செய்திகள் :

சத்தீஷ்கர்: ஒரே இரவில் மாயமான இரும்பு பாலம் - 5 பேர் கைது; மூளையாக செயல்பட்ட பழைய இரும்பு வியாபாரி!

post image

இந்தியாவில் அவ்வப்போது இரும்பால் கட்டப்பட்ட பாலங்கள் காணாமல் போய்விடுகிறது. இதற்கு முன்பு பீகாரில் ஷெட்டில் நிறுத்தி இருந்த ரயிலைக்கூட ஒவ்வொரு பகுதியாக கழற்றி எடுத்துச்சென்று விற்பனை செய்துள்ளனர். இப்போது சத்தீஷ்கரில் ஒரு இரும்பு பாலம் திடீரென காணாமல் போய் இருக்கிறது.

சத்தீஷ்கரில் உள்ள கோர்பா என்ற இடத்தில் கால்வாய் மீது சிறிய இரும்பு பாலம் ஒன்று கட்டப்பட்டு இருந்தது. 5 அடி அகலமும், 60 அடி நீளமும் கொண்ட அந்த இரும்பு பாலத்தை பொதுமக்கள் நடப்பதற்கு பயன்படுத்தி வந்தனர்.

பாலம் திருட்டு போவதற்கு முந்தைய நாள் இரவு 11 மணி வரை மக்கள் அதனை பயன்படுத்தி இருக்கின்றனர். காலையில் அந்த பாலத்தின் வழியாக கரையின் அடுத்த பகுதிக்கு செல்ல பொதுமக்கள் வந்தபோது இரும்பு பாலம் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இது குறித்து உள்ளூர் கவுன்சிலர் லட்சுமண் என்பவரிடம் பொதுமக்கள் புகார் செய்தனர். லட்சுமண் இது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவரிடம் புகார் செய்தார்.

அதன் அடிப்படையில் மாவட்ட ஆட்சித்தலைவர் இது தொடர்பாக போலீஸில் புகார் செய்தார். அப்புகாரின் அடிப்படையில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். விசாரணையில் அப்பகுதியை சேர்ந்த பழைய இரும்பு வியாபாரி ஒருவர் தனது ஆட்களுடன் வந்து கேஸ் கட்டரை பயன்படுத்தி இரும்பு பாலத்தை அடியோடு வெட்டி எடுத்து சென்று இருப்பது தெரிய வந்தது. பழைய இரும்பு வியாபாரி இரும்பு பாலத்தை வெட்டி எடுத்துச்செல்வதற்கு உதவி செய்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆனால் முக்கிய குற்றவாளியான இரும்பு வியாபாரி தலைமறைவாகிவிட்டார். அவரை போலீஸார் தேடி வருகின்றனர். இதற்காக தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர். பாலம் இருந்த இடத்தில் சில பகுதிகளை விட்டு சென்று இருந்தனர். அவசரத்தில் வெட்டி எடுத்து சென்றதால் அவற்றை விட்டு சென்று இருப்பதாக போலீஸார் தெரிவித்தனர். இதற்கு முன்பு பீகாரில் 2022ம் ரோஹ்டாஸ் மாவட்டத்தில் 40 ஆண்டு பழமையான 500 கிலோ இரும்பு பாலத்தை திருடர்கள் ஒரே நாள் இரவில் வெட்டி எடுத்து சென்று விட்டது குறிப்பிடத்தக்கது.

விருதுநகர்: உரிமைத்தொகையை செலவு செய்ததால் கோபித்த மனைவி; விபரீத முடிவெடுத்த கணவரால் சோகம்!

விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு அருகேயுள்ள நெடுங்குளத்தைச் சேர்ந்தவர் ஈஸ்வரன். இவரின் மனைவி ராமு. இவரது வங்கிக் கணக்கில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு தமிழக அரசின் மகளிர் உரிமைத்தொகை ரூ.3 ஆயிரம் ... மேலும் பார்க்க

ராமநாதபுரம்: ஒரு தலை காதல் தொல்லை; உயிரை மாய்த்த மாணவி; மாணவரை கைதுசெய்ய குடும்பத்தினர் கோரிக்கை!

ராமநாதபுரம் மாவட்டம், தேவிபட்டினம் கோகுல் நகரைச் சேர்ந்த தம்பதியின் மகள், அங்குள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் அதே பள்ளியில் அதே வகுப்பில் படித்த மாணவர் ஒருவ... மேலும் பார்க்க

`மகனிடம் சேரப் போகிறோம்' - பெற்றோரின் உருக்கமான கடிதம் - சோகத்தில் ஆழ்ந்த கிராமம்!

சத்தீஸ்கர் மாநிலம், ஜான்ஜ்கிர்-சம்பா மாவட்டத்தில் உள்ளது தார்தேய் (Dhardei) கிராமம். இங்கு கிருஷ்ணா படேல் (48), அவர் மனைவி ரமா பாய் (47) ஆகியோர் வசித்து வந்தனர். இந்த நிலையில், இன்று காலை வீட்டு முற்ற... மேலும் பார்க்க

Taapsee Pannu: ``தினமும் 80 பாலியல் குற்றங்கள்... நாம் பழகிவிட்டோம்" - நடிகை டாப்ஸி பண்ணு ஆவேசம்!

பீகார் மாநிலம், பாட்னாவில் நீட் தேர்வுக்காகத் தயாராகி வந்த 17 வயது மாணவி மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரம், நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஜஹானாபாத் மாவட்டத்தைச் சேர்ந்த அந்த ம... மேலும் பார்க்க

நடத்தையில் சந்தேகம்: காதலர் தின விருந்தில் மனைவியைக் கொன்றுவிட்டு நாடகம் - கணவன் சிக்கியது எப்படி?

ஹரியானா மாநிலம், குருகிராம் பஹதுர்கர் பகுதியைச் சேர்ந்த மஹக் என்ற பெண் இரண்டு நாள்களுக்கு முன்பு காதலர் தின இரவில் மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்டார். மஹக் பிரபல தனியார் வங்கியில் பணியாற்றி வந்தா... மேலும் பார்க்க

சென்னை: கணவன், மனைவியைக் கொலை செய்த பக்கத்து வீட்டுக்காரர் - திருமணம் மீறிய உறவால் விபரீதம்

சென்னை கிழக்கு கடற்கரை சாலை, கானத்தூர் ரெட்டி குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் பார்த்திபன் என்கிற பார்த்தசாரதி(42). இவரின் மனைவி ஜமுனா(35). இவர்களது எதிர் வீட்டில் சுசில் (32), அவரின் மனைவி கிரிஜா(29) ஆகி... மேலும் பார்க்க