செய்திகள் :

கோவை: 24 மாணவிகளின் புகைப்படங்களை ஆபாசமாகச் சித்தரித்து மிரட்டல்; கல்லூரி மாணவர் கைதான பின்னணி என்ன?

post image

கோவை மாவட்டம், பொள்ளாச்சி சாலையில் தனியார் கல்லூரி உள்ளது. அங்கு அண்மைக்காலமாக மாணவிகளின் புகைப்படங்களை ஆபாசமாக மார்பிங் செய்து இன்ஸ்டராகிராம், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பதிவிடப்பட்டதாக காவல்துறைக்குப் புகார் வந்தது.

கோவை
கோவை

மொத்தம் 24 மாணவிகளிடமிருந்து புகார் வந்ததால், பெண் காவல் அதிகாரி மூலம் விசாரணை நடத்தப்பட்டது. அதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அந்தக் கல்லூரியில் படிக்கும் 24 மாணவிகளின் புகைப்படங்களை, ஏஐ தொழில்நுட்பத்தில் அரை குறை ஆடைகளுடன் சித்தரித்துள்ளனர். பிறகு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பெண்களின் பெயர்களில் போலியான கணக்குகளை உருவாக்கி அதில் அந்தப் புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளனர்.

இன்ஸ்டாகிராம்
இன்ஸ்டாகிராம்

மேலும் கல்லூரியின் சில வாட்ஸ்அப் குழுக்களிலும் அந்தப் புகைப்படங்கள் பகிரப்பட்டுள்ளன. அந்தப் புகைப்படங்களை நீக்க இன்ஸ்டாகிராம் நிர்வாகத்திற்குக் கடிதம் அனுப்பப்பட்டது.

காவல்துறை விசாரணையில் அதே கல்லூரியில் 3-ம் ஆண்டு படிக்கும் திருச்சியைச் சேர்ந்த மாணவர் ஒருவர் இதைச் செய்தது தெரியவந்தது. அந்த மாணவனுக்கு அதே கல்லூரியில் காதலி ஒருவர் உள்ளார். அவர் மூலம் மற்ற மாணவிகளின் புகைப்படங்களைப் பெற்றுத் தவறாகச் சித்தரித்து, மிரட்டி பணம் பறித்து வந்துள்ளனர்.

கைது
கைது

இந்தச் சம்பவம் தொடர்பாக கருமத்தம்பட்டி அனைத்து மகளிர் காவல்துறையினர், வழக்குப்பதிவு செய்து அந்த மாணவரைக் கைது செய்தனர். மேலும் மார்பிங் செய்யப்பட்ட புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் இருந்து நீக்கப்பட்டன.

சென்னை: போதைப் பொருள் வழக்கில் சிக்கிய உதவி இயக்குநர், நடிகை - அதிர்ச்சி தரும் பின்னணி தகவல்கள்!

தலைநகரில் போதைப் பொருள் விற்பனை, கடத்தல் சம்பவங்களை தடுக்க போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவுப்பிரிவு, சென்னை போலீஸ் கமிஷனர் அருண் தலைமையில் செயல்பட்டு வருகிறது. இந்த டீம், சென்னை முழுவதும் போதைப் பொருள் ... மேலும் பார்க்க

"வருந்துகிறேன்; அதற்காக நான் மன்னிப்பும் கேட்கிறேன்" - எப்ஸ்டீன் ஃபைல்ஸ் குறித்து பில் கேட்ஸ்

அமெரிக்காவில் சிறுமிகளைக் கடத்திப் பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய குற்றச்சாட்டில் கைதான ஜெஃப்ரி எப்ஸ்டீன், கடந்த 2019 ஆம் ஆண்டு சிறையிலேயே மர்மமான முறையில் உயிரிழந்தார்.எப்ஸ்டீன் பல்வேறு தரப்பினருடன் உர... மேலும் பார்க்க

டெல்லி: இந்தாண்டின் முதல் 15 நாள்களில் 800 பேர் மாயம்; 'இது சராசரிதான்' - போலீஸ் `அதிர்ச்சி' பதில்!

டெல்லியில் 'நபர்கள் காணாமல் போகும் வழக்குகள்' தொடர்ந்து அதிகம் பதிவாகி வருகின்றன. PTI வெளியிட்டுள்ள தரவுகளின் படி, 2026-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை, 807 பேர் டெல்லியில் காணாமல் போயிர... மேலும் பார்க்க

பஞ்சாப்: குருத்வாரா அருகில் ஆம் ஆத்மி கட்சித் தலைவர் லக்கி ஒபேராய் சுட்டுக்கொலை; பின்னணி என்ன?

பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் உள்ள மாடல் டவுனில் இருக்கும் குருத்வாராவிற்கு வெளியில் ஆம் ஆத்மி கட்சித் தலைவர் லக்கி ஒபேரா இன்று காலை தனது காரை நிறுத்திக்கொண்டிருந்தார்.அந்நேரம் இருசக்கர வாகனத்தில் வந்த மர... மேலும் பார்க்க

மேகாலயா: சட்டவிரோத நிலக்கரிச் சுரங்க வெடிவிபத்து; 18 உடல்கள் மீட்பு; பிரதமர் இரங்கல்; என்ன நடந்தது?

மேகாலயாவின் கிழக்கு ஜெயின்டியா மலைப்பகுதியில் அமைந்துள்ள சட்டவிரோத நிலக்கரிச் சுரங்கம் ஒன்றில் ஏற்பட்ட சக்திவாய்ந்த வெடிவிபத்தில் சிக்கி 18 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத... மேலும் பார்க்க

சபரிமலை தங்கம் கொள்ளை வழக்கு: சிறையிலிருந்து சிரித்தபடி வெளியே வந்த உன்னிகிருஷ்ணன் போற்றி

சபரிமலை ஐயப்ப சுவாமி கோயிலில் துவார பாலகர்கள் சிற்பங்களில் தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கு மற்றும் கருவறை திருநடையில் பூசப்பட்ட தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கு குறித்தும் ஐகோர்ட் நியமித்த ஸ்பெஷல் இன... மேலும் பார்க்க