செய்திகள் :

'தண்ணீர் பாட்டிலில் மைக்ரோ பிளாஸ்டிக்'- உணவுப் பாதுகாப்பு ஆணையம் தகவல்; நீதிமன்றத்தின் உத்தரவு என்ன?

post image

சமீபகாலமாக மைக்ரோ பிளாஸ்டிக் தொடர்பாக விவாதங்கள் அதிகரித்திருக்கின்றன. குறிப்பாக பிறந்த குழந்தையின் நஞ்சுக் கொடியில் மைக்ரோ பிளாஸ்டிக் இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்றம் தானாக முன்வந்து இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறது. நேற்று மத்திய அரசு தரப்பில் இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் அளித்த அறிக்கை நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்டது.

அந்த அறிக்கையில், ``இமாச்சல் பிரதேசம், ராஜஸ்தான், சண்டிகர், ஹரியானா, கர்நாடகா மற்றும் மஹாராஷ்டிரா மாநிலங்களில், குடிநீர் பாட்டில்களின் மாதிரிகள், ஆய்வு செய்யப்பட்டன. இதில், மைக்ரோ பிளாஸ்டிக் இருப்பது கண்டறியப்பட்டது.

மைக்ரோ பிளாஸ்டிக்
மைக்ரோ பிளாஸ்டிக்

அதேபோல், பிளாஸ்டிக் பாக்கெட்டுகளில் பொதித்து விற்கப்படும் உப்பு, சர்க்கரையிலும் மைக்ரோ பிளாஸ்டிக் கண்டறியப்பட்டுள்ளது. பாக்கெட்டுகளில் பொதித்து விற்கப்படும் உப்பு, சர்க்கரையை உண்ணுவதால், உடல் நலத்தில் ஏற்படும் பாதிப்பு குறித்து கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. ஆய்வுகள் விரைவில் முடிக்கப்படும்" எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இந்த ஆய்வறிக்கையைப் பார்வையிட்ட நீதிபதிகள், ``குடிநீர் பாட்டில்களில் எச்சரிக்கை வாசகங்கள் இடம்பெறச் செய்ய, குடிநீர் பாட்டில் உற்பத்தி நிறுவனங்களுக்கு அறிவுறுத்த வேண்டும்" என உத்தரவிட்டு, விசாரணையைத் தள்ளி வைத்தனர்.

ECO India : வீடியோ பார்த்து பரிசை வென்றவர்கள் இவர்கள்.!

ஈகோ இந்தியா: இது DW மற்றும் விகடன் குழுமம் இணைந்து உருவாக்கி வரும் சுற்றுச்சூழல் தொடர் ஆகும். தொடர்ச்சியான புதுமைகள், நவீன விவசாய முறைகள் மற்றும் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் தொழில்நுட்பங்கள் மூலம்... மேலும் பார்க்க

கோவை: வயிற்றில் கருவுடன் உயிரிழந்த பெண் யானை; ரயில் மோதியதில் மற்றொரு யானைக்கும் சோகம்

கோவை மாவட்டம், மதுக்கரை பகுதி நவக்கரை அருகே பெண் காட்டு யானை உயிரிழந்திருப்பதாக வனத்துறைக்குத் தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் வனத்துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தினர்.பெண் யானைமருத்த... மேலும் பார்க்க

ECO India : வீடியோ பாருங்க... பரிசை அள்ளுங்க.! - இந்த வார கேள்விகளுக்கு தயாரா?

ஈகோ இந்தியா: இது DW மற்றும் விகடன் குழுமம் இணைந்து உருவாக்கி வரும் சுற்றுச்சூழல் தொடர் ஆகும். தொடர்ச்சியான புதுமைகள், நவீன விவசாய முறைகள் மற்றும் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் தொழில்நுட்பங்கள் மூலம்... மேலும் பார்க்க

விருதுநகர்: நிலநடுக்கத்தால் வீதிக்கு வந்த மக்கள்; ரிக்டர் அளவுகோளில் 3.0 ஆகப் பதிவு; என்ன நடந்தது?

தமிழ்நாட்டின் விருதுநகர் மாவட்டத்தில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், கிருஷ்ணன் கோவில், கம்மாபட்டி உள்ளிட்ட பகுதிகளில்... மேலும் பார்க்க

ECO India : வீடியோ பாருங்க... பரிசை அள்ளுங்க.! - முழு தகவல்

ஈகோ இந்தியா: இது DW மற்றும் விகடன் குழுமம் இணைந்து உருவாக்கி வரும் சுற்றுச்சூழல் தொடர் ஆகும். தொடர்ச்சியான புதுமைகள், நவீன விவசாய முறைகள் மற்றும் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் தொழில்நுட்பங்கள் மூலம்... மேலும் பார்க்க

ஆறு, குளங்களுடன் உயிர்ப்பெற்ற மதுரை வாடிப்பட்டி - கழுகு பார்வையில் பசுமை பேரழகு!

கழுகு பார்வையில் பசுமை பேரழகுகழுகு பார்வையில் பசுமை பேரழகுகழுகு பார்வையில் பசுமை பேரழகுகழுகு பார்வையில் பசுமை பேரழகுகழுகு பார்வையில் பசுமை பேரழகுகழுகு பார்வையில் பசுமை பேரழகுகழுகு பார்வையில் பசுமை பேர... மேலும் பார்க்க