செய்திகள் :

சட்ட விரோத குவாரி: அறப்போர் இயக்கம் முன்னெடுத்த கூட்டத்தில் புகுந்த குண்டர்கள்!? - என்ன நடந்தது?

post image

அறப்போர் இயக்கத்தின் சார்பில் திருநெல்வேலியில் சட்டவிரோத கல்குவாரியால் என்ன ஆபத்து இருக்கிறது என்பதை ஆவணப்படுத்தும் நிகழ்வு நடத்தப்பட்டது. அதில் சிலர் நுழைந்து மிரட்டல் விடுத்ததாக அறப்போர் இயக்கம் குற்றம்சாட்டியிருக்கிறது.

இது தொடர்பாக அறப்போர் இயக்கம் வெளியிட்டிருக்கும் எக்ஸ் பக்கப் பதிவில், ``நெல்லையில் சட்ட விரோதமாக கல் குவாரிகள் நடத்தி இயற்கை வளங்களை திருடி வருபவர்கள் குறித்து அறப்போர் இயக்கம் பல வருடங்களாக புகார் அளித்து வருகிறது.

இன்று திருநெல்வேலியில் இந்த சட்ட விரோத திருட்டு குவாரிகளால் அங்கே வசிக்கும் பொது மக்களுக்கும், விவசாயிகளுக்கும் ஏற்படும் பிரச்னைகள் குறித்து விவாதிக்க கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது.

அறப்போர் இயக்கம் முன்னெடுத்த கூட்டத்தில் புகுந்த குண்டர்கள்
அறப்போர் இயக்கம் முன்னெடுத்த கூட்டத்தில் புகுந்த குண்டர்கள்

அந்த கூட்டத்தில் மக்கள் கருத்தை கேட்டுக் கொண்டிருந்த சென்னை உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் PUCL சுரேஷ் அவர்கள் மீது குவாரி ஆதரவு குண்டர்கள் தாக்குதல் நடத்தி இருக்கிறார்கள். அவர் அறப்போர் இயக்கத்தின் சட்ட ஆலோசகரும் கூட.

உங்கள் வன்முறை அறப்போர் இயக்கத்தின் பணிகளை எந்த வகையிலும் பாதிக்காது என்பதை மட்டும் இந்த நேரத்தில் சொல்லிக் கொள்கிறோம்." எனக் குறிப்பிட்டிருந்தது.

மற்றொரு பதிவில், ``சட்ட விரோத குவாரிகளுக்கு எதிரான அறப்போர் தொடரும். திருநெல்வேலியில் சட்டவிரோத திருட்டு கல் குவாரிகளால் மக்கள் எப்படி பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பதை ஆவணப்படுத்தும் நிகழ்வு இன்று நடந்தது.

இதில் கலாட்டா செய்ய வேண்டும் என்பதற்காகவே திருட்டு குவாரி ரவுடிகள் சிலர் வந்து தகராறு செய்தார்கள். நாற்காலிகளை தூக்கி எறிந்து கலாட்டா செய்தார்கள்.

ஆனால் எத்தனை மிரட்டல்கள் வந்தாலும் உருட்டல்கள் வந்தாலும் அறப்போர் தொடரும். இது போன்ற தடைகள் நம் வேலைகளை ஒருபொழுதும் நிறுத்தாது.

இன்னும் வேகமாக செயல்பட்டு சட்டவிரோத திருட்டு கல் குவாரி ஊழல்களை வெளிக்கொண்டு வருவோம். மக்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளை வெளிக்கொண்டு வருவோம்.

இது போன்ற சட்ட விரோத திருட்டு குவாரிகளை ஆதரிப்பதை திமுக அரசு எப்பொழுது நிறுத்தப் போகிறது? திருட்டு குவாரிகளின் திருட்டை எப்பொழுது தடுக்க போகிறது?

திருட்டு குவாரி முதலாளிகளை விட மக்கள் நலன் முக்கியம் என்பதை முதலமைச்சர் ஸ்டாலின் எப்பொழுது உணர போகிறார்?" என்று குறிப்பிட்டுள்ளனர்.

குறிப்பு: சட்ட விரோதமாக திருட்டு குவாரி நடத்தி இயற்கை வளங்களை திருடுபவர்கள் திருடர்கள் தான்." எனக் குறிப்பிட்டிருக்கிறது.

இலங்கைக் படையின் அத்துமீறல்: 35 மீனவர்கள் கைது; `அழுத்தமாக வலியுறுத்துகிறேன்' - தவெக தலைவர் விஜய்

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியிலிருந்து மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் 35 பேரை இலங்கை கடற்படை கைது செய்திருக்கிறது. மீனவர்களிடமிருந்து மூன்று விசைப் படகுகளும், ஒரு நாட்டுப் படகும் கைப்பற்றப்பட்டதாகவும் ... மேலும் பார்க்க

``தைவானை தாக்கினால் என்ன நடக்கும் என்பது அவர்களுக்கே தெரியும்" - சீனாவை எச்சரித்த ட்ரம்ப்

31-ம் தேதி தென் கொரியாவில் ஆசியா - பசிபிக் பிராந்திய பொருளாதார கூட்டமைப்பு மாநாடு நடந்தது. இந்த மாநாட்டில் பங்குகொள்வதற்காக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் சீன அதிபர் ஜின்பிங் தென் கொரியா சென்றிருந்தன... மேலும் பார்க்க

``திமுக ஆட்சியில் பாதுகாப்பில்லை; கோவை மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு காரணம்'' -அன்புமணி கண்டனம்

கோவையில் தனியார் கல்லூரி மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமைக்கு கண்டனம் தெரிவித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பதிவிட்டிருக்கின்றனர். அந்தப் பதிவில் "கோவையில் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட... மேலும் பார்க்க

``நம்பினார் கெடுவதில்லை; எடப்பாடி பழனிசாமியை நம்பி கெட்டவர்கள் யாரும் இல்லை'' - ஆர்.பி. உதயகுமார்

“ஜெயலலிதா இருக்கின்ற வரை அமைச்சராக முடியாமல், அவர் நம்பிக்கையை ஏன் நீங்கள் பெற முடியவில்லைய்? ஜெயலலிதாவிற்கு நீங்கள் செய்த துரோகம் என்ன?” என்று செங்கோட்டையனிடம் முன்னாள் அமைச்சர் ஆர். பி. உதயகுமார் கே... மேலும் பார்க்க

``அதிமுக - தவெக கூட்டணி அமைத்து வென்றால், விஜய்யை காலி செய்து விடுவார் எடப்பாடி'' - டிடிவிதினகரன்

`SIR குறித்து ஏன் பயம்?'திருச்சியில் அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர்,"எஸ்.ஐ.ஆர் குறித்து அனைத்து கட்சி கூட்டத்தை அரசு நடத்தியிருந்தால் கல... மேலும் பார்க்க