பரிசுத் தொகை: முதியவர்களைக் குறிவைத்து ரூ. 500ஐ அமுக்கிய ரேஷன்கடை ஊழியர்; அதிகாரிகள் விசாரணை

தமிழ்நாடு அரசு பொங்கல் பரிசாக குடும்ப அட்டைக்கு ரூ.3000 மற்றும் ஒரு கரும்பு, ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சீனி மற்றும் வேட்டி, சேலை அறிவித்தது. இந்தப் பொருட்கள் ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு வழங்கப... மேலும் பார்க்க

கேரளா: பேருந்தில் எடுத்த வீடியோ வெளியானதால் ஊழியர் தற்கொலை செய்த வழக்கு - இளம் பெண் கைது

கேரள மாநிலம் கோழிக்கோடு வடகரா பகுதியை சேர்ந்தவர் ஷிம்ஜிதா முஸ்தபா(35). இன்ஸ்டா கன்டென்ட் கிரியேட்டரான இவர், கடந்த சில தினங்களுக்கு முன் பேருந்தில் பயணம் செய்தபோது கோழிக்கோடு கோவிந்தாபுரம் பகுதியைச் சே... மேலும் பார்க்க