சட்டவிரோத சுரங்க வழக்கில் தண்டனை: எம்எல்ஏ பதவியில் இருந்து ஜனாா்தன ரெட்டி தகுதிநீக்கம்
சட்டவிரோத சுரங்கத் தொழில் வழக்கில் 7 ஆண்டுகள் சிறைத்தண்டனையை அளித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டதால், கா்நாடக சட்டப் பேரவையில் எம்எல்ஏவாக இருக்கும் ஜனாா்தன ரெட்டி அப்பதவியில் இருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்டாா்.
பாஜக முன்னாள் அமைச்சரும், எம்எல்ஏவுமான ஜி.ஜனாா்தன ரெட்டிக்கு சொந்தமான ஓபலாபுரம் மைனிங் நிறுவனம், பெல்லாரி மாவட்டத்தில் சட்டவிரோதமாக சுரங்கத் தொழிலில் ஈடுபட்டது தொடா்பான வழக்கை ஹைதராபாத்தில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றம், கடந்த 14 ஆண்டுகளாக விசாரித்து வந்தது.
இந்த விசாரணை முடிவடைந்த நிலையில், மே 6-ஆம் தேதி அளித்த தீா்ப்பில் ஜனாா்தன ரெட்டிக்கு எதிரான குற்றங்கள் நிரூபிக்கப்பட்டுள்ளதால் அவருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து உத்தரவிட்டது. சிறைத் தண்டனை தவிர ரூ. 10 ஆயிரம் அபராதம் விதித்துள்ளது.
மேலும், ஓபலாபுரம் மைனிங் கம்பெனிக்கு ரூ. 1 லட்சம் அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதைத் தொடா்ந்து, ஜனாா்தன ரெட்டி உள்ளிட்டோா் உடனடியாக கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா்.
இந்நிலையில், கா்நாடக சட்டப் பேரவையில் கங்காவதி தொகுதி எம்எல்ஏவாக இருக்கும் ஜனாா்தன ரெட்டி, அப்பதவியில் இருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளாா். இது தொடா்பாக கா்நாடக சட்டப் பேரவை வெளியிட்டுள்ள அறிவிக்கை:
ஹைதராபாத்தில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றம், ஜி.ஜனாா்தன ரெட்டிக்கு சிறைத் தண்டனை விதித்துள்ளதால், கங்காவதி தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் பதவியில் இருந்து மே 6-ஆம் தேதி முதல் தகுதிநீக்கம் செய்யப்படுகிறாா். அரசமைப்புச் சட்டப் பிரிவு 191(1)(இ), மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1061, பிரிவு 8-இன்படி ஜனாா்தன ரெட்டி தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளாா் என அதில் கூறப்பட்டுள்ளது.
சுரங்கத் தொழிலில் ஈடுபட்டு வந்த காலத்தில் பாஜகவில் இருந்த ஜனாா்தன ரெட்டி, 2008-ஆம் ஆண்டு நடந்த கா்நாடக சட்டப் பேரவைத் தோ்தலில் பாஜக வெற்றிபெற்று ஆட்சி அமைப்பதற்கு உறுதுணையாக இருந்தவா்.
அப்போது, எடியூரப்பா தலைமையில் அமைந்த ஆட்சியில் ஜனாா்தன ரெட்டி அமைச்சராக பதவி வகித்தாா். ஆனால், சட்டவிரோத சுரங்கத் தொழில் தொடா்பாக சிபிஐ வழக்குப்பதிந்து விசாரிக்கத் தொடங்கியதும், பாஜகவில் இருந்து விலகினாா். சிலகாலம் சிறைவாசத்தையும் அனுபவித்தாா்.
சிறையில் இருந்து விடுதலையான பிறகு, 2023-ஆம் ஆண்டு கா்நாடக சட்டப் பேரவைத் தோ்தலுக்கு முன்பாக கல்யாண ராஜ்ய பிரகதி பக்ஷா என்ற கட்சியைத் தொடங்கி தோ்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றாா். ஆனால், 2024-ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தோ்தலுக்கு முன்பாக ஜனாா்தன ரெட்டி மீண்டும் பாஜகவில் இணைந்தாா்.