Zozo: `இந்தியாவில் பிறந்து, உலக மேடையை நோக்கி' - 11 வயதேயான இளம் ஸ்டார்ட்அப் நிற...
டெல்லி: இந்தாண்டின் முதல் 15 நாள்களில் 800 பேர் மாயம்; 'இது சராசரிதான்' - போலீஸ் `அதிர்ச்சி' பதில்!
டெல்லியில் 'நபர்கள் காணாமல் போகும் வழக்குகள்' தொடர்ந்து அதிகம் பதிவாகி வருகின்றன.
PTI வெளியிட்டுள்ள தரவுகளின் படி, 2026-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை, 807 பேர் டெல்லியில் காணாமல் போயிருக்கின்றனர்.
டெல்லி போலீஸாரின் தரவுகளின் படி, காணாமல் போனவர்களில்...
> மூன்றில் இரண்டு பேர் பெண்களும், குழந்தைகளும்,
> அதில் 191 பேர் 18 வயதிற்குக் குறைந்தவர்கள், 616 பேர் 18 வயதிற்கு மேற்பட்டவர்கள்,

> 800 பேரில் 509 பெண்கள் மற்றும் குழந்தைகள், 298 பேர் ஆண்கள்,
> 18 வயதிற்குக் கீழ் காணாமல் போனவர்களில், 169 பேர் டீன்-ஏஜர்கள். 138 பேர் பெண் குழந்தைகள், 31 பேர் ஆண் குழந்தைகள்.
> இதுவரை போலீஸார் 235 பேரைக் கண்டுபிடித்துள்ளனர். 572 பேரின் நிலை தெரியவில்லை.
வெளியாகி உள்ள தரவுகளின் படி,
கடந்த மாதம் 1-ம் தேதியில் இருந்து 15 தேதிக்குள், டெல்லியில் தினமும் சராசரியாக 54 பேர் காணாமல் போயிருக்கின்றனர்.
இதில் ஒரு நாளுக்கு சராசரியாக 13 குழந்தைகள் காணாமல் போயிருக்கின்றனர்.
இந்தத் தரவுகள் டெல்லி முழுவதும் அதிர்வலைகளைக் கிளப்பியுள்ளது.
இந்த அதிர்வலைகளுக்கு டெல்லி போலீஸார் வழங்கி உள்ள பதில்...
"டெல்லியில் காணாமல் போகும் வழக்குகளின் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை.
2026-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் 1,777 காணாமல் போன வழக்குகள் பதிவாகியுள்ளன.
ஆனால், டெல்லியில் ஒவ்வொரு மாதமும் சராசரியாக 2,000 காணாமல் போன வழக்குகள் பதிவாகும்.
இந்த எண்ணிக்கை 2016-ம் ஆண்டில் இருந்து நிலைத்து வருகிறது.
2016-ம் ஆண்டில் இருந்து ஆண்டுக்கு 23,000 - 24,000 காணாமல் போன வழக்குகள் பதிவாகி வருகின்றன."

















