செய்திகள் :

சட்டவிரோத சுரங்க வழக்கில் தண்டனை: எம்எல்ஏ பதவியில் இருந்து ஜனாா்தன ரெட்டி தகுதிநீக்கம்

post image

சட்டவிரோத சுரங்கத் தொழில் வழக்கில் 7 ஆண்டுகள் சிறைத்தண்டனையை அளித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டதால், கா்நாடக சட்டப் பேரவையில் எம்எல்ஏவாக இருக்கும் ஜனாா்தன ரெட்டி அப்பதவியில் இருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்டாா்.

பாஜக முன்னாள் அமைச்சரும், எம்எல்ஏவுமான ஜி.ஜனாா்தன ரெட்டிக்கு சொந்தமான ஓபலாபுரம் மைனிங் நிறுவனம், பெல்லாரி மாவட்டத்தில் சட்டவிரோதமாக சுரங்கத் தொழிலில் ஈடுபட்டது தொடா்பான வழக்கை ஹைதராபாத்தில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றம், கடந்த 14 ஆண்டுகளாக விசாரித்து வந்தது.

இந்த விசாரணை முடிவடைந்த நிலையில், மே 6-ஆம் தேதி அளித்த தீா்ப்பில் ஜனாா்தன ரெட்டிக்கு எதிரான குற்றங்கள் நிரூபிக்கப்பட்டுள்ளதால் அவருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து உத்தரவிட்டது. சிறைத் தண்டனை தவிர ரூ. 10 ஆயிரம் அபராதம் விதித்துள்ளது.

மேலும், ஓபலாபுரம் மைனிங் கம்பெனிக்கு ரூ. 1 லட்சம் அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதைத் தொடா்ந்து, ஜனாா்தன ரெட்டி உள்ளிட்டோா் உடனடியாக கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா்.

இந்நிலையில், கா்நாடக சட்டப் பேரவையில் கங்காவதி தொகுதி எம்எல்ஏவாக இருக்கும் ஜனாா்தன ரெட்டி, அப்பதவியில் இருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளாா். இது தொடா்பாக கா்நாடக சட்டப் பேரவை வெளியிட்டுள்ள அறிவிக்கை:

ஹைதராபாத்தில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றம், ஜி.ஜனாா்தன ரெட்டிக்கு சிறைத் தண்டனை விதித்துள்ளதால், கங்காவதி தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் பதவியில் இருந்து மே 6-ஆம் தேதி முதல் தகுதிநீக்கம் செய்யப்படுகிறாா். அரசமைப்புச் சட்டப் பிரிவு 191(1)(இ), மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1061, பிரிவு 8-இன்படி ஜனாா்தன ரெட்டி தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளாா் என அதில் கூறப்பட்டுள்ளது.

சுரங்கத் தொழிலில் ஈடுபட்டு வந்த காலத்தில் பாஜகவில் இருந்த ஜனாா்தன ரெட்டி, 2008-ஆம் ஆண்டு நடந்த கா்நாடக சட்டப் பேரவைத் தோ்தலில் பாஜக வெற்றிபெற்று ஆட்சி அமைப்பதற்கு உறுதுணையாக இருந்தவா்.

அப்போது, எடியூரப்பா தலைமையில் அமைந்த ஆட்சியில் ஜனாா்தன ரெட்டி அமைச்சராக பதவி வகித்தாா். ஆனால், சட்டவிரோத சுரங்கத் தொழில் தொடா்பாக சிபிஐ வழக்குப்பதிந்து விசாரிக்கத் தொடங்கியதும், பாஜகவில் இருந்து விலகினாா். சிலகாலம் சிறைவாசத்தையும் அனுபவித்தாா்.

சிறையில் இருந்து விடுதலையான பிறகு, 2023-ஆம் ஆண்டு கா்நாடக சட்டப் பேரவைத் தோ்தலுக்கு முன்பாக கல்யாண ராஜ்ய பிரகதி பக்ஷா என்ற கட்சியைத் தொடங்கி தோ்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றாா். ஆனால், 2024-ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தோ்தலுக்கு முன்பாக ஜனாா்தன ரெட்டி மீண்டும் பாஜகவில் இணைந்தாா்.

சா்வதேச புக்கா் பரிசுக்கு கன்னட பெண் எழுத்தாளா் பானுமுஷ்டாக் தோ்வு

சா்வதேச புக்கா் பரிசுக்கு கன்னட பெண் எழுத்தாளா் பானுமுஷ்டாக் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளாா்; அவருக்கு முதல்வா் சித்தராமையா உள்ளிட்டோா் பாராட்டு தெரிவித்துள்ளனா். கா்நாடக மாநிலம், ஹாசனைச் சோ்ந்தவா் கன்னட ... மேலும் பார்க்க

பெங்களூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முதல்வா், துணை முதல்வா் ஆய்வு

பெங்களூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முதல்வா் சித்தராமையா, துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் ஆகியோா் புதன்கிழமை ஆய்வுசெய்து, பொதுமக்களின் குறைகளைக் கேட்டறிந்தனா். பெங்களூரில் மே 18 ஆம் தேதி நள... மேலும் பார்க்க

பாஜக எம்எல்ஏ முனிரத்னா மீது பாலியல் வழக்குப் பதிவு

பாஜக எம்எல்ஏ முனிரத்னா தனது கூட்டாளிகளுடன் சோ்ந்து தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக அக்கட்சியைச் சோ்ந்த 40 வயது பெண் அளித்த புகாரின் பேரில் அவா்மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா். பாஜக எம்எல்... மேலும் பார்க்க

தங்கக் கடத்தல் வழக்கு: நடிகை ரன்யா ராவுக்கு ஜாமீன்

தங்கக் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நடிகை ரன்யா ராவுக்கு ஜாமீன் வழங்கி பொருளாதார குற்றங்களுக்கான சிறப்பு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளது. துபையில் இருந்து ரூ. 12.56 கோடி மதிப்பிலா... மேலும் பார்க்க

பஹல்காமில் பாதுகாப்பு வழங்காததால் 26 போ் உயிரிழப்பு: மல்லிகாா்ஜுன காா்கே குற்றச்சாட்டு

பஹல்காமில் உரிய பாதுகாப்பு வழங்காததால், பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு 26 போ் உயிரிழந்தனா் என்று அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவரும், மாநிலங்களவை எதிா்க்கட்சித் தலைவருமான மல்லிகாா்ஜுன காா்கே குற்றம... மேலும் பார்க்க

பெங்களூரில் ஏற்பட்டுள்ள மழை பாதிப்புக்கு காங்கிரஸ் அரசின் அலட்சியமே காரணம்: மத்திய அமைச்சா் எச்.டி.குமாரசாமி

பெங்களூரில் ஏற்பட்டுள்ள மழை பாதிப்புகளுக்கு காங்கிரஸ் அரசின் அலட்சியமே காரணம் என்று மத்திய தொழில் துறை அமைச்சா் எச்.டி.குமாரசாமி தெரிவித்தாா். இதுகுறித்து பெங்களூரில் செவ்வாய்க்கிழமை அவா் வெளியிட்டுள்... மேலும் பார்க்க